Headlines

கொழும்பில் தோற்றுநோய் ஏற்படும் ஆபத்து

கொழும்பு மாநகர் முழுவதும் குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளதோடு, பிரதான வீதிகள், வீடுகளுக்கருகில் துர்நாற்றம் வீசுகிறது. கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் மழை வெள்ளத்தாலும், மண்சரிவினாலும் மக்கள் நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில் கொழும்பு மாநகர மக்கள் குப்பை மலைகளால் பெரும் அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர். கொழும்பு மாநகர், ஒருகொடவத்தை, நவகம்புர, கொட்டாஞ்சேனை, மாளிகாவத்தை, புதுக்கடை, தெமட்டகொடை, பொரளை உட்பட கொழும்பு மாநகரின் பெரும்பாலான இடங்களில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன.  இதனால் அப்…

Read More

உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 71 ஆக அதிகரிப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 71ஆக உயர்ந்துள்ளது என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது. பாதுகாப்பான 497 தற்காலிக இடங்களில் 278,578 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறினார். எவ்வாறாயினும் இலங்கையை பாதிப்படையச் செய்திருந்த அசாதாரண காலநிலையில் சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். எவ்வாறாயினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும், மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவுகள் 24 மணி நேரமும்…

Read More

ஆறுகளில் நீர் மட்டங்கள் சாதாரண நிலையில்

கடந்த 24 மணி நேரத்திற்குள், அனைத்து ஆற்றுப் பகுதிகளிலும் உள்ள ஆறுகளில் நீர் வழமைபோன்று மாற்றமடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் கூறியுள்ளது. மலைநாட்டுப் பகுதிகளில் ஆற்று நீர் மட்டம் பெரும்பாலும் குறைந்துள்ளதாக அந்த திணைக்களத்தின் நீர்ப்பாசன இயக்குனர் பிரேமா ஹெட்டியாராச்சி கூறினார். எவ்வாறாயினும் ஆறுகளை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளநிலை தொடர்ந்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டின் அனைத்து நீர் நிலைகளிலும் நீர் மட்டம் சாதாரண நிலைக்கு திரும்பியுள்ளதாகவும், வான்கதவுகள் திறக்கப்படுவதை தவிர்த்து இருப்பதாகவும் பிரேமா ஹெட்டியாராச்சி கூறினார்.

Read More

நிவாரணம் வழங்க தனியாக வரவேண்டாம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களும் நிவாராண பொருட்களை எடுத்துகொண்டு தனிப்பட் ரீதியில் யாரும் வரவேண்டாம் என் பாதுகாப்பு தரப்பினர், பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். தனிப்பட்ட நபர்கள் மற்றும் குழுவால் முன்னெடுக்கப்படு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையில் சன நெரிசல் ஏற்படுவதாகவும் நிவாரணம் வழங்கும் நடவடிக்கையை முகாமைத்துவம் செய்வது கடினமாக உள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர். நிவாரண பொருடகளை வழங்குவோர், பாதுகாப்பு பிரிவினர் மற்றும் பிரதேச செயலாளர் பிரிவுகளின் ஊடாக ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள மத்திய நிலையங்களில் நிவாரண பொருட்களை ஒப்படைக்குமாறு கேட்டுகொள்ளப்படுகின்றனர்.

Read More

களனி கங்கையின் நீர்மட்டம் குறைகிறது

களனி கங்கையின் நீர்மட்டம் குறைந்து வருவதாகத் தெரிவித்துள்ள நீர்ப்பாசனத் திணைக்களம், இன்னும் மூன்று நாட்களில் கங்கையின் நீர்மட்டம் சாதாரண நிலைக்கு வரும் எனத் தெரிவித்துள்ளது. எனினும், வெள்ளம் வடிவதற்கு சில நாட்களாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Read More

சீரற்ற காலநிலை : அமெரிக்கா, பாக்., ,ஆஸி., சீனா நாடுகளும் உதவி

நாடாளவிய ரீதியில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களுக்கு உடனடி மனிதாபிமான நிவாரண உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்கா,   பாகிஸ்தான், சீனா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளும் முன்வந்துள்ளன. ஏற்கனவே ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் தமது நிவாரணப் பொருட்களை கப்பல்கள் மற்றும் விமானங்கள்  ஊடாக இன்று நாட்டுக்கு அப்பிவைத்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமெரிக்கா 50ஆயிரம் டொலர் நிதியை வழங்குதற்கு முன்வந்துள்ளது. அதேநேரம் பாகிஸ்தான், அவுஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தேவையான உதவிகளை வழங்குவதற்கு…

