Headlines

யோஷிதவுக்கு எதிரான ஆதாரங்கள் அழிப்பு

சி.எஸ்.என். தொலைக்காட்சி மூலம் பொதுச்சொத்து துஷ்பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மகன் லெப்.யோஷித ராஜபக்ச உள்ளிட்டவர்களுக்கு எதிரான இணைய ஆதாரங்கள் சில வெளிநாட்டில் இருந்து செயற்படும் அடையாளம் தெரியாத நபர்களினால் அழிக்கப்பட்டுள்ளன. கனடா, அவுஸ்திரேலியாவில் இருந்தே இவ்வாறு அந்த சான்றுகள் அழிக்கப்பட்டுள்ளமை கணினி அவசர நிலைமைகள் தொடர்பிலான ஆய்வகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த நடவடிக்கைக்காக சி.எஸ்.என். நிறுவனத்தின் முன்னாள் தகவல் தொழில் நுட்ப முகாமையாளரின் மின்னஞ்சலே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் நிதிக் குற்றப்…

Read More

நாமல் ராஜபக்சவுக்கு எதிரான விசாரணைகள் தீவிரம்!

பாராளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு அரசாங்கத்துடன் வர்த்தக உடன்படிக்கைகளை செய்து 307 மில்லியன் ரூபாக்களை சம்பாதித்தமை தொடர்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிரான விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் கொழும்பு 5ல் உள்ள நாமல் ராஜபக்சவுக்கு சொந்தமானது என கருதப்படும் என்.ஆர். கண்சல்டன்ஸ் மற்றும் க்வர்ஸ் ஹோல்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் அமைந்துள்ள அலுவலகங்களில் இருந்து கடுவலை நீதிவானின் உத்தரவுக்கு அமைய 12 ஆவணங்களும் 4 கணினிகளும் புலனாய்வாளர்களால் கைப்பற்றப்பட்டு தீவிர விசாரணைகள்…

Read More

நல்லாட்சி அரசாங்கம் 48 பௌத்த பிக்குகளை கைது செய்துள்ளது!

நல்லாட்சி அரசாங்கம் இதுவரையில் 48 பௌத்த பிக்குகளை கைது செய்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முற்போக்கு தேசிய ஒன்றியத்தின் தலைவர் அனுருத்த பொல்கம்பொல குற்றம் சுமத்தியுள்ளார். தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நேற்று (10) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்… சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பௌத்த பிக்குகள் 48 பேரை நல்லாட்சி அரசாங்கம் கைது செய்துள்ளது. யானைக்…

Read More

தம்மாலோக தேரரின் பிணை மனு மீது இன்று விசாரணை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் உடுவே தம்மாலோக தேரரை பிணையில் விடுவிக்குமாறு கேட்டு முன்வைக்கப்பட்டுள்ள மனு இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. சட்ட ரீதியான அத்தாட்சிப் பத்திரம் இன்றி யானையொன்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் உடுவே தம்மாலோக தேரர் கைது செய்யப்பட்டுள்ள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். காலஞ் சென்ற அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரின் இறுதிக் கிரியைகளில் சந்தேகநபரான உடவே தம்மாலோக தேரரை சிறைச்சாலை அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் கலந்து கொள்ள அனுமதிக்குமாறும் கொழும்பு மேலதிக மஜிஸ்ட்ரேட் நீதவான்…

Read More

தங்கொட்டுவயில் எரியுண்ட நிலையில் ஐந்து சடலங்கள் கண்டுபிடிப்பு

சிலாபம் தங்ககொட்டுவ பகுதியில் எரியுண்ட நிலையில் ஐந்து சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று காலை இந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கொட்டுவ கொஸ்ஹேனவத்த என்ற இடத்தில் எரியுண்ட நிலையில் நின்ற வேன் ஒன்றுக்குள் இருந்தே இந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். பெரும்பாலும் வேனில் ஏற்பட்ட தீ காரணமாக இவர்கள் அனைவரும் எரியுண்டு இறந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

வீரவன்ச மகனின் வெளிநாட்டு விஜயம்: பாராளுமன்றத்தில் சர்ச்சை

– ப.பன்னீர்செல்வம், ஆர்.ராம் – 2014 ஆம் ஆண்டு   கொலம்பியாவில் நடைபெற்ற உலக நகர மகாநாட்டில்  விமல் வீரவன்சவின்  புதல்வரான விபூதி விஸ்வஜித் வீரவன்ஸ எந்த அடிப்படையில் பங்கேற்றார். தந்தை பாசம்   தான்  காரணமா என ஜே.வி.பி. பாராளுமன்ற  உறுப்பினரான நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வியெழுப்பியுள்ளார். இன்று வியாழக்கிழமை பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில் முற்பகல்  10.30க்கு  பாராளுமன்றம் கூடியது. இதன்போது  வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஜே.வி.பி.  எம்.பி.யான நளிந்த ஜயதிஸ்ஸ வீடமைப்பு,…

Read More

கொழும்பு நகரமண்டப பகுதியில் வாகன நெரிசல்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன் பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தால் கொழும்பு நகரமண்டப பகுதியில் வாகன நெரிசல்.

