Headlines

ஐதேக பதவிகளில் மாற்றம்

பாராளுமன்ற உறுப்பினர் தயா கமகே ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். இன்று கூடியுள்ள அக் கட்சியின் செயற்குழுவிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவராக ஹரீன் பிரணாந்து நியமிக்கப்பட்டுள்ளதோடு, லக்வனிதா முன்னணியின் தலைவராக பிரதி அமைச்சர் அனோமா கமகே தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு மேலதிகமாக தேசிய…

Read More

ஒன்லைன் மூலம் தெரிவியுங்கள்

நல்லிணக்க பங்காளர்கள், நிபுணர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோரின் நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கருத்துக்களை ஒன்லைனில் சமர்பிப்பதற்காக நல்லிணக்க பொறிமுறைகளுக்கான ஆலோசனை வழங்கும் விஷேட செயலணி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளது. காணாமற் போனோர் அலுவலகம், உண்மை, நீதி, நல்லிணக்கம் மற்றும் மீள்-நிகழாமைக்கான ஆணைக்குழு, சட்டப் பொறிமுறைகள், இழப்பீட்டிற்கான அலுவலகம் என்பனவற்றை உள்ளடக்கியதாக நல்லிணக்க பொறிமுறைகளை அமைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், கருத்துக்களை சமர்ப்பிக்க்கும் வகையில் இவ் ஆலோசனை கோரல் செயன்முறை இணையத்தளத்திற்கான சமர்ப்பணப் படிவத்தினை மும்மொழிகளிலும்…

Read More

காணி அமைச்சராக ஜோன் அமரதுங்க சத்திய பிரமாணம்

காணி அமைச்சராக ஜோன் அமரதுங்க இன்று சத்திய பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார். காணி அமைச்சராக கடமையாற்றிய எம்.கே.டி.எஸ்.குணவர்தன இறையடி எய்தியதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக ஜோன் அமரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சராகவும் ஜோன் அமரதுங்க கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

இரத்தக் கறை படிந்தவர்கள் தேங்காய் உடைப்பது சாபக்கேடு

‘நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக இன்று சிலர், சிதறு தேங்காய் உடைக்கின்றனர். நேர்மையானவர்களே சிதறு தேங்காய் உடைக்க வேண்டும். மாறாக இரத்தக்கறை படிந்தவர்கள் தேங்காய்களை உடைப்பதால் எதுவும் நடந்துவிடுவதில்லை’ என பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். நாவலப்பிட்டியவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார். இங்கு மேலும் தெரிவித்த அவர், ‘பல ஊடகவியலாளர்களின் கொலைக்கு காரணமானவர்கள், பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் பொன்சேகாவை சிறையில் தள்ளியவர்கள் தேங்காய்களை உடைப்பதால்…

Read More

திஸ்ஸவிற்கு எதிரான விசாரணை சட்டமா அதிபரிடம் ஒப்படைப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிரான விசாரணை சட்ட மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க இந்த தகவலை நாடாளுமன்றில் நேற்று (25) தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் போலி ஆவணம் தயாரித்ததாக திஸ்ஸ அத்தநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி அந்த அறிக்கையை சட்டமா அதிபரிடம் ஒப்படைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். போலி ஆவணம் தயாரிப்பு…

Read More

மைத்திரியை ஐ.தே.க பாதுகாக்கும்

– எம்.எம் மின்ஹாஜ் – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் முட்டாள்கள் அல்ல. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவர்களினால் பாதுகாக்க முடியாவிடின் ஐக்கிய தேசியக் கட்சியினரான நாம் அவரை பாதுாப்போம் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை எஸ்.டப்ளியூ.ஆர் .டீ.  பண்டாரநாயக்க ஆரம்பித்தது ஒரு குடும்பத்தினருக்கு சொந்தம் கொண்டாடுவதற்கு அல்ல. மைத்திரிபால சிறிசேன விவசாயி என்பதனால்  அவரின் தலைமையின் கீழ் செயற்பட…

