Headlines

சவூதியில் இஃப்தார் நிகழ்ச்சிக்கு பிறகு இஸ்லாமியர்களாக மாறிய 220 பிலிப்பைன்ஸ் நாட்டினர் !

சவூதி மக்கா நகரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நிறுவனமொன்றில் பணியாற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 220 பணியாளர்கள் அங்குள்ள இஸ்லாமிய வழிகாட்டி மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இஃப்தார் நிகழ்ச்சிக்கு பிறகு இஸ்லாமிய மார்க்கத்தை தங்களின் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டனர்.

Read More

அம்பாறையில் ACMC, SLMC க்கு சவாலாக அமையும் -அமீர் அலி

வீரகேசரி வாரவெளியீட்டில் இன்று (28) பிரசுரமான சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சரான அகில இலங்கை மக்கள் காங்கிரஸை சேர்ந்த எம்.எஸ். அமீர் அலி அவர்களின் பேட்டியின் ஒரு சிறு பகுதியை கீழே தருகிறேன். அவர் தெரிவித்துள்ள கருத்து. கேள்வி: எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு சவாலாக அமையுமா? பதில் : பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸக்கு…

Read More

மஹிந்தவின் மறக்க முடியாத மூவரும்; றிஷாதின் உரிமைப் போராட்டமும்

ஏ.எச்.எம்.பூமுதீன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கும் இன்றைய நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. அரசியல் ரீதியான எதிரும்புதிருமான கருத்துக்கள் தற்போது தேர்தல் களத்தை சூடாக்கிக் கொண்டிருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பிள்ளையார் சூழி போட்டு இன்றைய அரசியல் களத்தை சூடாக்கியுள்ளார். நான் சாகும் வரை மறக்க முடியாதவர்கள் என மகிந்த ராஜபக்ச மூவரை குறிப்பிட்டு கடும் தொணியில் வெளிப்படுத்தியுள்ள கருத்து அரசியல் , சமுக மட்டத்தில் பிரபல்யம் அடைந்துள்ளதுடன் பாரிய சிந்தனையும்…

Read More

நீல் ஆம்ஸ்டர்டாம் இஸ்லாத்தை ஏற்ற உண்மை எத்தனை பேருக்கு தெரியும்?

மறக்க முடியுமா இந்த நபரை? நிலவில் முதன்முதலில் காலை வைத்த விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்டர்டாம் இஸ்லாத்தை ஏற்ற உண்மை எத்தனை பேருக்கு தெரியும்? இவர் நிலவில் கால்களை வைத்து புகழ்பெற்றது ஒருபுறம் இருந்தாலும் மறுமையில் சொர்க்கத்தில் காலை வைக்கும் பாக்கியத்தை எல்லாம் வல்ல இறைவன் இவருக்கும் நமக்கும் வழங்குவானாக! இன்ஷா அல்லாஹ்…

Read More

என் சமூகம் தோற்றுபோய்விடக் கூடாது! – றிஷாத் பதியுதீன்

-சனாஸ்முஹமத் – புத்தளத்தில் ரிஷாத் பதியுதீன் சிறுபான்மை சமூகத்தின் மத உரிமைகள் மறுதலிக்கப்பட்டதனால் தான் இலங்கையில் ஆட்சி மாற்றங்களை அந்த சமூகத்தினர் ஏற்படுத்த முனைந்தனர் என தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு தமது வாழ்வை அலங்கரிக்கும் எந்தெவொரு அரசியல்வாதிகளும் இறைவனிடத்திலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது என்றும் கூறினார். புத்தளம் உலுக்காப்பள்ளம் பிரதேசத்தில் இன்று இடம் பெற்ற பாதை அபிவிருத்தி பணிகளின் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக…

Read More

ஜார்ஜ் புஷ் இஸ்லாத்தை ஏற்றாரா?

சமூக வளைதளமான வாட்ஸ் அப் இல் ஜார்ஜ் புஷ் இஸ்லாத்தை ஏற்றுவிற்றார் என்கிற செய்தி அதிகளவில் பரவி வருகிறது. அந்த செய்தியை ஆங்கில பத்திரிகை வெளியிட்டது. அவர் இஸ்லாத்தை ஏற்றார் என செய்தி எந்தளவில் உண்மையென நம்பமுடியவில்லை.

Read More

குருடர் முன் பிச்சைகேட்டு செவிடன் காதில் சங்கு ஊதுகின்றஅரசியல் என்னிடம் இல்லை!

