Headlines

FCID புதுப் பெயருடன் புதுப் பரிணாமத்துடன்

கடந்த வருடம் ஜனவரி 8ஆம் திகதி உருவாக்கப்பட்ட பொலிஸ் நிதி மோசடி விசாணைப் பிரிவின் (FCID) நோக்கமானது நாட்டில் நடைபெறும் ஊழலை ஒழிப்பதற்காகும். அப்படிப்பட்ட FCID ஒருபோதும் முடப்படாது என சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு கூறினார். மேலும், FCID மூடப்பட மாட்டாது, ஆனால் புதுப்பெயருடன் புது விடயங்களை உள்ளடக்கியவாறு மீண்டும் ஆரம்பிக்கப்படும், எனினும் இதற்கு சற்று காலதாமதம் ஆகும் என ராஜித…

Read More

FCID கலைக்கப்படாது

பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவு கலைக்கப்பட மாட்டாது என்று அரசாங்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) உறுதியளித்தது. இந்த பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவை கலைப்பதற்கான அவசியம் இல்லை என்றும் இந்தப் பிரிவால் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடரும் என்றும் மின்வலு மற்றும் எரிசக்தி பிரதியமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.

Read More

நாமல் பாரிய நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜர்.!

முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ பாரிய நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகியுள்ளார். தெஹிவளை மிஹிந்து மாவத்தையில் காணப்படும் சொத்து ஒன்று  தொடர்பில் வாக்கு மூலம் அளிக்கவே பாரிய நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அவர் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த சொத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷவிற்கு சொந்தமானது. இது குறித்து, ஏற்கனவே சிராந்தி ராஜபக்ஷ மற்றும் யோசித ராஜபக்ஷவிடம் விசாரணை…

Read More

குமார வெல்கம நிதிக் குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவில்

முன்னாள் அமைச்சர் குமார வெல்கம பொலிஸ் நிதிக் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவில் இன்று (30) ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் அமைச்சராக பதவி வகித்த கடந்த ஆட்சியின்போது பஸ் வண்டிகளை கொள்வனவு செய்யும்போது இடம்பெற்றதாகக் கருதப்படும் மோசடி தொடர்பிலான விசாரணைகளுக்காகவே இன்று ஆஜராகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

லலித் வீரதுங்க FCID முன்னிலையில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு சத்திர சிகிச்சை ஒன்றிற்காக ரூபா.2௦௦ மில்லியன் வழங்கியமை குறித்த விசாரனைக்காக முன்னாள் ஜானாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க நிதி மோசடி விசாரணைப்பிரிவில் சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளார்.

Read More

நாமல் ராஜபக்ச, நிதிமோசடி தடுப்பு பொலிஸில்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தற்போது நிதிமோசடி தடுப்பு பொலிஸில்முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸை பகுதியில் இடம்பெற்ற காணிக் கொள்வனவு தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைபெற்றுக் கொள்வதற்காகவே அவர் நிதிமோசடி தடுப்பு பொலிஸ் பிரிவுக்குஅழைக்கப்பட்டுள்ளார். நாமல் ராஜபக்சவும், யோசித்த ராஜபக்சவும் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அதிகபெறுமதியுடைய காணிகளை குறைந்த விலைகளுக்கு கொள்வனவு செய்துள்ளதாக ஏற்கனவே செய்திகள்வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

இணையத்தளங்களில் வெளிவந்த செய்தி என்னைப் பழிவாங்கும் நோக்குடையது –  றிப்கான் பதியுதீன்

தலைமன்னாரில் அமைந்துள்ள காணி ஒன்றை போலியான உறுதிப்பத்திரத்தைப் பயன்படுத்தி, தான் விற்பனை செய்ததாக இணையத்தளங்களில் வெளியான செய்தியை வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் முற்றாக மறுத்துள்ளார். தன்மீது அரசியல் காழ்ப்புணர்வு கொண்டோர்களால், இந்த விடயம் வேண்டுமென்றே திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளதாகவும், இது ஒரு அபாண்டமான குற்றச்சாட்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் இது தொடர்பில் கூறியதாவது, எவரோ ஒருவர் வேண்டுமென்று என்மீது கொடுத்த முறைப்பாட்டை ஆழ அகல விசாரிக்காமல், என்னைக் குற்றவாளியாக இனங்காட்ட சில பத்திரிகைகளும், இணையத்தளங்களும்…

Read More

பொலிஸ் நிதி குற்றப் பிரிவில் யோஷித!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ பொலிஸ் நிதி குற்றப் பிரிவில் வாக்கு மூலமொன்றினை வழங்க சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளார். சீ.எஸ்.என். தொலைக்காட்சி நிலையம் தொடர்பில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் வாக்கு மூலம் வழங்குவதற்கு நேற்றும் பொலிஸ் நிதி குற்றப் பிரிவிற்கு யோஷித சென்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

யோஷித வாக்குமூலமளிக்க வந்தார்

முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களின் ஒருவரான யோஷித ராஜபக்ஷ, நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலமளிப்பதற்காகச் சென்றுள்ளார்.

Read More

யோஷித தொடர்பில் கடற்படை விசாரணை

பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தும் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைக்குப் பின்னர், யோஷித ராஜபக்ஷ தொடர்பில், கடற்படையினரின் விசாரணை ஆரம்பிக்கப்படும் எனவும் அதுவரையில் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் படைத்தரப்பு அறிவித்துள்ளது. கடற்படையின் கெடெட் அதிகாரியாக அவர் சேர்வதற்கான தகுதிகள் இருந்தனவா? அவை தொடர்பில் படைத்தரப்பு ஆய்வு செய்துள்ளதா? மற்றும் அவரது கடவுச்சீட்டு ஆகியன தொடர்பிலேயே, கடற்படையினர் விசாரணை நடத்தவுள்ளனர். கடந்த பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி முதல், கடற்படையிலிருந்து யோஷித ராஜபக்ஷ, பணிநீக்கம்…

Read More

சஷி வீரவன்ச இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச சற்றுமுன்னர் (27) இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுளார். காணி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலமொன்றினை வழங்கவே சஷி வீரவன்ச ஆணைக்குழு முன்னிலையில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

FCID இல்லாதொழிக்கப்படாது –

நிதி மோசடி விசாரணை பிரிவு ஒரு போதும் இல்லாதொழிக்கப்பட மாட்டாது என புதிய பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர இன்று (22) தெரிவித்தார். புதிதாக கடமையேற்ற பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவை வரவேற்கும் நிகழ்வு பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நிதி மோசடி விசாரணை பிரிவு மேலும் பலப்படுத்தப்படுமே தவிர இல்லாதொழிக்கப்படாது. மேலும் ஊழல்களில் ஈடுபட்டவர்கள் எவராக இருந்தாலும் கட்டாயம் கைது செய்யப்படுவர் என்றார்.

Read More