Headlines

எம்.பி. பதவியைத் துறக்கத் தயார் – பாலித

நாடாளுமன்றத்தின் கௌரவம் பாதுகாக்கப்படுமாக இருந்தால் ஆயுள் முழுமைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறக்கத் தயாராக இருப்பதாக பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற மோதல் சம்பவம் குறித்து ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட பிரதியமைச்சர் பாலித, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறித்து உண்மையான தகவல்களை அறிந்தவர் அமைச்சர் சரத் பொன்சேகா என்ற வகையில் அவரது உரையை கூட்டு எதிர்க்கட்சியினர் செவிமடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் கெட்ட…

Read More

நாடாளுமன்றில் இன்றும் குழப்பம்

அழகன் கனகராஜ் நாடாளுமன்றத்தில், இன்று வெள்ளிக்கிழமையும் உறுப்பினர்களால் குழப்பநிலை ஏற்பட்டதை அடுத்து, சபாநாயகரால், சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (05) இடம்பெற்ற, நிதியமைச்சினால் கொண்டுவரப்பட்ட 5 கோடியே 50 இலட்சம் ரூபாய்க்கான குறைநிரப்பு மீதான வாக்கெடுப்பின் முடிவுகள் போலியானவை என, இன்றைய தினத்திலும் வாத விவாதங்கள் ஏற்பட்ட நிலையிலேயே, சபை அமர்வு, 5 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Read More

நாடாளுமன்ற அறிக்கை கசிவு!

நாடாளுமன்றத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் (4) இடம்பெற்ற வன்முறை தொடர்பான விசாரணை அறிக்கை ஊடகங்களுக்கு முன்கூட்டியே வெளியிட்டப்பட்டமை குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது. சபாநாயகர் கரு ஜெயசூரிய இதனை அறிவித்துள்ளார். நாடாளுமன்ற சபையில் இந்த அறிக்கையை சமர்ப்பிக்கும் முன்னர் அதில் கூறப்பட்டிருந்த பரிந்துரைகள் ஊடகங்களின் மூலம் வெளியிடப்பட்டன. இந்தநிலையில் இது குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விடுத்தவேண்டுகோளை ஏற்றுக்கொண்ட சபாநாயகர், தாம் அந்த விடயத்தில் கவனம் செலுத்துவதாக குறிப்பிட்டார்.

Read More

பாராளுமன்ற கௌரவத்தை காப்பது சகல எம்.பி.க்களினதும் பொறுப்பாகும்

மேன்­மைப்­பொ­ருந்­திய பாரா­ளு­மன்­றத்தின் கௌர­வத்­தையும் பாரா­ளுமன்ற உறுப்­பி­ன­ருக்­கு­ரிய கௌர­வத்­தையும் பாது­காக்க வேண்­டி­யது பாரா­ளு­மன்­றத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் சகல பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­னதும் பொறுப்­பாகும் என ஜனா­தி­பதி மைத்திரிபால சிறிசேன தெரி­வித்தார். ஒரு முழு­மை­யான மனி­த­னிடம் இருக்க வேண்­டிய மிக முக்­கி­ய­மான பண்பு ஒழுக்­கமும் முதிர்ச்­சி­யு­மாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நேற்றுக் காலை ஹொரணை ரோயல் கல்­லூ­ரியின் புதிய கேட்போர் கூடத்தை மாண­வர்­க­ளிடம் கைய­ளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் மேன்­மை­பொ­ருந்­திய பாரா­ளு­மன்­றத்­திற்கு…

Read More

சந்தித் வீடு திரும்பினார்

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் (3) இடம்பெற்ற கைகலப்பின் போது தாக்குதலுக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்தித் நேற்று (4) சமரசிங்க சிகிச்சைகள் நிறைவடைந்து வீடு திரும்பியுள்ளார். முன்னாள் ஜனா­தி­ப­தியும், தற்­போ­தைய குரு­ணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­ப­க்ஷவின் இரா­ணு­வ பாது­காப்பு நீக்­கப்­பட்டமை தொடர்பில் மஹிந்த ஆதரவு அணி­யி­ன­ர் நேற்று பாராளுமன்றத்தில் எழுப்பிய சர்ச்சையையடுத்து அவர்களுக்கும் ஆளும் தரப்­புக்­கு­மி­டையே ஏற்­பட்ட வாய்த்த­ர்க்கம் திடீ­ரென…

Read More

பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்து சபாநாயகர் கண்டனம்!

