Headlines

மென்பொருள் உருவாக்க போட்டியில் எல்.ஹஸீப் முஹம்மத் இரண்டாமிடம்

– எஸ்.எம்.எம்.றம்ஸான் – கொழும்பு விசாகா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, INFOV 2015 ICT மற்றும் தொழில்நுட்ப தொடரில் பாட ரீதியான கணினி மென்பொருள் உருவாக்க போட்டியில், அகில இலங்கை ரீதியில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவரான எல்.ஹஸீப் முஹம்மத் 02ஆம் இடத்தை பெற்றுக்கொண்டார். . இப்போட்டி கொழும்பு விசாக்கா கல்லூரி மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றபோது, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களையும் சான்றிதழ்களையும் கணினிப் பொதிகளையும்…

Read More

ACMC 8 ஆசனங்களை பெறும் – அமீன் ஹாஜியார்

பாறுக் சிகான் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் எமது கட்சி நாடளாவிய ரீதியாக 8 ஆசனங்களை வெல்லும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ் மாவட்ட அமைப்பாளர் தேசமான்ய அல்ஹாஜ் எம்.ஏ.சி.எம் அமீன் ஹாஜியார் தெரிவித்தார். நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக வினவியபோது மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் , இவ்; ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் எமது கட்சிக்கு முக்கியமானது.இதில் 8 ஆசனங்களை கட்சி பெறுவதில் எவ்வித…

Read More

அம்பாறையில் றிஷாதுக்கு வெற்றி கிடைக்கும் – அதாவுல்லாஹ்

ஏ.எச்.எம்.பூமுதீன் அம்பாறை மாவட்டத்தில் அ.இ.ம.கா வெற்றி பெறும். அந்தக் கட்சிக்கு ஒரு ஆசனம் உறுதி என முன்னாள் அமைச்சரும் தே.கா தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் தெரிவித்துள்ளார். தேசிய காங்கிரஸின் மருதமுனை மத்திய குழுவினரை அக்கரைப்பற்றில் வைத்து சந்தித்து உரையாடும்போதே மேற்கண்ட கருத்தை உறுதியாக தெரிவித்துள்ளார். அ.இ.ம.கா அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் என்பது இறுதிவரை எதிர்பார்க்கப்படாத ஒரு விடயம். எனினும், அக்கட்சி தனித்து களமிறங்கியுள்ளமை மு.கா.வுக்கு உண்மையில் சவால்தான். அ.இ.ம.கா அம்பாறையில் போட்டியிடுவதை நாங்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என…

Read More

மஹிந்தவின் கூட்டத்திற்கு சென்று திரும்பும்போது, கஞ்சா ஏற்றி வருகின்றனர் – அநுரகுமார

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலக்கி கொள்ள வேண்டும் என ஜே.வீ.பி கோரியுள்ளது. ஜே.வீ.பியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க மாத்தறை – வெலிகமயில் அண்மையில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். மஹிந்த ராஜபக்சவின் அநுராதப்புர கூட்டத்திற்கு சென்று திரும்பும்போது. கஞ்சாவை ஏற்றி வருகின்றனர். மஹிபால ஹேரத்தின் கஞ்சா போதைப் பொருட்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டன. இவ்வாறான சந்தர்பத்தில் தமது வாகனத்தை…

Read More

கல்லாறு விபத்தில் உயிரிழந்தவர்களின் சுவன வாழ்வுக்கு பிரார்த்திகின்றேன்

இன்று கல்லாற்று பாலத்தில் இடம் பெற்ற வாகன விபத்து குறித்து கேள்வியுற்றதும்,தாம் பெரும் அதிர்சியடைந்துள்ளதாகவும், மரணமானவர்களின் சுவன வாழ்வுக்கு பிரார்த்திப்பதகாவும் தெரிவித்துள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன் காயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் துரித சுகத்திற்குமாக பிரார்த்திப்பதாகவும் கூறினார். இன்று காலை புத்தளத்திலிருந்த எலுவலங்குளம் ஊடாக பெரியமடுவிக்கு பயணித்துக்கொண்டிருந்த போது ஏற்பபட்ட விபத்தினால் ஏற்பட்ட உயிர் இழப்புக்கள் மற்றும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்கள் பெரும் கவலையடைந்துள்ள நிலையில் அவர்களுக்கு அல்லாஹவின் அருளும்,மன ஆறுதலும்…

