Headlines

சபையில் ஏற்பட்ட அமைதியின்மையால் பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு

சபையில் ஏற்பட்ட அமைதியின்மையால் பாரளுமன்றத்தை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்க சபாநாயகர் தீர்மானித்துள்ளார். வரவு செலவுத்திட்டம் தொடர்பிலான 2 புத்தகங்களை அரசாங்கம் சமர்ப்பித்துள்ளதாக, எதிர்க்கட்சி சுமத்திய குற்றச்சாட்டை அடுத்து சபையில் அமளி துமளி ஏற்பட்டுள்ளது. நிதியமைச்சர் கடந்த வௌ்ளிக்கிழமை (20) வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்கும் போது ஒரு புத்தகம் வெளியிடப்பட்டதுடன், இன்று (23) மீண்டும் மற்றுமொரு புத்தகம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால் எது சரியான புத்தகம் என பாரளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார். இரண்டு புத்தகங்களின்…

Read More

தேசிய அரசின் முதலாவது வரவு–செலவுத் திட்டம் (Live)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சியின் கன்னி, வரவு-செலவுத்திட்டம், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் தற்போது சமர்ப்பிக்கப்படுகின்றது. 04.22 PM – வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 15 நாட்களில் அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியும். 04.20 PM – இலங்கை பணம் வெளிநாடுகளில் உள்ளது. மீண்டும் நாட்டுக்குள் கொண்டு வரப்படும். 04.18 PM – எந்தவொரு வங்கி மூலமும் நாட்டில் முதலீடு செய்ய வெளிநாட்டவர்களுக்கு வாய்ப்பு. 04.16 PM – புதிய முதலீட்டு சட்டம் அறிமுகம். 04.13 PM – 500 வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் முதலீட்டாளர்களுக்கு 50 வீத வரி. 04.09 PM…

Read More

நல்லாட்சி அரசாங்கத்தின் கன்னி வரவு செலவுத்திட்டம் இன்று சமர்ப்பிப்பு

2016 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட முன்மொழிவு இன்று பிற்பகல் 2 மணியளவில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு – செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு நாளை ஆரம்பமாகவுள்ளதோடு, வாசிப்பு மீதான விவாதம் 9 நாட்கள் நடைபெறவுள்ளது. வரவு – செலவுத்திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு தொடர்பான வாக்கெடுப்பு டிசம்பர் 2ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதேவேளை வரவு – செலவுத்திட்டம் மீதான மூன்றாம் கட்ட வாசிப்பு எதிர்வரும் டிசம்பர் 3ஆம்…

Read More

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் நேரடியாக கேள்வி எழுப்ப சந்தர்ப்பம்

நாடாளும்னற உறுப்பினர்கள் பிரதமரிடம் நேரடியாக கேள்வி எழுப்ப சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது. எதிர்வரும் காலங்களில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமரிடம் நேரடியாக கேள்விகளை எழுப்ப முடியும் என தெரிவிக்கப்படுகிறது. இதன்படி பிரதி வியாழக்கிழமை தோறும் நாடாளுமன்ற அமர்வுகள் ஆம்பமாகி முதல் அரை மணித்தியாலயம் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு அறிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழக்கூடிய எந்தவொரு கேள்வியையும் பிரதமரிடம் கேட்க முடியும். முன்னதாக இந்தக் கேள்விகளை பிரதமர் அலுவலகத்திற்கு…

Read More

அமைச்சர் திலக் மாரப்பன அமைச்சுப் பதவியை ராஜினாமா BREAKINGNEWS

சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன தனது அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Read More

அவன்ட் கார்ட் கப்பல் தொடர்பில் தவறிழைக்கப்பட்டுள்ளது!– ரவி

அவன்ட் கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பில் தவறிழைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். அவன்ட்கார்ட் ஆயுதக் கப்பல் தொடர்பில் தவறிழைக்கப்பட்டுள்ளது.இந்த விடயம் குறித்து சிலர் காலையில் ஒன்று சொல்கின்றார்கள். மாலையில் வேறும் ஒன்றை சொல்கின்றார்கள். எனினும், இந்தக் கருத்துக்கள் அரசாங்கத்தின் நிலைப்பாடாக கருதப்படக் கூடாது என ரவி கருணநயாக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, அவன்ட் கார்ட் விவகாரத்தில் தவறில்லை என சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன…

