Headlines

பம்பலப்பிட்டியில் ஏற்பட்ட அதிர்வு தொடர்பாக ஆராய்வு

கொழும்பு பம்பலபிட்டி பகுதியை அண்மித்த பகுதியில் ஏற்பட்ட அதிர்வு , நிலநடுக்கமா என்பது தொடர்பில் கண்டறிவதற்கான ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பம்பலபிட்டி பகுதியில் நேற்று மாலை நான்கு மணியளவில் மூன்று தடவைகள் அதிர்வுகள் ஏற்பட்டதை தாம் உணர்ந்ததாக அப் பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர். அதிர்வுகள் உணரப்பட்டதை அடுத்து பாதுகாப்பான இடத்திற்கு தாம் சென்றதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர். இந்த விடயம் தொடர்பில் புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய…

Read More

மஹிந்த வந்தால் முஸ்லிம்களை பழிவாங்குவார் – ஹரீன்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, தனது வாய் காரணமாக மீண்டும் ஒரு முறை வாங்கிக் கட்டிக்கொள்ளப் போவதாக ஊவா மாகாண முதலமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மஹிந்த அரசியல் சண்டியராக மாற முயற்சித்து வருவதாகவும், தவறுதலாகவேனும் மஹிந்த ஆட்சிக்கு வந்தால், இந்த நாட்டில் உள்ள தமிழ் முஸ்லிம் முற்போக்கு கட்சிகளிடம் பழிவாங்குவார் என்பது நிச்சயம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மஹிந்த இல்லாமல் போயுள்ளதாகவும், மஹிந்தவுடன் இணைந்து கொள்ள மைத்திரிக்கு தார்மீக ரீதியான உரிமை கிடையாது எனவும் அவர்…

Read More

தேர்தல் விசாரணைப் பிரிவு நாளை முதல் இயக்கம்

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை இலக்கு வைத்து தேர்தல் விசாரணைப் பிரிவு இன்று முதல் இயங்க உள்ளதாக அறிவிக்கப்படுகிறது. தேர்தல் திணைக்களத்தில் இந்த பிரிவு நாளை முதல் இயங்க உள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மாவட்டச் செயலகங்களில் தேர்தல் விசாரணைப் பிரிவு இந்த மாதம் 6ம் திகதி முதல் இயங்க உள்ளது. தேர்தல் விசாரணைப் பிரிவுகள் பிரதேச செயலக மட்டத்தில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் அந்தந்த…

Read More

119 வயதிலும் நோன்பு நோற்கும் பெண்மணி !

அமெரிக்கா ஆர்கனாஸ் என்ற பகுதியில் வசிக்கும் கெர்ட்ரூட் வேவர் (117 வயது)என்ற பெண் தான் உலகில் அதிக வயதான பெண் என்று உலகில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், மலேசியாவில் கம்போங் ஜானின்,குவாலா நெராங் என்ற பகுதியில் வசிக்கும் புவான் அஹ்மது என்ற இந்த மூத்த வயோதிக பெண்ணின் வயது 119 என்று மலேசிய பதிவு இலாகாவால் வழங்கப்பட்ட ஆதாரம் கூறுகிறது. இந்த பெண் தனது எம்புன் (90)என்ற சகோதரியுடன் வசித்து வருகிறார். இவர் இத்தனை தள்ளாத வயதிலும்…

Read More

சுதந்திர கட்சி என்னை துரோகி என கவனித்தது

நவம்பர் 21ம் திகதி தொடக்கம் ஜனவரி 8ம் திகதிவரை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தன்னை ஒரு துரோகி என கவனித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து தான் வெளியேறியமை 37 வருடங்களாக செய்ய முடியாத நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை அதிகாரங்களை குறைக்கவே என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் தலைவர்கள் அதனை செய்யவில்லை எனினும் தனக்கு அதிகாரம் கிடைத்ததும் அதனை செய்து முடித்ததாக அவர் கூறினார். 19வது திருத்தச் சட்டத்தை எப்படியாவது…

Read More

தர்கா நகரில் நடந்தது என்ன..?

தர்கா நகரில் 30.06.2015 சிங்கள முஸ்லிம் இளைஞர்களிடையே கைகலப்பொன்று ஏற்பட்டுள்ளது இதனையடுத்து குறித்த பிரதேசத்தில் விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் விரைந்துசென்று பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தர்கா நகர் பிரதேசத்தில் கடந்தவருடம் இடம்பெற்ற கலவரத்தின் போது தீக்கிரையாக்கப்பட்ட மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலுக்கு அருகில் தராவீஹ் தொழுகை இடம்பெற்றபோது, சிங்கள இளைஞரொருவர் முச்சக்கர வண்டியின் வானொலி பொட்டியில் சத்தமாக பாடல் ஒலிபரப்பியுள்ளனர். இதனை நிறுத்துமாறு முஸ்லிம் இளைஞர்கள் தெரிவித்தும் நிறுத்தாமையினால் முஸ்லிம் இளைஞர்களினால் குறித்த நபர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்….