Read More

முஜிபுர் ரஹ்மான் எம்.பி. குவைட் பயணம்

கொழும்பு மாவட்ட மாவட்ட அபிவித்தி குழு இணைத் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளருமான பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நேற்று (11) பிற்பகல் குவைட் நாட்டுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். குவைட் நாட்டின் ஐக்கிய தேசியக் கட்சி கிளையினரின் அழைப்பின் பேரிலேயே இரு நாள் விஜயமொன்றிணை மேற்கொண்டிருக்கும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. நாளைய தினம் நாடு திரும்பவுள்ளார். இந்த விஜயத்தின்போது குவைட் ஐக்கிய தேசியக் கட்சியினர் ஏற்பாடு செய்துள்ள கட்சியின் விரிவாக்கள் நடவடிக்கைகள்…

Read More

குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்ட பின்­னரே யோஷித கைது செய்­யப்­பட்­டுள்ளார்

ஜன­நா­யக விரோத செயற்­பா­டு­களில் ஈடு­பட்ட குற்­ற­வா­ளி­களை கைது செய்­யவே மக்கள் எமக்கு இரு­முறை ஆணை வழங்­கி­னார்கள். கடந்த ஒரு­வ­ருட கால­மாக நிதி மோசடி விசா­ரணை பிரி­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­களில் யோஷித ராஜபக் ஷ குற்­ற­வா­ளி­யாக இனம்­கா­ணப்­பட்ட பின்­னரே அவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார் என ஐக்­கிய தேசியக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மஹ்ரூப் தெரி­வித்தார். தோப்­பூரில் நடை­பெற்ற மக்கள் சந்­திப்­பொன்றில் யோஷித ராஜபக்ஷவின் கைது தொடர்­பாக கருத்­து­வெ­ளி­யிடும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அங்கு தொடர்ந்து உரை­யாற்­றிய…

Read More

சரத் பொன்சேகா சத்தியப்பிரமாணம்

தேசிய ஜன­நா­யக கட்­சியின் தலை­வ­ரான பீல்ட் ­மார்ஷல் சரத் பொன்­சேகா நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்­து­கொண்டார் நேற்று (10) நாடா­ளு­மன்ற அமர்­வுகள் ஆரம்­ப­மான போது சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய முன்­னி­லையில் சத்­தி­யப்­பி­ர­மாணஞ் செய்து கொண்டார். மறைந்த ஐக்­கிய தேசியக் கட்­சியின் தேசியப் பட்­டியல் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.கே.ஏ.டீ.எஸ்.குண­வர்­த­ன வின் மறை­வை­ய­டுத்து ஏற்­பட்ட வெற்­றி­டத்­துக்கே சரத்  பொன்சேகா  நியமிக்கப்பட்டார்.

Read More

ஜனநாயகக் கட்சி, ஐ.தே.க.வுடன் நாளை இணையும்

பீல்ட் மார்ஷல்  பொன்சேகாவின் தலைமையின் கீழ் உள்ள ஜனநாயகக் கட்சி, நாளை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் என்று வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

Read More

1988, 1989 சம்பவங்களை விவாதிக்க தயார்

1988 மற்றும் 1989ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விவாதிக்கத் தயார் என, எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அநுர குமார திஸாநாயக்க, நேற்று(02) யோசனை தெரிவித்தார். 1988, 1989ஆம் ஆண்டு காலப்பகுதியில், மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டதாக தெரிவித்த அநுர குமார திஸாநாயக்க, அதே காலப்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்ட வன்முறைகள் குறித்து விவாதிக்க தயார் என்றால், தாமும் விவாதம் மேற்கொள்ள தயார் என குறிப்பிட்டார்….

Read More

தனியார் துறைக்கும் ஓய்வூதியம்: ஹர்ஷ டி சில்வா

அரச ஊழியர்களை போன்றே தனியார் ஊழியர்களுக்கும் ஓய்வூதியத்தை வழங்கும் நடைமுறையொன்றை மிக விரைவில் தயாரிக்கவுள்ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் நேற்று கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். பொருளாதாரத்திற்கு இயந்திரமாக செயற்படுகின்றவர்கள் மக்கள் எனவும், சமூக, வர்த்தக மற்றும் பொருளாதார ரீதியில் அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Read More