Headlines

கொண்டயாவின் அண்ணனே குற்றவாளி?

கொட்டாதெனிய சிறுமி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த கொண்டயாவின் சகோதரர் சமன் ஜயந்தவின் மரபணு, சிறுமியின் மரபணுவுடன் ஒத்திசைவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மினுவாங்கொட நீதிமன்றில் இன்று பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர். சேயா சிறுமியின் சடலத்திலிருந்து மீட்கப்பட்ட மரபணுவுடன் இந்த கொண்டயாவின் சகோதரரது மரபணு ஒத்திசைவதாகக் குறிப்பிட்டுள்ளனர். சேயாவின் தந்தையின் மரபணுவும் பரிசோதனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

பொத்துவில் ஜலால்தீன் சதுக்கத்தில் 22 மீனவர்கள் கைது (படங்கள்)

– எம்.ஏ. தாஜகான் – பொத்துவில் ஜலால்தீன் சதுக்கத்தில் சட்டவிரோதமான முறையில் அத்துமீறி கரைவலையில் மீன்பிடித்து வரும் குற்றச்சாட்டின் பேரில் 22 மீனவர்கள் பொத்துவில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு நீதி மன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளனர். பொத்துவில் ஜலால்தீன் சதுக்க கரையோரத்தில் அனுமதிப்பத்திரமின்றி மேற்கொள்ளப்பட்டு வரும் கரையோர மீன்பிடித்தலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக கடற்றொழில் தினைக்களத்தின் அதிகாரிகள் இன்று(14)சுற்றிவளைப்பை மேற்கொண்டபொழுதே ஒரு தொகுதி மீனவர்கள் பொத்துவில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர்.  சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்து வரும் குற்றச்சாட்டில்…

Read More

ஆசியா மற்றும் பசுபிக் உலக நாடுகளின் முஸ்லிம் தலைவர்களுக்கான மாநாடு

– இக்பால் அலி – துருக்கி நாட்டு பிரதமர் அலுவலகத்தின் கலாசார விவகார தலைமை அலுவலகத்தின் ஏற்பாட்டில் ஆசியா மற்றும் பசுபிக் உலக நாடுகளின் முஸ்லிம் தலைவர்களுக்கான மாநாடு 13 ஆம் திகதி முதல் 16 வரை துருக்கி இஸ்தாம்பூல் நகரில் நடைபெறுகின்றது. இந்நிகழ்வில் இலங்கையிலிருந்து விஜயம் செய்து முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ ஹலீம் மற்றும் அமைச்சரின் அந்தரங்கச் செயலாளர் எம். எச். ஏ. பாஹீம் ஆகியோர்கள் கலந்து…

Read More

24 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 24 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்துக்கொண்டிருந்த 24 இந்திய மீனவர்களை நேற்று இலங்கை கடற்படையினர்  தலைமன்னார் கடற்பகுதியில் வைத்து கைதுசெய்தனர். தமிழக மீனவர்களின் 4 படகுகளையும் கைப்பற்றிய பொலிஸார்,  அவர்களை நேற்று மன்னார் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே, எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

சேயாவின் தந்தை, கொண்டையாவின் சகோதரனின் இரத்தமாதிரி அறிக்கை இன்று நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும்

கொட்டதெனியாவ சிறுமி சேயா செதவ்மியின் படுகொலை தொடர்பில் குறித்த சிறுமியின் தந்தையின் இரத்தமாதிரி அறிக்கையும் கைது செய்யப்பட்டுள்ள கொண்டையாவின் சகோதரனின் இரத்தமாதிரி  அறிக்கையும் இன்று மினுவன்கொடை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

அஷ்ரப் நகரிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் குறித்து, கவனம் செலுத்துமாறு கோரிக்கை

