Headlines

ஞானசார தேரருக்கு பிணை

ஹோமாகம நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்ப்பட்ட ஞானசார தேரரின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேற்று (10) ஞானசார தேரர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு பிணை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஞானசார தேரர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் இரண்டு லட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் அவரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

Read More

ஞானசார தேரர், நீதிமன்றில் ஆஜர்படுத்த தயார்

நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். நீதிமன்றத்துக்கு அண்மையில் உள்ள இரண்டு வீதிகள், இரும்பு கம்பிகளான தடைகள் போட்டு மறிக்கப்பட்டுள்ளன. வழக்கு விசாரணைக்களுக்கு வருகைதந்தவர்களை தவிர, வேறு எவரும் நீதிமன்ற வளாகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனம் தயாராக வைக்கப்பட்டுள்ளதுடன்  கலகம் அடக்கும் பொலிஸாரும் உஷாராக வைக்கப்பட்டுள்ளனர். பட உதவி: லங்காதீப

Read More

நாளை ஞானசாரவின் வழக்கு; சட்டம் தனது கடமையை செய்யும்

ஞானசார தேரரின் கைது தொடர்பாக பெரும்பான்மை சிங்கள மக்களிடத்தில் எதுவித தாக்கங்களும் ஏற்படாமை பொதுபல சேனா அமைப்புக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அவ்வமைப்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் மூலம் எமக்கு அறியக்கிடைத்தது. மிகுந்த எதிர்பார்ப்புடன் தேர்தலை எதிர்கொண்ட பொதுபல சேனா மூக்குடைத்து கொண்டது. அதனை தொடர்ந்து சிறிது துவண்டு போன பொதுபல சேனா ஞானசார தேரரின் கைது சிங்கள மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்திருந்தது. இந்த நிலையில் பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஞானசார…

Read More

சிங்கள ராவய அமைப்பின் செயலாளருக்கும் விளக்கமறியல்

பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஹோமாகம நீதிமன்றத்தில் குழப்பம் விளைவித்த தினத்தில் (26), அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நீதிமன்ற நடவடிக்கைக்கு பாதிப்பு ஏற்படுத்திய சந்தேக நபர்களான பிக்குகள் இருவர் நேற்று (01) ஹோமாகம பொலிஸில் சரணடைந்தனர்.   குறித்த இருவரில், சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்த சுதத்த தேரரும் ஒருவராவார்.குறித்த இருவரையும் வரும் ஒன்பதாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More

ஞானசாரரின் தேரர் அந்தஸ்து பறிக்கப்பட வேண்டும்! தம்பர அமில தேரர்

பிக்குகளுக்கான காவியுடை அணிந்து கொண்டு அடாவடியாக செயற்படும் ஒரு சிலரின் நடவடிக்கை காரணமாக பௌத்தமதம் அவமதிக்கப்படுவதாக தம்பர அமில தேரர் விமர்சித்துள்ளார். பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் நீதிமன்ற அவமதிப்பு விவகாரம் மற்றும் ஹோமாகமை நீதிமன்றத்தில் பிக்குகள் மேற்கொண்ட அடாவடிகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான தம்பர அமில தேரர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், காவியுடை தரித்துக் கொண்டு பௌத்தள பிக்குகளாக…

Read More

ஞானசாரருக்கு நிதி எங்கிருந்து கிடைக்கின்றன: விசாரணைகள் ஆரம்பம்

பொதுபலசேனா பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு நிதி கிடைக்கும் வழிகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. ஞானசாரருக்கு எங்கிருந்து நிதிக்கிடைக்கின்றது. அவர் பயன்படுத்தும் வாகனம் எவ்வாறு கிடைத்தது என்ற விடயங்கள் குறித்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் கோத்தபாயவின்  ஆதரவுடனேயே ஞானசார தேரர் செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது ஞானசாரர் மஹிந்தவுக்கே ஆதரவை வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More