Read More

அத்ததஸ்ஸி தேரரின் மறைவுக்கு சீனத்தூதரகம் அனுதாபம்

அஸ்கிரியபீட மகாநாயக்க கலகம அத்ததஸ்ஸி தேரரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 13ம் திகதி இடம்பெறவுள்ளன. இதனையடுத்து அன்றைய தினத்தை உள்விவகார அமைச்சு தேசிய துக்க தினமாக அறிவித்துள்ளது. அன்னாரது இறுதிக் கிரியைகளை எதிர்வரும் 13ஆம் திகதி பிற்பகல் 02.30க்கு கண்டியிலுள்ள பொலிஸ் விளையாட்டரங்களில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கலகம அத்ததஸ்ஸி தேரர் காலமாகியதை அடுத்து கொழும்பிலுள்ள சீனத்தூதரகம் தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளது. சீனா – ஸ்ரீலங்காவிற்கு இடையில் பௌத்த தர்மத்திற்கு கலகம  அத்ததஸ்ஸி தேரரின் பங்களிப்பு அளப்பரியதாகும் என்று…

Read More

அரசியல் எதிர்காலமற்றவர்களே மஹிந்த அணியில்..!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் அனைவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் ஒன்றிணைந்துள்ள அதேவேளை  விமல் வீரவன்ச, பந்துல குணவர்தன போன்ற ஒரு சிலரே அரசியல் எதிர்காலம் அற்ற மக்களால் வெறுக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் புதிய கட்சியொன்றை அமைக்க வேண்டும் என முயற்சிக்கின்றனர் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்தார்.

Read More

என்னால் நாட்டையும், அணியையும் கைவிட முடியாது – மத்தியூஸ் உருக்கம்

லசித் மலிங்க காயம் காரணமாக தலைமைப்பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டதை தொடர்ந்து தன்னிடம் இருபதுக்கு 20 உலககிண்ணத்தொடரில் கலந்துகொள்ளும் அணியின் தலைமைப்பொறுப்பு வழங்கப்பட்டவேளை  தான்  அதற்கு மனதளவில் தயாராகயிருக்கவில்லை என மத்தியுஸ் கருத்து வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, அணியின் தலைமைப்பொறுப்பு என்னிடம் ஓப்படைக்கப்பட்டவேளை அதனை ஏற்பதற்கு நான் மனதளவில் தயாராகயிருக்கவில்லை, எனினும், கடந்த சில வருடங்களாக அணிக்கு தலைமைதாங்கிய அனுபவம் எனக்குள்ளது, ஆகவே, இது தற்போது எனக்கு சவாலாக அமையப்போகின்றது. தெரிவுக்குழுவினர் மலிங்கவுடன் இணைந்து கடந்த பல…

Read More

பிரபல எழுத்தாளரும், பன்னூலாசிரியருமான புன்னியாமீன் வபாத்

– ஜுனைட் எம்.பஹ்த் – இலங்கையின் பிரபல எழுத்தாளரும், பன்னூலாசிரியருமான புன்னியாமீன் (பீர் முஹம்மது புன்னியாமீன்) இன்று (10) காலை காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அண்மையில் சவூதி அரேபியா சென்றிருந்த இவர், இலங்கை திரும்பும் தறுவாயில் திடீர் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் மத்திய மலைநாட்டின் தலைநகர் கண்டி மாநகருக்கு அருகேயுள்ள உடதலவின்ன எனும் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் பீர் முகம்மது புன்னியாமீன். இவர் சைதா, உம்மா தம்பதியினரின் புதல்வர்….

Read More

2019இல் புதிய கல்வி முறை: பிரதமர்

கல்வித் துறையை மேம்படுத்த வேண்டுமாயின், பயிற்றப்பட்ட ஆசிரியர்களை பாடசாலைகளுக்குக் கொடுக்கவேண்டும் எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 2019இல் புதிய கல்வி முறைமையை ஏற்படுத்துவதற்கு முயற்சிப்போம் என்றும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில், நேற்று புதன்கிழமை (09) பிரதமரிடம் கேள்விகளைக் கேட்பதற்கான நேரத்தின்போது, எட்வட் குணசேகர எம்.பி கேட்டிருந்த கல்வி முறையில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் தொடர்பிலான கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பிரதமர் தொடர்ந்து பதிலளிக்கையில், கடந்த காலத்தில், பாடசாலைகளுக்கோ, இன்றேல் மாணவர்களுக்கோ, தேவைக்கேற்ப ஆசிரியர்கள்…

Read More