Headlines

சிங்கள ராவய அமைப்பின் செயலாளருக்கும் விளக்கமறியல்





பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஹோமாகம நீதிமன்றத்தில் குழப்பம் விளைவித்த தினத்தில் (26), அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நீதிமன்ற நடவடிக்கைக்கு பாதிப்பு ஏற்படுத்திய சந்தேக நபர்களான பிக்குகள் இருவர் நேற்று (01) ஹோமாகம பொலிஸில் சரணடைந்தனர்.
 
குறித்த இருவரில், சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்த சுதத்த தேரரும் ஒருவராவார்.குறித்த இருவரையும் வரும் ஒன்பதாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *