Headlines

ரயிலில் பிச்சை எடுப்பது தடைசெய்யப்படுகிறது!

ரயில்களில் பிச்சை எடுப்பது எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் தடை செய்யப்படவுள்ளது. ரயில் பெட்டிகள், ரெயில் நிலையங்கள் மற்றும் உப ரயில் நிலையங்களில் பிச்சை எடுப்பவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்படுவார்கள் என இலங்கை ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் பயணிகளிடம் இருந்து கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

Read More

வைத்தியசாலையில் பணியில் இருந்த மருத்துவர் மரணம்!

சிலாபம் வைத்தியசாலையில் சேவையாற்றி வந்த பெண் மருத்துவர் ஒருவர் திடீரென சுகவீனமுற்று அதே வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். கல்கிஸ்சை பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட 25 வயதான நக்ஷலா ரஷ்டீன் என்ற இளம் பெண் மருத்துவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரது பெற்றோர் சவூதி அரேபியாவில் வசித்து வருகின்றனர். இந்த மருத்துவர் சிலாபம் வைத்தியசாலையின் 8வது பிரிவில் கடமையில் ஈடுபட்டிருந்த போது நேற்று பிற்பகல் 3 மணியளவில் திடீரென சுகவீனமுற்றுள்ளார். இதனையடுத்து ஏனைய மருத்துவர்கள்…

Read More

2017க்கு முன்னர் அனைவருக்கும் புதிய அடையாள அட்டைகள்

2017ம் ஆண்டு முடிவடைவதற்கு முன்னர் நாட்டின் உள்ள அனைவருக்கும் புதிய தேசிய அடையாள அட்டைகளை விநியோகம் செய்யப்படவுள்ளன. இந்த அடையாள அட்டைகளுக்கு புதிய இலக்கங்களும் வழங்கப்படவுள்ளன. இந்தநிலையில் புதிய அடையாள அட்டை விநியோகிக்கப்பட்ட பின்னர் இரண்டு அடையாள அட்டைகளை வைத்திருக்கும் செயற்பாடுகளுக்கு முடிவு ஏற்படுத்தப்படும். புதிய அடையாள அட்டைகள் இலத்திரனியல் முறையில் தயாரிக்கப்படவுள்ளன.

Read More

வெள்ளவத்தையில் தீ!

வெள்ளவத்தை – இராமகிருஷ்ண மிஷன் சந்தியில் உள்ள மூன்று மாடி கட்டடத்தில் தீ பரவியுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த தீக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

ஜனாதிபதி மைத்திரி எச்சரிக்கை!

தற்போதைய அரசில் உள்ள குற்றச்செயல்கள் புரிவாராயின் கடுமையான சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார். நேற்று ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெற்ற பல்கலைக்கழக பேராசிரியர்களுடனான சந்திப்பில் வைத்தே அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

Read More

ரஷ்ய அதிபர் புதினின் மிரட்டலை அமெரிக்கா எதிர்த்து நிற்கவேண்டும்: ஹிலாரி கிளிண்டன்

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசை பதவியில் இருந்து இறக்கும் நோக்கத்தில் அவரது அதிருப்தியாளர்கள் தொடங்கிய போராட்டம், உள்நாட்டுப் போராக உருவெடுத்தது. 4 ஆண்டுகளாக இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. சிரியா மற்றும் ஈராக்கில் தனி நாட்டை உருவாக்கும் நோக்கில் ஈடுப்பட்டு வரும் ஐ.எஸ். களை ஒழித்துக்கட்டும் நோக்கத்தில் அமெரிக்க கூட்டுப் படைகள் சிரியாவில் விமானத் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த பிரச்சனையில் முக்கிய திருப்பமாக சிரிய அதிபர் அசாத்தின் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யா…

