Headlines

விமல் வீரவன்ஸ FCID இல் ஆஜர்!

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ விசாரணைகளுக்காக இன்றும் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப்பிரிவில் ஆஜராகியுள்ளார். கடந்த ஆட்சியில் வீடமைப்பு அமைச்சராக இருந்த போது இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளுக்காக வீரவன்ஸ இன்று அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த விசாரணைகளுக்காக கடந்த 14ஆம் திகதியும் விமல் வீரவன்ஸ பொலிஸ் நிதி மோசடிப்பிரிவில் ஆஜரானமை குறிப்பிடத்தக்கது.

Read More

நிதி மோசடி விசாரணைப் பிரிவில் விமல் ஆஜர்

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார். கடந்த ஆட்சிக் காலத்தில் அவர் வீடமைப்பு, பொறியியல் மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் அரசாங்கத்தினுடைய வாகனங்கைள முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச் சாட்டுக்கள் தொடர்பாக வாக்கு மூலம் அளிக்கவே முன்னிலையாகியுள்ளார். எனினும் கடந்த ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதியும் விமல் வீரவன்ச அரச வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்தியமை தொடர்பில் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியிருந்தமை…

Read More

நாமலுக்கு எதிரான விசாரணைகள் பூர்த்தி

கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்கு எதிரான சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உட்பட 6 பேருக்கு எதிரான விசாரணைகள் முடிவடைந்துள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

Read More

பாரிய மோசடிகள் குறித்த ஒன்பது விசாரணைகள் நிறைவு

பாரிய மோசடிகள் தொடர்பான ஒன்பது விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி விசாரணைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த விசாரணைகள் தொடர்பான அறிக்கையானது எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும், இந்த விசாரணை அறிக்கை களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்  ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை ஒழுங்குப்படுத்தப்பட்ட 3 விசாரணை அறிக்கைகளானது ஜனாதி பதி மற்றும் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும்  ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. மேலும் பாரிய மோசடி தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதி பதி விசாரணை ஆணைக்குழுவிற்கு இதுவரையில்…

Read More

முஸம்மில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முஹமட் முஸம்மில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று ஆஜராகி உள்ளார். கடந்த அரசாங்கத்தில் அரச பொறியிலாலளர் கூட்டுத்தாபனத்தின் வாகனங்களை முறையற்ற ரீதியில் பயன்படுத்தியமை தொடர்பில் வாக்கு மூலம் பதிவு செய்வதற்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

Read More

1595 முறைப்பாடுகளில் 237 விசாரணைகள் நிறைவு

பாரிய ஊழல் மோசடி தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு 1595 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இதில் 237 வழக்குகள் நிறைவடைந்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2010ஆம் ஆண்டு தொடக்கம் கடந்த வருடம் ஜனவரி மாதம் வரை அரச நிறுவனங்களில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாக கிடைத்த முறைப்பாடுகளில் 1049 முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் அதில் 237 முறைப்பாடுகளின் விசாரணைகள் நிறைவுற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், 689 முறைப்பாடுகள் ஆணைக்குழுவால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் 43 முறைப்பாடுகள் வேறு நிறுவனங்களின் பொறுப்பில் விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது….

Read More

விமல் வீரவன்ச ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜர்!

பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச நிதி முறைகேடுகள் குறித்த வாக்குமூலமொன்றினை வழங்குவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சற்றுமுன்னர் (04.08.2016) ஆஜராகியுள்ளார். வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் அரசாங்க வளங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியமை தொடர்பில் விமல் வீரவன்ச மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

நாமல் நிதி குற்றப்புலனாய்வு பிரிவில்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ 70 மில்லியன் மோசடி தொடர்பில் இன்று (11) நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமல் ராஜபக்க்ஷ,இலங்கையின் முதன்மையான விளையாட்டு கழகத்தின் ரக்பி விளையாட்டு வளர்ச்சிக்காக கிரிஷ் குழுவிடம் இருந்து நன்கொடை கேட்டுள்ளார். இருப்பினும் இந்த பணம் தனிப்பட்ட வங்கி கணக்குகளின் ஊடாக அனுப்பப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை வழங்குவதற்காகவே நாமல் இன்று நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராக இருக்கின்றார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை,இந்த…

Read More

எப்பாவல தீயில் FCID பத்திரங்களும் கருகின

எப்பாவல பொஸ்பரேட், தொழிற்சாலையில் பல பிரிவுகளில் இன்று பரவிய தீ காரணமாக, நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவுடன் தொடர்புடைய பல பத்திரங்களும் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

மொஹமட் முஸம்மிலுக்கு விளக்கமறியல்

நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட தேசிய சுதந்திர  முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மிலை எதிர்வரும் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை செய்வதற்காகவே அவர் கைது செய்யப்பட்டார் என்று ஏற்கெனவே குறிப்பிடப்பட்டிருந்தது.

Read More

ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், எஸ்.எம். ரஞ்சித்

வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் பாரிய நிதி மோசடி விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று காலை ஆஜராகியுள்ளார். அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் வாக்கு மூலம் அளிக்கவே பாரிய நிதி மோசடி விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அவர் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More