Headlines

ஐந்து மாவட்டங்களுக்கு மீண்டும் மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு மீண்டும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, நுவரெலியா, கேகாலை, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் குறித்த பிரதேசங்களில் மண்மேடு சரிந்து விழும் அபாயம் உள்ளதோடு, நிலச்சரிவு ஏற்படும் சாத்தியமும் உள்ளதாக ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை பதுளை மாவட்டத்தில் கடந்த சில…

Read More

மஹிந்தவிடம் விசாரணை ஆரம்பம்

தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகியுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்க தொலைக்காட்சி ஒன்றில் விளம்பரங்களை பிரசுரித்தமைக்கு கட்டணம் வழங்காமை தொடர்பிலேயே இவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. முன்னதாக அண்மையில் பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு அதிகாரிகள் மஹிந்த ராஜபக்சவின் வீட்டுக்கே சென்று வாக்கு மூலத்தைப் பெற்றனர். எனினும், இன்று அவரை ஆணைக்குழுவுக்கு வருமாறு அழைக்கப்பட்டதையடுத்தே அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு…

Read More

கண்ணீரை சிந்தவைக்கும் நேர்மை – சவூதி அரேபியாவில் நடைபெற்ற உண்மைச் சம்பவம்..!

சவூதி அரேபியாவைச் சார்ந்த ஒருவர் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார் அந்த நிறுவனத்தில் இருந்து விலகிவிட்ட பிறகு அந்த நிறுவனம் தவறுதலாக இவரின் வங்கி கணக்கிர்கு ஓரு இலட்சம் சவுதி ரியால்களை அனுப்பிவிட்டது (சுமார் 37 லட்சம் இலங்கை  ரூபாய்) தனது கணக்கில் ஒரு இலட்சம் ரியால் வந்ததை கண்ட அந்த மனிதர் அது தமக்கு உரியதல்ல என்பதை உறுதி படுத்தியதும் அந்த பணத்தை வங்கி கணக்கிலிருந்து விடுவித்து உரிய நிறுவனத்தை தேடி சென்று ஒப்படைத்தார்…

Read More

சவூதி அரேபியாவில் நடைபெற்ற பரிதாப சம்பவம்

உன்னை பிடிக்கவில்லை” என்று கூறிய மகளை அடித்துக்கொன்ற தந்தையின் வெறிச்செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவின் ஈத் அல் ஆதா நகரை சேர்ந்த சிறுமி யாராவின் (7) தந்தைக்கும், தாய்க்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர். இந்நிலையில், நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட அறிவுரையின் பேரில் யாரா தனது தந்தையுடன் கடந்த 3 மாதங்களாக வசித்து வருகிறார். இந்நிலையில் தந்தை, யாராவைப் பார்த்து உனக்கு என்னைப்பிடித்துள்ளதா, என்மேல் அன்பு உள்ளதா என்று கேட்டுள்ளார். அதற்கு யாரவோ எனக்கு…

Read More

இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

– பழுலுல்லாஹ் பர்ஹான் – கடந்த 12 வருடங்களாக காத்தான்குடியிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் பல்வேறு வகையான சமூகசேவைகளில் ஈடுபட்டு வரும் இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டுக் கழகம் இரத்ததான முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இரத்தப் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்துள்ள இவ் இரத்ததான முகாம் எதிர்வரும் 18.10.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் மதியம் 1.00 மணி வரை காத்தான்குடி-06 பிரதான வீதியில் அமைந்துள்ள…

Read More

முஸ்லிம் ஒருவரின் படுகொலை மிகவும் துரதிஷ்டவசமானது -மோடி

– சாகுல் ஹமீட் – இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை கருத்து தெரிவித்துள்ளார். அதில், தாத்ரி சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது. இது போன்ற சம்பவங்களை அரசு ஒருபோதும் ஆதரிக்காது. இதனை அரசு எதிர்க்கிறது. பா.ஜ.,வும் சரி, அரசும் சரி, நானும் சரி இந்த போலி மதவாதத்தை எதிர்க்கிறோம். எதிர்க்கட்சிகள் இதனை வேண்டுமென்றே பிரச்னையாக்க முயற்சிக்கின்றன. பாக்., பாடகர் குலாம் அலி விவகாரம் சர்ச்சை ஆக்கப்பட்டது வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மாட்டிறைச்சி உட்கொண்டதாக…

