Headlines

எவற்றை நினைவில் வைத்துகொள்ள வேண்டும்: கூறுகின்றார் மஹிந்த

எங்­க­ளு­டைய வாழ்க்­கையில் மறக்­க­வேண்­டிய விட­யங்­களைப் போன்று நினைவில் வைத்­தி­ருக்க வேண்­டிய விட­யங்­களும் இருக்­கின்­றன. மறக்க வேண்­டிய விட­யங்­களை மரணத்த­றுவாய் வரைக்கும் கொண்­டு­ செல்ல முயற்­சிக்க கூடாது என முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­நாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்தார். அங்­கொடை கொஹி­ல­வத்த கங்­கா­தி­லக்க விஹா­ரையில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில், முப்­பது வருட யுத்தம் இன்று சில­ருக்கு மறந்­தி­ருக்­கின்­றது. யுத்­தத்தில் முன்­னின்று போரா­டிய இரா­ணு­வத்­தி­னரை…

Read More

இலஞ்ச ஊழல் ஆணையத்தில் புகார்

புகையிரத திணைக்களம் , மின்சார சபை உட்பட பல நிறுவனங்கள் தொடர்பாக கிடைத்த முறைப்பாடுகளின் 20 கோப்புக்கள் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு கையளித்ததாக  ஊழல் தடுப்பு முன்னனி தெரிவித்துள்ளது.

Read More

ஜி.எல் நிதி மோசடி விசாரணை பிரிவில்!

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் வாக்கு மூலம் ஒன்றை வழங்க, காவல் துறை நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகினார். அமைச்சு பொறுப்பில் இருந்த போது இடம் பெற்ற முறை கேடு தொடர்பாக, அவர் வாக்கு மூலம் வழங்க வந்ததாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்தார்.

Read More

விசாரணையில் இன்று பங்கேற்க முடியாது! மஹிந்த

ஐடிஎன் பணநிலுவை தொடர்பில் இன்று இடம்பெறவுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் பங்கேற்கமுடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். தமது 70வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று கண்டிக்கு வழிபடுகளுக்காக செல்லவேண்டியுள்ளமையால் இந்த விசாரணையில் பங்கேற்கமுடியாது என்று அவர் அறிவித்துள்ளார். தேர்தல் காலத்தின்போது ஒளிபரப்பப்பட்ட விளம்பரங்களுக்கான பல மில்லியன் ரூபா நிலுவை செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் கீழ் மஹிந்த கடந்த நான்கு தடவைகளாக பாரிய ஊழல் எதிர் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரிக்கப்பட்டார். எனினும் இன்று அவரின் சார்பில்…

Read More

தமயந்தி ஜயரத்னவுக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவினால் அழைப்பு

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் தமயந்தி ஜயரத்ன இன்று பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்திற்கு இராணுவத்தினரால் வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை எவன்கார்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெற்று கொள்வதற்காகவே அழைப்பட்டுள்ளார்.இதற்கிடையில் எவன்கார்ட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி நாளைய தினம் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளதாக ஆணைக்குவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Read More

மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்ட மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நாளைய தினம் (19) பாரிய ஊழல் மோசடிகளுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழு முன் பிரசன்னமாகுமாறு கோரப்பட்டுள்ளது. ஐ.டி.என் தொலைக்காட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவைப் பணம் தொடர்பிலேயே அவர் அழைக்கப்பட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே நான்கு தடவைகள் மஹிந்த, ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முன்னாள் பிரசன்னமானார். இதேவேளை ஐ.டி.என் தொலைக்காட்சியின் உள்ளக கணக்காய்வு தலைவர் மஞ்சுள அழகியவன்ன வழங்கிய முரண்பட்ட வாக்குமூலம் காரணமாக வாக்குமூலங்கள் ஒத்திவைக்கப்பட்டு நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறுகின்றன….

Read More

இலஞ்ச ஊழல் தொடர்பில் விசாரிப்பதற்கு அதிகாரிகள் இல்லை!

இலஞ்ச மற்றும் ஊழல் தொடர்பில் கடந்த ஆட்சியில் 6,000 முறைப்பாடுகளும், தற்போதைய ஆட்சியில் 4,000 முறைப்பாடுகளும் என மொத்தமாக 10, 000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்த, இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்க, இந்த முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு போதுமான அதிகாரிகள் இல்லை என்றும், அதனாலேயே விசாரணைகள் தாமதமடைவதாகவும் தெரிவித்தார். இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சாட்சிகளைத் தம்மிடம் வழங்குமாறும், சாட்சி வழங்குபவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பை வழங்க தாம்…

Read More

மஹிந்தவிற்கு நோட்டீஸ்

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களைப் பயன்படுத்தி, அச்சபைக்குச் சேர வேண்டிய 142 மில்லியன் ரூபாயைச் செலுத்தத் தவறியமைக்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட எழுவரையும் அடுத்த வருடம் மார்ச் மாதம் 10ஆம் திகதி,  கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவுடன்,  அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட ஏழ்வரை, நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நஷ்டத்துக்காக இலங்கை போக்குவரத்துச் சபையே  கொழும்பு வர்த்தக…

Read More

மஹிந்த ராஜபக்ச நிதியத் தலைவர் மீதும் விசாரணை!

மஹிந்த ராஜபக்ச அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் நிதி மோசடி தொடர்பான பொலிஸ் பிரிவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். சுமார் 100 மில்லியன் ரூபா ஊழல் தொடர்பிலேயே இந்த விசாரணை இடம்பெற்றுள்ளது. ஹோமாகம தியகம மைதான அமைப்பு பணிகளின் போது இந்த நிதி மோசடி இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மைதான அமைப்பின் போது தனியார் ஒப்பந்தக்காரர்களும் அரசாங்கம் ஒப்பந்தக்காரர்களுடனும் இணைந்து மோசடி மேற்கொள்ளப்பட்டதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த மைதான அமைப்பு தொடர்பில் ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் லலித் வீரதுங்கவும் அண்மையில்…

Read More