ஒலுவில் அஷ்ரப் நகரிலிருந்து 2011ம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் ஐ தே கட்சி தலைமையிலான இந்த ஆட்சியிலும் மீண்டும் அதே நகரில் மீள் குடியேற்றப்படாமல் தட்டழிந்து திரிவது கவலை தருவதாகும் என உலமா கட்சி தெரிவித்தள்ளது. இது பற்றி அக்கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் மௌலவி  தெரிவித்துள்ளதாவது, பல வருடங்களாக ஒலுவில் அஷ்ரப் நகரில் வாழ்ந்த முஸ்லிம்கள் இராணுவ முகாம் அமைக்கப்போவதாக கூறி 2011ம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த வெளியேற்றத்தை அப்போதே பகிரங்கமாக…

Read More

நாங்கள் குற்றவாளிகள் அல்ல, பிணையில் செல்ல அனுமதியுங்கள் : சந்தேக நபர்கள் கோரிக்கை

நாங்கள் குற்றவாளிகள் அல்ல எங்களை பிணையில் செல்ல அனுமதியுங்கள் என புங்குடுதீவு மாணவியின் கொலை சந்தேக நபர்கள் நீதவானிடம் கோரிக்கை விடுத்து இருந்தனர். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டது. அதன் போது ஒன்பது சந்தேக நபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர். அதன் போது நீதவான் சந்தேக நபர்களிடம் ஏதாவது சொல்ல விரும்புகின்றீர்களா ? என கேட்டே போதே அவர்கள் அவ்வாறு கோரிக்கை விடுத்து இருந்தனர்….

Read More

எம்.பி.க்களின் கொலைகைள விசாரிக்க குழு – ரணில்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் விசாரணையை மேற்கொள்வதற்கு, நாடாளுமன்றக் குழு ஒன்றை அமைக்கத் தீர்மானித்துள்ளதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தபோது கொல்லப்பட்ட தி.மகேஸ்வரன், நடராஜா ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம், த.மு. தஸநாயக்க, ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே ஆகியோரின் கொலைச்சம்பவங்கள் தொடர்பிலேயே விசாரணை இடம்பெறவுள்ளது. நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் வரப்பிரசாதங்கள் சட்டத்தின் கீழேயே இந்தக் குழுவை அமைத்து, விசாரணை மேற்கொள்ள உள்ளதாக பிரதமர் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சாட்சியாளர்கள் மற்றும் பொலிஸ்…

Read More

“வெலே சுதா”விற்கு மரண தண்டனை!

பாரிய போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக கூறி கைதுசெய்யப்பட்ட வெலே சுதா எனப்படும் சமந்த குமாரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(14)  இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. பிரபல போதைப் பொருள் கடத்தல் வர்த்தகர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள “வெலே சுதா” எனப்படும் கம்பல விதானகே சமந்த என்பவர் தொடர்பில் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று(14) அறிவிக்கப்படவுள்ளது. சட்ட மா அதிபரினால் வெலே சுதாவிற்கு எதிராக இக்குறித்த வழக்குத் தொடரப்பட்டிருந்தது. மிகவும் குறுகிய…

Read More

வெலே சுதா தொடர்பான ஒரு வழக்கின் தீர்ப்பு இன்று

பிரபல போதைப் பொருள் வர்த்தகர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள வெலே சுதா எனப்படும் கம்பல விதானகே சமந்த என்பவர் தொடர்பில் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது. சட்ட மா அதிபரினால் வெலே சுதாவிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. மிகவும் குறுகிய காலத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் முடிவுக்கு வந்துள்ளது. இந்த வழக்குத் தொடர்பான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என கொழும்பு உயர் நீதிமன்ற நீதவான் பத்மன் சூரசேன அறிவித்துள்ளார். 2008ம் அண்டு டிசம்பர்…

Read More

இலங்கையில் பத்திரிகை சுயதணிக்கை குறித்து ஆராய்வு

இலங்கை பத்திரிகை முறைப்பாட்டாளர் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் விசேட சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர். இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது. இதன்போது சுயதணிக்கையை வலுப்படுத்தல் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது சிங்கள, ஆங்கில மற்றும் தமிழ் பத்திரிகைகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்

Read More

புதிய போக்குவரத்து முறை இடைநிறுத்தம்

கொழும்பு –  இராஜகிரிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட புதிய போக்குவரத்து முறை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக இதற்கான பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டபோது அது தோல்வியடைந்தமையே இதற்கான காரணமாகும்.

Read More