Read More

கோத்தாவை கைது செய்ய முடியாது

ஐக்­கிய நாடுகள் சபையின் கலப்பு விசா­ர­ணையையும் சர்­வ­தேச நீதி­ப­தி­களையும் எதிர்ப்­ப தாக கூறிக் கொள்ளும் தேசப்­பற்­றாளர்கள் இலங்­கையில் நீதித்­துறைமீது நம்­பிக்­கை­யில்லை என்­கி­றார்கள். இதுவா இவர்­க­ளது தேசப்­பற்று என்று நீதி­ய­மைச்சர் விஜேய­தாஸ ராஜ­பக்ஷ நேற்று சபையில் கேள்வி எழுப்பினார். “எவன்கார்ட்” விவ­கா­ரத்தைப் பயன்­ப­டுத்தி கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவை கைதுசெய்ய முடி­யாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற எவன்கார்ட் தொடர்­பான சபை ஒத்­திவைப்பு வேளை பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே நீதி­ய­மைச்சர் விஜேய­தாஸ ராஜ­பக்…

Read More

பிரதமர் இன்று விசேட உரை

புதிய அரசாங்கத்தின் இடைக்கால பொருளாதார கொள்கை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று விசேட உரையாற்றவுள்ளார். தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சராகவே பிரதமர் உரையாற்றவுள்ளார். இந்த கொள்கைக்கமைய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவு திட்டம் தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நாட்டு நிலையான பொருளாதார வளர்ச்சி இலக்குகளை முழுமைபடுத்தும் தொழில்நுட்ப பாதைக்கு ஒரு ஆய்வாக இதனை கருத்திற்கொள்ள முடியும் என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Read More

அரசியலமைப்புச் சபை இன்று கூடுகின்றது

அரசியலமைப்புச் சபையின் மற்றுமொரு கூட்டம் சபாநாயகரின் தலைமையில் இன்று பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இதில் இதுவரை உறுப்பினர்கள் நியமிக்கப்படாத சுதந்திர ஆணையங்கள் சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

தூண்டிவிட்டு கொலை செய்ய முயற்சிக்கின்றீர்களா? பிரதமர் கேள்வி

மாணவர்களை தூண்டிவிட்டு அவர்களை கொலை செய்ய திட்டமிடுகின்றீர்களா? கடந்த காலங்களில் உங்கள் ஆட்சியில் கண்ட “இரத்த வெள்ளம்” போதாதா? என மஹிந்த ஆதரவு அணியினரை நோக்கி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பாடநெறி மாணவர்கள் பொலிஸாரால் தாக்குதலுக்குள்ளானது தொடர்பில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதன்போது சபைக்குள் மஹிந்த ராஜபக்ச ஆதரவு அணியின் எதிர்ப்பு கோஷங்களுடன் பதாதைகளை ஏந்தியவண்ணம் சபையில் எழுந்து நின்று கூச்சலிட்டனர். இச் சந்தர்ப்பத்தின்…

Read More

“திருட்டு பாஸ்போர்ட்” சபையில் விமலுக்கு கேலி

“திருட்டு பாஸ்போர்ட்”, “டபிள் பாஸ் போர்ட்” என சபையில் ஆளும் தரப்­பினர் கூச்­ச­லிட சபைக்குள் சிரித்­த­வாறு உள்நுழைந்தார் விமல் வீர­வன்ச எம்.பி.உயர் தேசிய கணக்­கியல் டிப்­ளோமா பாட­நெறி மாண­வர்கள் பொலி­ஸாரால் தாக்­கப்பட்ட விவ­காரம் தொடர்பில் நேற்று பாரா­ளு­மன்­றத்தில் சர்ச்சை இடம்­பெற்றுக் கொண்­டி­ருந்­தது. இதன்போதே சபைக்குள் விமல் வீர­வன்ச எம்.பி வந்தார். இவரை ஆளும் தரப்­பினர் மேற்­கண்­ட­வாறு கூச்­ச­லிட்டு ஆர­வா­ரத்­துடன் வர­வேற்­றுள்­ளனர். இந்த வர­வேற்பை விமல் வீர­வன்ச சிரிப்­புடன் ஏற்றுக் கொண்டு உள்ளே வந்தார்.தமது இருப்­பி­டத்தில் நின்று கொண்டு…

Read More

அதிகாரிகளை சட்டத்தின்முன் நிறுத்துங்கள்

நிரா­யுதபாணி­க­ளாக பேரணி நடத்­திய மாண­வர்கள் மீது தாக்­குதல் நடத்த உத்­த­ர­விட்ட பொலிஸ் அதி­கா­ரிகள் மற்றும் அத்­தாக்­கு­தலை தடுத்து நிறுத்தத் தவ­றிய உயர் பொலிஸ் அதி­கா­ரிகள் அனை­வரும் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட வேண்டும் என்று நேற்று சபையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன் வலியுறுத்தினார். அத்துடன் சட்­டத்தை நிலைநாட்ட வேண்­டி­ய­வர்­களே சட்­டத்தை மீறு­வதா நல்­லாட்­சியின் விளைவு என்றும் எதிர்க்­கட்சித் தலைவர் கேள்வி எழுப்­பினார்.பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை கொழும்பு வோர்ட் பிளேஸில் வைத்து உயர் தேசிய…

Read More