Read More

தகுதியான வேட்பாளருக்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச்செய்யுங்கள்

இந்த மாவட்ட மக்களது வாழ்வுக்காக போராடக் கூடிய சிறந்த வீர தளபதிகளே இன்று தேவைப்படுவதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் அனைத்து மக்களுக்கும் வாழ்வதற்கு தேவையான சூழலை உருவாக்கித் தர காத்திருக்கும் ரணில் விக்ரம சிங்கவின் தலைமையிலான ஆட்சியொன்றினை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அமைப்போம் எனவும் அழைப்புவிடுத்தார். பாராளுமன்றத்தேர்தலில் ஜக்கிய தேசிய முன்னணியின் யாணைச் சின்னத்தில் போட்யிடும் வேட்பாளர்களை ஆதரித்து செவ்வாய்க்கிழமை மாலை கிண்ணியா நகர சபை மைதானத்தில்…

Read More

மகிந்தவின், குடியுரிமை இரத்தாகும் – ஜனாதிபதி

மகிந்த ராஜபக்ச பிரதமராக இருந்த போது சுனாமி அனர்த்தம் காரணமா வடக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் போர்வையில் விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், மகிந்த ராஜபக்சவின் குடியுரிமையை இரத்துச் செய்ய முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குருணாகலில் இன்று நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால…

Read More

அஷ்ரப் கண்ட கனவு இன்று றிஷாத் பதியுதீன் ஊடாக நனவாகவுள்ளது -இஸ்மாயில்

எம்.சி.அன்சார் நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் அந்த மாற்றத்தினை முஸ்லிம் மக்களால் முழுமையாக சுவைக்க முடியவில்லை. குறுகிய அரசியல் வட்டத்துக்குள் கட்டண்டு மீள முடியாமல் தவிக்கின்றனர். அவற்றிலிருந்து சமூகத்தை விடுவிப்பதே எனது முதற்பணியாகும். என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தருமான கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தெரிவித்தார். எதிர்வருகின்ற பொதுத்தேர்தல் தொடர்பில் அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை(19) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு கூறினார். முஸ்லிம் சமூகம் தனித்துவமாக இருந்து…

Read More

மாளிகாவத்தை பள்ளிவாசல் மீதான தாக்குதல்

மாளிகாவத்தையில் நேற்றிரவு ஏற்பட்ட பதற்ற நிலைமை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக பார்வையாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதன்போது வெளியே வந்த தரப்பினர் வெளியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சிலவற்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் சில வாகனங்கள் சேதமடைந்தன இதனால் மாளிகாவத்தையில் பதற்ற நிலை ஏற்பட்டதாகவும் உடனடியாக பொலிஸ், அதிரடிப்படை, இராணுவ வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது இந்நிலையிவ் மாளிகாவத்தை…

Read More

தபால் மூல வாக்களிப்பிற்கு மகிந்த விண்ணப்பிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தபால் மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் செயலக தெரிவித்துள்ளன. மகிந்த ராஜபக்சவின் பெயர் அம்பாந்தோட்டை மாவட்ட வாக்காளர் இடாப்பிலேயே இருப்பதனால்அவரின் வாக்கு உரிமை அந்த மாவட்டத்திலேயே இருக்கின்றது. இந்தநிலையில் முன்னாள் ஜனாதிபதி குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதனால் தனக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுக்குமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி மகிந்த ராஜபக்சவுக்கு தபால் மூல வாக்களிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதாக…

Read More

நாளை ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் -ACJU உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டுள்ளதால் நாளை ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

Read More

கடமை தவறாத தொழிலாளி!

சவுதி அரேபிய உள்ளிட்ட பல நாடுகளில் வெப்பம் வாட்டி வதைக்கும் சூழலில் தான் ரமளான் மாதம் வருகை தந்தது. வாட்டி வதைக்கும் வெப்பத்திர்கு இடையேயும் கடுமையான பணிகளுக்கு இடையேயும் ஒரு துப்பரவு தொழிலாளி இறைவனுக்கு கடமைதவறாதவராக காட்சி தருவதை தான் படம் விளக்குகிறது

Read More