Headlines

ரயிலில் பிச்சை எடுப்பது தடைசெய்யப்படுகிறது!




ரயில்களில் பிச்சை எடுப்பது எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் தடை செய்யப்படவுள்ளது. ரயில் பெட்டிகள், ரெயில் நிலையங்கள் மற்றும் உப ரயில் நிலையங்களில் பிச்சை எடுப்பவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்படுவார்கள் என இலங்கை ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் பயணிகளிடம் இருந்து கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *