Headlines

வரவு செலவுத்திட்டம் குறித்து திருப்தி அடைய முடியாது! பாலித

அண்மையில் சமர்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் தொடர்பில் திருப்தி அடைய முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டத்தை நன்மையானது என்றோ தீமையானது என்றோ கூற முடியாது. எனினும் மக்கள் எதிர்பார்த்த சலுகைகள் நிவாரணங்கள் இதில் கிடைக்கவில்லை. வெளிநாட்டு முதலீடுகளுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு முதலீடுகளை கிரமமான முறையில் மேற்கொள்ள வழியமைக்கப்பட வேண்டும். பெருந்தோட்டத்துறை சார் சமூகம் எதிர்பார்த்த நன்மைகளும் நலன்களும் கிடைக்கவில்லை. இதனை விடவும்…

Read More

எனக்கு விசுவாசமானவர்களை ஆளும்கட்சியில் இணைத்துக் கொள்ள முயற்சி!– மஹிந்த

எனக்கு விசுவாசமான தரப்பினர் மீது வழக்குகளைத் தொடர்ந்து அவர்களை அச்சுறுத்தி ஆளும் கட்சியில் இணைத்துக் கொள்ள முயற்சிக்கப்படுகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும், இனி வரும் காலங்களில் எதிர்க்கட்சியில் இருக்கும் எவரும் ஆளும்கட்சியில் இணைந்து கொள்ள மாட்டார்கள். ஆளும் கட்சியுடன் இணைந்து கொள்ளும் தரப்பினர் ஏற்கனவே இணைந்து கொண்டுள்ளனர். அரசாங்கம் வெறுமனே அவர் இணைகின்றார். இவர் இணைகின்றார் என பிரசாரம் செய்கின்றது. இனி எதிர்க்கட்சியின் எவரும் ஆளும் கட்சிக்கு ஆதரவளிக்கப் போவதில்லை. எனக்கு…

Read More

அரசியல் எதிர்காலம் பற்றி விரைவில் தீர்மானிக்கப்படும்! திஸ்ஸ அத்தநாயக்க

அரசியல் எதிர்கலம் பற்றி விரைவில் தீர்மானிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். வெகு விரைவில் பொருத்தமான தருணத்தில் அரசியல் ரீதியான தீர்மானம் ஒன்று எடுக்கப்படும். ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தேசிய அரசாங்கம் என்ற பெயரில் மக்களை பிழையாக வழி நடத்துகின்றன. இரண்டு கட்சிகளினதும் இந்த நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும். எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலிலிருந்தே இந்த இரண்டு கட்சிகளுக்கு எதிராகவும் செயற்படத்…

Read More

வரவு செலவுத்திட்டத்தை ஆதரித்து பதவியை காத்துக் கொள்ளுங்கள்: ஜோன் அமரதுங்க

அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை பாதுகாத்து கொள்ளுமாறு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதியாக 15 மில்லியன் ரூபாவை வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இது குறித்து சிந்தித்தாவது வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக கை உயர்ந்துங்கள். வரவு செலவுத்…

Read More

அரசாங்கத்துடன் இணையவுள்ள நான்கு ஐ.ம.சு.மு. எம்.பி.க்கள்

தேசிய அர­சாங்­கத்தின் வரவு – செலவுத் திட்ட பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்து அர­சாங்­கத்­துடன் இணைந்துகொள்­வ­தற்கு ஐக்கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் நான்கு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தீர்­மா­னித்­துள்­ள­னர். இந்த நான்கு பாரா­­­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தவி­சா­ளரும் அமைச்­ச­ரு­மான மலிக்­ ச­ம­ரவிக்கி­ர­ம­வுடன் இது­தொ­டர்­பாக இரண்டு சுற்று பேச்­சு­வார்த்தைகளை நடத்­தி­யுள்­ள­னர். ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் இந்த நான்கு பாரா­­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளது தீர்­மா­னம் குறித்து அமைச்சர் மலிக் சம­ர­விக்கி­ரம பிர­­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்­க­விடம் அறி­வித்­துள்­ளார்.ஜ­னா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அனு­ம­தியின்…

Read More

மீண்டும் அரசியலில் ஈடுபட விரும்புகின்றேன் – திஸ்ஸ

மீண்டும் அரசியலில் ஈடுபட எதிர்பார்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கண்டி அஸ்கிரி விஹாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட போது இதனைத் தெரிவித்துள்ளார். மீண்டும் செயற்பாட்டு அரசியலில் ஈடுபட விரும்புகின்றேன். பல்வேறு அரசியல் தீர்மானங்கள் காரணமாக அரசியல் ரீதியாக பல்வேறு நெருக்குதல்களை எதிர்நோக்க நேரிட்டது. எனினும், அரசியலில் ஈடுபடவே விரும்புகின்றேன் என திஸ்ஸ அத்தநாயக்க ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Read More

