Headlines

தனியார் துறைக்கும் ஓய்வூதியம்: ஹர்ஷ டி சில்வா




அரச ஊழியர்களை போன்றே தனியார் ஊழியர்களுக்கும் ஓய்வூதியத்தை வழங்கும் நடைமுறையொன்றை மிக விரைவில் தயாரிக்கவுள்ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் நேற்று கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பொருளாதாரத்திற்கு இயந்திரமாக செயற்படுகின்றவர்கள் மக்கள் எனவும், சமூக, வர்த்தக மற்றும் பொருளாதார ரீதியில் அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *