Headlines

எம்.பி.க்கள் மூவரிடம் விசாரணை




நாடாளுமன்ற சபை அமர்வின் போது நேற்று செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரிடம், பொலிஸார் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர்.

கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினாலேயே மேற்படி வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

மோதலில் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தீப் சமரசிங்கவிடமும் விசாரணை நடத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *