தொழில் முயற்சியாளர்களை பலப்படுத்தும் பொறுப்பு என்னுடையதாகும் –
அரசாங்கத்தின் நிகழ்ச்சித்திட்டங்களில் தேசிய மரபுரிமைகளைப் பாதுகாத்து தேசிய தொழின்முயற்சியாளர்களைப் பலப்படுத்தும் பொறுப்பை தனிப்பட்ட முறையில் தான் ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தேசிய தொழின்முயற்சியாளர்களைப் பலவீனப்படுத்தும் எந்தவொரு கொள்கையையும் அரசாங்கம் ஒருபோதும் நடைமுறைப்படுத்தாது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். அண்மையில் (11) பிற்பகல் கொழும்பில் நடைபெற்ற இளம் தொழின்முயற்சியாளர்கள் சங்கத்தின் 17 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். ஆயிரம் கருத்துக்கள் உருவாகும் இடத்தில் மிகவும் சரியான…