Read More

நாடாளுமன்றில் வாக்கெடுப்புக்கள் இலத்திரனியல் முறையில்

நாடாளுமன்றில் நடத்தப்படும் வாக்கெடுப்புக்களை இலத்திரனியல் முறையில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நாடாளுமன்றில் மேற்கொள்ளப்பட உள்ள வாக்கெடுக்களை இலத்திரனியல் முறையில் முன்னெடுக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பிலான நிலையியற் கட்டளையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்றின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்காக நாடாளுமன்றின் ஒலி கட்டமைப்பில் மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது. தற்போது நாடாளுமன்றில் காணப்படும் ஒலி கட்டமைப்பு 15 ஆண்டுகள் பழமையானது என தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றில் சட்டப்…

Read More

பிரணாப் முகர்ஜி பங்கேற்ற விழாவில் பாலஸ்தீன மாணவர்கள் போராட்டம்

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தனது ஜோர்டான் பயணத்தை முடித்துக்கொண்டு ஒரு நாள் பயணமாக பாலஸ்தீன நாட்டுக்கு சென்றார். அங்கு அபுதிஸ் நகரில் அமைந்துள்ள அல் குத்ஸ் பல்கலைக்கழகத்தில், அந்த நாட்டின் பிரதமர் ரமி ஹமதல்லா தலைமையில் நேற்று நடந்த விழாவில் அவருக்கு, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அத்துடன் அவர் ‘அமைதி வீரர்‘ என்று கவுரவிக்கப்பட்டார். இந்த விழாவில் பேசிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, “மத்திய கிழக்கு பிராந்தியத்தில், அமைதியும், ஸ்திரத்தன்மையும் நிலவ வேண்டும் என்பதுதான்…

Read More

பிரியா விடைகொடுக்கும் பயணத்தின்போது!

– அபூ உமர் அன்வாறி, BA மதனி – கால மாற்றங்கள் ஒரு முஸ்லிமின் வாழ்வில் அதிகம் செல்வாக்கு செலுத்தக் கூடியதாக இருக்கிறது. ஒருவர் குளிருக்கும், வெப்பத்துக்கும் தகுதியான ஆடைகள், உணவுகளை தெரிவு செய்வது போல், தனது வாழ்வின் முடிவுக்கான ஆயத்தங்களை எப்போதும் சரிவர செய்து கொள்ள வேண்டும். மரணத்துக்கான காரணிகள் வேறுபடலாம், அதை அடைந்தே தீர வேண்டும் என்பது அல்லாஹவின் நியதி. ஆகவே இவ்வாறு செய்யும் போது, அவன் வெற்றியடைகின்றான். காலத்தின் மாற்றத்தை அவன் முன்…

Read More

மறந்து போனது முன்னைய பகை!

தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களான ஹரின் பெர்ணான்டோ மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் தங்கள் முன்னைய பகையை மறந்து கூடிக்குலாவியுள்ளனர். கடந்த ஆண்டின் ஜுலை மாதம் நடைபெற்ற தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்ட அப்போதைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமேல்மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ ஆகியோர் விவாதம் சூடுபிடித்த நிலையில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டிருந்தனர். இதன் காரணமாக இருவருக்கும் இடையில் கடுமையான தனிப்பட்ட…

Read More

ஆசியா பசுபிக் முஸ்லிம் தலைவர்களின், மாநாட்டில் றிஸ்வி முப்தி (படங்கள்)

ஆசியா பசுபிக் முஸ்லிம் தலைவர்களின் மாநாட்டில் பங்கேற்றுள்ள றிஸ்வி முப்தி வெளிநாட்டு பிரமுகர்களுடன் கலந்துரையாடுவதை படங்களில் காண்கிறீர்கள்.

Read More

பாரிய மோசடி : மஹிந்தவிடம் நாளை விசாரணை

பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு நாளை காலை 09.00 மணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்துள்ளார்.vk

Read More