Read More

தேவாலய ஆலோசனைக் கூட்டத்தில் மகனை அடித்துக்கொன்ற பெற்றோர் கைது

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ‘வேர்ட் ஆப் லைப்’ தேவாலயத்தின் ஆலோசனைக் கூட்டத்தில், பெற்ற மகனை அடித்தே கொன்ற குற்றத்திற்காக பெற்றொர் கைது செய்யப்பட்டுள்ளனர். புரூஸ் லியோனார்டு (65) மற்றும் அவரது மனைவி டெபோரா (59) இருவரும் சேர்ந்து தமது மகன்கள் லூகாஸ் லியோனார்டு(19) மற்றும் கிறிஸ்டோபர் (17) ஆகியோரை தேவாலய ஆலோசனைக் கூட்டத்தின்போது கடுமையாகத் தாக்கியதாகத் தெரியவந்துள்ளது. இதில் மூத்த மகன் லூகாஸ் உயிரை இழந்தார். மேலும் கவலைக்கிடமான நிலையில் இளைய மகன் கிறிஸ்டோபர் இப்பகுதி மருத்துவமனையில்…

Read More

கூட்டமைப்பினரிடம் காட்டுங்கள்! அவர்கள் சந்தோஷப்படுவார்கள்! – பிள்ளையான்

என்னை நன்றாக படம் எடுங்கள். எடுத்துக்கொண்டு சென்று ரீ.என்.ஏ.யிடம் (தமிழ் தேசிய கூட்டமைப்பு) அதனைக் காட்டுங்கள். அவர்கள் சந்தோஷப்படுவர் என முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்  (பிள்ளையான்) நேற்று நீதிமன்ற வளாகத்தில் வைத்து குறிப்பிட்டார். முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் ஜோஸப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கடந்த ஞாயிறன்று மாலை கைது செய்யப்பட்ட பிள்ளையான் நேற்று நீதிமன்ற வளாகத்திற்கு வந்தபோதே மேற்கண்டவாறு ஊடகவியலாளர்களிடம் கூறினார். பிள்ளையான் நேற்று பிற்பகல் 1.00…

Read More

கெஹெலியவும் விசாரணை குழுவின் முன் ஆஜரானார்!

முன்னாள் அமைச்சரும் கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹலிய ரம்புக்வெல்ல, மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முன்னிலையில் ஆஜரானார். இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதியும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்க தொலைக்காட்சி ஒன்றில் விளம்பரங்களை பிரசுரித்தமைக்கு கட்டணம் வழங்காமை தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக வருகை தந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

சுசில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை

பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரே­ம­ஜ­யந்த வாக்குமூலம் வழங்குவதங்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு வருகை தந்துள்ளார். கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் அர­சாங்க தொலைக்­காட்சி ஒன்றில் விளம்­ப­ரங்­களை பிர­சு­ரித்­த­மைக்கு கட்­டணம் வழங்­காமை தொடர்­பி­லேயே இவ­ரிடம் வாக்­கு­மூலம் பதிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

வெலே சுதா மரண தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு!

பாரியளவிலான போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக கூறி கைது செய்யப்பட்ட வெலே சுதா எனப்படும் கம்பொல வித்தான சமந்தகுமார மரண தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளார். நேற்று கொழும்பு மேல் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட வெலே சுதாவுக்கு நீதிவான் பிரித்தி பத்மன் சூரசேன மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Read More

வெளிநாடுகளில் 599 இலங்கையர்கள் உயிரிழப்பு

இலங்கையர்கள் 599 பேர் கடந்த ஆண்டு வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அறிவித்துள்ளது. இதில் 103 பேர் விபத்துக்களில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக 12 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 31 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதோடு 386 பேர் நோய்கள் காரணமாக உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் 2014 ஆம் ஆண்டின் செயற்பாட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு வெளிநாடுகளில் தொழில் செய்யும்போது உயிரிழந்த இலங்கையர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு நஷ்டஈடு பெற்றுக் கொடுப்பதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது….

Read More