பாராளுமன்றத்தில் நேற்று(03) நடைபெற்ற நடவடிக்கைகளானது பாராளுமன்றத்தின் உயரிய தன்மைக்கும் அபிமானத்துக்கும் பெரும் களங்கத்தினை ஏற்படுத்தியுள்ளது எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவர்களையும் தாம் வன்மையாக கண்டிப்பதாக சாபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று சபையில் அறிவித்தார். பாராளுமன்ற சபா மண்டபத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்கு பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தலைவர் தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்த சபாநாயகர் கருஜயசூரிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும்…

Read More

எம்.பி.க்கள் மூவரிடம் விசாரணை

நாடாளுமன்ற சபை அமர்வின் போது நேற்று செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரிடம், பொலிஸார் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர். கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினாலேயே மேற்படி வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. மோதலில் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தீப் சமரசிங்கவிடமும் விசாரணை நடத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

மஹிந்த ஆதரவாளர்களின் தாக்குதல்; சந்தித்துக்கு கழுத்தில் முறிவு

மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்களின் முரட்டுத்தனமான செயற்பாடுகள் காரணமாகவே நேற்றைய (3) நாடாளுமன்ற அமர்வு பிற்போடப்பட்டதாக ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். மகிந்தராஜபக்ஷவின் பாதுகாப்பு தொடர்பில் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகாநாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது அதனை அவர்களால் பொறுத்துக் கொண்டிருக்கமுடியவில்லை. இதன் காரணமாகவே அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்தினர். இதனை அடுத்து ஏற்பட்ட மோதலில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்சந்தித் சமரசிங்க காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது கழுத்தில் முறிவேற்பட்டதுடன், முகம் மற்றும் தலையிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இது மகிந்த…

Read More

மஹிந்தவால் தான் ஆட்சிக்கு வந்தோம், அவரை பாதுகாப்பது எமது கடமை : சபையில் பிரதமர்

மஹிந்த ராஜபக்ஷவினால் தான் நாம் ஆட்சிக்கு வந்தோம். எனவே அவரை பாதுகாக்க  வேண்டியது எமது கடப்பாடாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று  சபையில்  தெரிவித்தார். உலகில்  எந்தவொரு முன்னாள் ஜனாதிபதிகளுக்கும்  இராணுவ பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை.  ஆனால் மஹிந்த ராஜபக்ஷவின்  பாதுகாப்பு தொடர்பில் பேச்சு நடத்த அரசு தயார் என்றும் பிரதமர் சபையில் அறிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று  செவ்வாய்க்கிழமை தினேஷ் குணவர்தன எம்.பி.,  முன்னாள்   ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின்  இராணுவப் பாதுகாப்பு  நீக்கப்பட்டது தொடர்பில் பிரதமரிடம்…

Read More

மதத் தலைவர்களை இழிவுபடுத்தாமல் இருக்க புதிய சட்டம்?

மதத் தலைவர்களை இழிவுபடுத்துவதற்கு நாடாளுமன்ற வரப்பிரசாதங்களை பயன்படுத்த இடமளிக்காத வகையிலான புதிய சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது தொடர்பிலான உத்தேச சட்ட வரைவு பௌத்த சாசன மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால், சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் நேற்று (5) ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றின் விசேட வரப்பிராதங்களை பயன்படுத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்தவொரு மதத் தலைவர்களையும் இழிவுபடுத்த அவமரியாதை செய்ய இடமளிக்கக் கூடாது என நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் நாடாளுமன்றில்…

Read More

இன்று பிரதமர் விசேட உரை

பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 1.00 மணிக்கு கூடுவதோடு 2.00 மணிக்கு பின்னர் அரசியலமைப்பு சபையாக கூடும் என பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் தித்தவல தெரிவித்தார். அதேவேளை இன்றைய சபை அமர்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் தொடர்பாக விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாகவும் தெரிய வருகிறது. இன்றைய பாராளுமன்ற அமர்வு தொடர்பில் பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் தித்தவல மேலும் தெரிவிக்கையில், இன்று செவ்வாய்க்கிழமை 1.00 மணிக்கு ஆரம்பமாகும் பாராளுமன்ற…

Read More

அரசியலமைப்பு சபையின் முதலாவது அமர்வு நாளை

சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் நாளை (05) பிற்பகல் 2 மணிக்கு அரசியலமைப்பு சபையின் முதலாவது அமர்வு இடம்பெறவுள்ளது. புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்காக முழு பாராளுமன்றத்தையும் அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை ஏற்கனவே நிறைவேற்றப்பட்டது. இதற்கமைய நாளை(05) முதலாவது அமர்வு நடைபெறுகிறது. 2017ஆம் ஆண்டு இறுதிக்கு முன்னர் அரசியலமைப்பு மறுசீரமைப்பொன்றை உருவாக்கி அதனை  சர்வஜன வாக்கெடுப்புக்கு விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. விருப்பு வாக்கை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் முறையை மாற்றுதல், தேசிய பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை முன்வைக்கத்தக்க…

Read More