ஹோமாகமயில் பிக்குமார் “காட்டு தர்பார்” – புத்திஜீவிகள் கடும் கண்டனம்

ஹோமாகம நீதிமன்ற அருகில் பிக்குமார் கலகம் புரிந்து சட்டத்தை அவமதித்ததைக் கண்டித்து சட்டத்துறை அறிஞர்கள், புத்திஜீவிகள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பலரும் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். பொதுவில் இந்தச் செயற்பாடு பௌத்த பிக்குமார்கள் அனைவருக்கும் அபகீர்த்தி விளைவிக்கும் ஒரு விடயமாகி விட்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். கொழும்பு முன்னாள் பிரதம மஜிஸ்ரேட்டும், நீதிச்சேவை அதிகாரிகள் சங்கத்தின் முன்னாள் பிரதம செயலாளருமான ஜீ.டீ. குலதிலக்க கருத்துத் தெரிவிக்கையில், நாட்டின் சட்டத்தை நீதிமன்றம் அமுலாக்கும் போது அதற்கு தடை ஏற்படுத்தி ஆஜராகும்…

Read More

ஞானசார தேரருக்கு பிணை வழங்க மறுப்பு

பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (28) காலை ஞானசார தேரரை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட ஹோமாகம நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க பிணை மனுவை நிராகரித்தள்ளார். காணாமல் போனதாக கூறப்படும் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் வைத்து திட்டிய குற்றஞ்சாட்டின் அடிப்படையில் ஞானசார…

Read More

ஞானசாரருக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கை, மேற்கொள்ள சட்டத்தரணிகள் ஆர்வம்

நீதி­மன்ற அவ­ம­திப்பு மற்றும் அர­சாங்க அதி­கா­ரி­க­ளுக்கு அச்­சு­றுத்தல் விடுத்த குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கு எதி­ராக மேல­திக சட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பது குறித்து சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் விசேட அவ­தானம் செலுத்­தி­யுள்­ள­தாக  ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம்.ஸுஹைர் விடிவெள்ளிக்குத் தெரி­வித்தார். இந்த விடயம் தொடர்பில் சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் தலைவர் ஜெப்ரி அழ­க­ரட்­னத்தை நேரில் சந்­தித்து தான் கலந்­து­ரை­யா­டி­ய­தா­கவும்  ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம்.ஸுஹைர் மேலும்…

Read More

ஹோமாகம நீதிமன்றின் முன் ஆர்பாட்டம் செய்த மூன்று பேர் கைது

ஹோமாகம நீதிமன்றத்தில் நுழைந்து நீதிமன்றை அவமதிக்கும் வித்தில் நடந்துகொண்ட ஞானசார தேரர்  அக் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அன்றையதினம் (25) நீதிமன்றின் முன்னால் அத்துமீறிய செயற்பாடுகளில் ஈடுபட்டோரை கைது செய்து அடுத்த வழக்கு தினத்தில் மன்றில் சமர்ப்பிக்குமாறு ஹோமாகம நீதிமன்றம் நேற்று (27) உத்தரவிட்டிருந்து. இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் முச்சக்கர வண்டி சாரதி உட்பட மூவர் இன்று (28) கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

ஞானசாரவின் கைது தொடர்பில், மஹிந்த வாய் திறந்தார்..! (வீடியோ)

நாட்டின் சட்டம் வெவ்வேறு முறைகளில் செயற்படுத்தப்படுவது தொடர்பாக மக்கள் திருப்தி அடையவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஞானசாரவின் கைது தொடர்பில்  தெரிவித்துள்ளார். நேற்று (27) மாலை இடம் பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது அவர் இதனை தெரிவித்திருந்தார்.

Read More

ஞானசாரவுக்கு அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் புகழாரம்

பிக்குகள் மீது சுமத்தப்பட்டுள்ள வரலாற்றுக் கடமையை ஞானசார தேரர் நிறைவேற்றியுள்ளதாக அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் புகழாரம் சூட்டியுள்ளார். நேற்று (27) காலை தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி கண்டிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதன் போது அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் கலகம அத்தததஸ்ஸி மகாநாயக்க தேரரையும் அவர் சந்தித்திருந்தார். இதன் போது கருத்து வெளியிட்டிருந்த அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் அத்ததஸ்ஸி தேரர், வரலாற்றுக் காலம் தொட்டு நாட்டில் எழுந்த பல்வேறு பிரச்சினைகளின்…

Read More