புத்திஜீவிகள் குழுக்களை அமைப்பதற்கு தீர்மானம்

ஐ.நா.தீர்மானத்துக்கு அமைய பொறுப்பு கூறல் மற்றும் உண்­மையை கண்­ட­றியும் பொறி­முறையை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது குறித்து கருத்­துக்­களை கேட்­ட­றிந்து கொள்­வ­தற்­கான புத்­தி­ஜீ­விகள் குழுக்­களை அமைப்­ப­தற்கு சர்­வ­கட்சி தலை­வர்கள் கூட்டத்தில் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் 30 ஆவது கூட்­டத்­தொ­டரில் மேற்­கொள்­ளப்­பட்ட இலங்கை தொடர்­பி­லான தீர்­மானம் நாட்டின் இறை­யாண்­மைக்கு உட்­பட்டே நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­மென ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சுட்­டிக்­காட்­டினார். நாட்டின் கௌரவம் பாது­காக்­கப்­படும் வகையில் ஐ.நா. பரிந்­து­ரைகள் தொடர்­பி­லான தீர்­மா­னங்கள் எடுக்­கப்­ப­டு­மெ­னவும் ஜனா­தி­பதி குறிப்­பிட்டார். ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள்…

Read More

அவன்ட் கார்ட் கப்பல் தொடர்பில் தவறிழைக்கப்பட்டுள்ளது!– ரவி

அவன்ட் கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பில் தவறிழைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். அவன்ட்கார்ட் ஆயுதக் கப்பல் தொடர்பில் தவறிழைக்கப்பட்டுள்ளது.இந்த விடயம் குறித்து சிலர் காலையில் ஒன்று சொல்கின்றார்கள். மாலையில் வேறும் ஒன்றை சொல்கின்றார்கள். எனினும், இந்தக் கருத்துக்கள் அரசாங்கத்தின் நிலைப்பாடாக கருதப்படக் கூடாது என ரவி கருணநயாக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, அவன்ட் கார்ட் விவகாரத்தில் தவறில்லை என சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன…

Read More

தூண்டிவிட்டு கொலை செய்ய முயற்சிக்கின்றீர்களா? பிரதமர் கேள்வி

மாணவர்களை தூண்டிவிட்டு அவர்களை கொலை செய்ய திட்டமிடுகின்றீர்களா? கடந்த காலங்களில் உங்கள் ஆட்சியில் கண்ட “இரத்த வெள்ளம்” போதாதா? என மஹிந்த ஆதரவு அணியினரை நோக்கி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பாடநெறி மாணவர்கள் பொலிஸாரால் தாக்குதலுக்குள்ளானது தொடர்பில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதன்போது சபைக்குள் மஹிந்த ராஜபக்ச ஆதரவு அணியின் எதிர்ப்பு கோஷங்களுடன் பதாதைகளை ஏந்தியவண்ணம் சபையில் எழுந்து நின்று கூச்சலிட்டனர். இச் சந்தர்ப்பத்தின்…

Read More

வசதியற்ற குடும்பங்களுக்கு உதவுங்கள்: அமைச்சர் றிஷாத் வேண்டுகோள்

புத்தளம்,திருகோணமலை,அநுராதபுரம் மாவட்டங்களில் வீடுகளை நிர்மாணித்துக்கொள்ள வசதிகளற்ற குடும்பங்களுக்கு தேவைான இலவச சீமெந்து பக்கட்டுகளை பெற்றுக்கொடுக்க ஆவணம் செய்யுமாறு விடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சஜித் பிரேமதாசாவிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிஷாத் பதியுதீன் வேண்டுகோள் கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பட்டியலில் பாராளுமன்றம் வந்துள்ள அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் றஹ்மான், திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ருப், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற…

Read More

கட்சி ஆதரவாளர்கள் அதிருப்தி! புத்திக்க பத்திரண

பதவி வழங்கப்படாமை குறித்து என்னை விடவும் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் அதிகளவில் வருந்துவதாக மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண தெரிவித்துள்ளார். எனது அரசியல் வாழ்க்கையில் பதவிகள் பட்டங்கள் வழங்கப்படாமை எனக்குப் பிரச்சினையில்லை. பதவி கிடைக்கவில்லை என்று மாத்தறை மாவட்ட கட்சி ஆதரவாளர்களே கவலைப்படுகின்றனர். 2009ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி நெருக்கடியான தருணத்தை எதிர்நோக்கிய காலத்தில் கட்சி உறுப்பினர்களை பாதுகாத்து பச்சைக் கொடியின் கீழ் ஆதரவாளர்களை அணி திரட்டியிருந்தேன். எனது இந்த தலைமைத்துவம்…

Read More

சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்வு கூறல் பிழையானது: நிதி அமைச்சர்

சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்வு கூறல் பிழையானது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். முதலீட்டு மேம்பாட்டு நிகழ்வு ஒன்றிற்காக லண்டனுக்கு விஜயம் செய்துள்ள ரவி கருணாநாயக்க சர்வதேச ஊடகமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறித்து சர்வதேச நாணய நிதியம் எதிர்வு கூறல் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டில் இலங்கை 5 முதல் 5.5 வீத பொருளாதார வளர்ச்சியை எட்டும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்வு கூறியுள்ளது. எனினும்…

Read More