Read More

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அமைச்சர் றிஷாத் விஜயம்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அமைச்சர் றிஷாத் விஜயம். பாதிகாப்பு ஏற்பாடுகள் குறித்து பொலிஸ் மா அதிபருடன் பேச்சு -சுஐப் எம் காசிம் – உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சில தினங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்ற அமைச்சர் றிஷாத் பதியுதீன் தனது விஜயத்தை இரத்து செய்து விட்டு நேற்று (20) மாலை நாடு திரும்பினார். வெள்ளத்தினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட வெல்லம்பிட்டி, வசட்டுவ, மீகொட கொலன்னாவ, வென்னவத்த, புத்கம, களனிபுர பிரதேசங்களுக்கும் அமைச்சர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட அகதிகளின்…

Read More

நிவாரணங்களில் ஈடுபடுவோருக்கு பொதுநலவாய அமைப்பு நன்றி

இலங்கையில் பெய்த கடும் மழைக்காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புக்களுக்காக பொதுநலவாயநாடுகள் அமைப்பு தமது இரங்கலை வெளியிட்டுள்ளது. குறிப்பாக கேகாலையில் இடம்பெற்ற அனர்த்தங்கள் தமது கவலையை அளிப்பதாக பொதுநலவாய நாடுகளின் பொதுச்செயலாளர் பெற்றீசியா ஸ்கொட்லேன்ட் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் மீட்பு நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நடவடிக்கைகளுமேமுன்னிலை பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காக பொதுநலவாய நாடுகளின் குடும்பம், மீட்புப் பணியாளர்களுக்கு தமது நன்றியைதெரிவிப்பதாகவும் பெற்றீசியா ஸ்கொட்லேன்ட் தெரிவித்துள்ளார்

Read More

தபால் விநியோகம் சீர்குலைவு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தபால் திணைக்களத்தின் பணிகள் பெரும்பாலும் சீர்குலைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கொட்டும் கடும் மழை காரணமாக அப்பகுதிகளில் விநியோகிக்க வேண்டிய தபால் பொதிகள் மற்றும் கடிதங்கள் தற்போது தபால் திணைக்களத்தின் தலைமையகத்தில் தேங்கத் தொடங்கியுள்ளன. நேற்று மாலை வரை சுமார் ஐந்து லட்சம் கடிதங்களும் பொதிகளும் தேங்கியிருப்பதாக தபால் திணைக்களத்தின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இவற்றில் சாதாரண தபால் பொதிகள் மட்டுமன்றி பதிவுத் தபால் பொதிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது….

Read More

மாணவர்களுக்கு உதவுங்கள் : விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான நிவாரணங்களை சேகரிக்கும் பணியை கல்வி அமைச்சு முன்னெடுத்துள்ளது. இதனடிப்படையில் 011 27 86 384, 071 23 65 965, மற்றும் 071 83 87 212 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு உங்கள் நிவாரணப்பொருட்களை வழங்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த மாணவர்களுக்கான நிவாரணப்பொருட்களை நேரடியாக வழங்க விரும்புபவர்கள் பெலவத்த, இசுறுபாய கல்வி அமைச்சுக்கு முன்பாகவுள்ள நிவாரண சேகரிப்பு பகுதிகளில் கையளிக்க முடியும்…

Read More

3 லட்சம் பேர் இடம்பெயர்வு

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக நாடு முழுவதும் 62,000 குடும்பங்களைச் சேர்ந்த 300,000 பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலையால் இடம்பெயர்ந்தவர்களுக்காக 611 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் சுமார் 3500 வீடுகள் முழுமையாகவோ பகுதியளவோ சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளதோடு 132 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

Read More

3 மாவட்டங்களுக்கு கடும் ஆபத்து

மண்சரிவு அபாயமுள்ள மாவட்டங்களாக 7 மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் கேகாலை, இரத்தினபுரி, பதுளை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகள், கடும் ஆபத்தான நிலைமையில் உள்ளன என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மலைகள் கொண்ட பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள், இயற்கைக்கு மாறாக நிலத்தில் வெடிப்புகள் மற்றும் நீரோட்டங்கள் ஏற்படுவதைக் கண்டால், அவை தொடர்பில் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டிய அதேவேளை, அது தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு, மேற்படி நிறுவனத்தின் மண்சரிவு தொடர்பான ஆராய்ச்சிக்குழுவின் பணிப்பாளர்…

Read More