இன்று முஸ்லிம் மக்களுக்கு எதிராக எவ்வளவோ பிரச்சனைகள் வந்தும் முஸ்லிம் தலைமைத்துவங்களும் அரசியல்வாதிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் மௌனம் சாதிப்பதுஏன்? என்றுகேள்வி எழுப்பினார் வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன். சமகால அரசியல் நிகழ்வுகள் தொடர்பானமுக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று முசலியில் இடம் பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்! ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகள் போல் நானில்லை.ஊடகங்களில் படம் காட்டவும் பொய்யான பிரதேசவாதம் கூறி வாக்களித்த மக்களை…

Read More

ஞான­சார தேரரை உட­ன­டி­யாக கைது செய் – அஸ்வர்

நாட்டில் வாழும் சிறு­பான்மை இனத்த­வர்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றைகள் கட்­ட ­விழ்த்து விட்டு வேடிக்கை பார்ப்­ப­தற்கு அர­சாங்­கத்­திற்கு அரு­க­தை­யில்லை. ஆகை யால், தொடர்ச்­சி­யாக முஸ்­லிம்­களின் வண க்க வழி­பா­டு­க­ளுக்கு இடை­யூறு விளை­விக்கும் வகையில் செயற்­படும் கல­கொட அத்தே ஞான­சார தேரரை உட­ன­டி­யாக கைது செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் கோரிக்கை விடுத்தார். முன்னாள் ஆட்­சியின் போதே முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வன்­முறை கட்­ட­விழ்த்து விடப்­பட்­ட­தாக கூறி ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்­திய முஸ்­லிம்­க­ளுக்கு, இறு­தியில் ஏமாற்­றமே பதி­லாக கிடைத்­துள்­ளது….

Read More

பாராளுமன்றம் கலைக்கப்பட்டது BREAKING NEWS

பாராளுமன்றம் இன்று நள்ளிரவு  கலைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

Read More

கம்ப்யூட்டரில் விளையாட தந்தை கிரெடிட் கார்டில் பணம் எடுத்த 5 வயது சிறுவன்

இங்கிலாந்தில் நோர்த்தாம்டன் சயர் மாகாணத்தில் உள்ள கிங்ஸ்தோர்பி பகுதியை சேர்ந்தவர் அலிஸ்டெயர் லீத். இவர் ‘பேஸ்புக்’ இணைய தளத்தில் தனது கிரெடிட் கார்டு மற்றும் வங்கி கணக்குகளை பதிவு செய்திருந்தார். விளையாட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ள அதை அவர் பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில் அவரது 5 வயது மகன் அலெக்சாண்டர் தனது தந்தையின் கம்ப்யூட்டரில் ‘கேம்’ விளையாடிக்கொண்டிருந்தான். அந்த விளையாட்டில் அடுத்த நிலைக்கு செல்ல பணம் தேவைப்பட்டது. அதற்கு அவனிடம் பணம் இல்லை. உடனே தனது…

Read More

ஐ.தே.க.வின் மடியில் படுத்து சு.க தாலாட்டு கேட்காது: மஹிந்த

ஐக்கிய தேசியக் கட்சியின் மடியில் படுத்து தாலாட்டு கேட்கும் கட்சியாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இருக்கக் கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்றிரவு இரகசியமான முறையில் சந்தித்துவிட்டு மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வீட்டுக்குச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அங்கு கூடியிருந்த சு.க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கும் ஜனாதிபதி மைத்திரிக்கும் இடையில் நேற்று இரவு, சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. முதலமைச்சர் பிரசன்ன…

Read More

நாட்டில் ‘எயிட்ஸ்’ அதிகரிப்பு!

ஓரினச் சேர்க்கையாளர்களின் நடவடிக்கைகள், இலங்கையில் எச்.ஐ.வி எயிட்ஸ் நோய் அதிகரிப்புக்கு காரணமாக உள்ளதென விசேட வைத்திய நிபுணர் ஜானகி விதானபதிரண தெரிவித்தார். இளைஞர் விவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுகாதார மற்றும் நலனிருப்பு தொடர்பில் இளைஞர்களை தெளிவூட்டும் நடவடிக்கையொன்று, கொழும்பில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘பாதுகாப்பற்ற பாலியல் தொடர்புகளே எச்.ஐ.வி வைரஸ் தொற்றுக்கு அதிகளவில் காரணமாக அமைகின்றன. அத்துடன், அதிக வயதுடைய பெண்கள்,…

Read More