Read More

முஸ்லிம்களுக்கு எமது கட்சியில் இடமுண்டு -ஞான சார தேரர்

முஸ்லிம் ஒருவரும் தமிழர் ஒருவரும் புத்திஜீவியாக இருந்தால், எமது கட்சியில் அவர்களுக்கு இடமுண்டு என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். நாட்டில் 2500 வருட காலமாக பௌத்தர்களாக இருந்துகொண்டு, எமது உரிமைகளை புதையல் போன்று பாதுகாப்பதற்கு அறிஞர்களால் தான் முடிந்தது. இந்தப் பணிக்காக ஒரு முஸ்லிம் அல்லது தமிழ் புத்தஜீவி முன்வருவாராக இருந்தால் அவருக்கு எம்மிடத்தில் இடமுண்டு. எமது கட்சியில் பொது என்பது புத்திசாலிகளையே குறிப்பிடுகின்றது. நாகப் பாம்பு எமது சின்னமாக நாம்…

Read More

மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக 7000 முறைபாடுகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக இதுவரை, பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவு மற்றும் ஏனைய விசாரணை பிரிவுகளுக்கு சுமார் 7000 முறைபாடுகள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்கின்ற பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் 600 அதிகாரிகள் மாத்திரம் இருப்பதனால் குறித்த முறைபாடுகள் தொடர்பில் விரைவான விசாரணைகள் மேற்கொள்வதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த அரசாங்கத்தின் போது பாரிய அளவிலான நிதி மோசடிகள் மற்றும் வேறு சம்பவங்கள் தொடர்பில் முறைபாடுகள்…

Read More

21 வயது பலஸ்தின முஸ்லிம் பெண் மருத்துவர், உலக சாதனை!

உலகில் 21 வயதில் மருத்துவரான முதல்பெண்மணி பலஸ்தினத்தை சேர்ந்த சகோதரி இக்பால் ஆசாத். உலகில் இதுவரை யாரும் 21 வயதில் மருத்துவர் பட்டத்தை பெற வில்லை என்பதால் இது உலக சாதனையாகும்… இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள் சகோதரி ..

Read More

இஸ்ரேலின் கெடுபிடிக்கு மத்தியில் அக்ஸாவில் தொழுகையை நிறைவேற்றும் ஆயிரக்கணக்கான பாஸத்தீனர்கள். (படங்கள் இணைப்பு )

புனித ரமானை முன்னிட்டு ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ள முஸ்லிம்களின் முதலாவது கிப்லா மற்றும் மூன்றாவது புனித பள்ளிவாயல் அல் அக்ஸாவில் தொழுகையை நிறைவேற்றுவதில் பலஸ்தீனர்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இஸ்ரேல் கடும் கெடுபிடிகளையும், சட்டங்களையும் பிரகடப்படுத்திய போதும் அதை பொருட்படுத்தாத முஸ்லிம்கள் தமது தொழுகையை நிறைவேற்றுவதை காணக்கூடியதாக உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை சுமார் இரு இலட்சத்து 20 ஆயிரம் பலஸ்தீனர்கள் ஜும்மா தொழுகையை புனிய பள்ளிவாயலில் நிறைவேற்றியுள்ளனர். இத்தொகையுடைய மக்கள் வந்து தமது வணக்கத்தினை நிறைவு செய்தபோதும்,…

Read More

மீண்டும் மஹிந்த வந்தால் அழிவு நிச்சயம் – சம்பிக்க

சர்­வா­தி­கார பாதையில் இருந்து விடுபட்டு நாடு இன்று ஜன­நா­ய­கத்தின் பாதையில் பய­ணிக்க ஆரம்­பித்­துள்­ளது. மீண்டும் மஹிந்­தவின் கையில் நாட்டை கொடுத்தால் அழிவு நிச்­சயம் என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க எச்­ச­ரித்­துள்ளார். ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்னணியினர் முட்­டாள்­க­ளாக செயற்­படக்கூடாது எனவும் அவர் தெரி­வித்தார். ஐக்­கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஏற்­பட்­டி­ருக்கும் பிர­த­ம­ர் வேட்பாளருக்கான போட்டி குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறு­கையில், கடந்த பத்து ஆண்­டு­க­ளாக இந்த நாடு பல சவால்­க­ளுக்கு…

Read More

பொது பல சேனா ‘நாகபாம்பு சின்னத்தில்’ போட்டி?

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பொது பல சேனா, புதிய கட்சியான பொது ஜன பெரமுன [Bodu Jana Peramuna(BJP)] என்ற கட்சியில் ‘நாகபாம்பு சின்னத்தில்’ போட்டியிடவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சில தமது பெயர்களையும் , செயலாளர்களையும் மாற்றியுள்ளன. தேர்தல் செயலாளர் காரியாலயத்தின் தகவலின்படி, தேசப்பிரிய ஜாதிக்க பெரமுன என்ற பெயரில் இருந்த கட்சி சிறிலங்கா ஜாதிக்க பலய என பெயர்மாற்றம் செய்யபபட்டுள்ளது. அதன் செயலாளராக தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் குழுத்தலைவர் பியசிறி…

Read More