Headlines

ஞானசாரரை பிடிக்குமாறு, நீதிமன்றம் உத்தரவு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரருக்கு எதிராக மத்துகம நீதிமன்றம் பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்துகம நீதவான் நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டு வரும் வழக்கு விசாரணைகளில் முன்னிலையாகாத காரணத்தினால் இவ்வாறு பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 27ம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஞானசார தேரர் வழக்கு விசாரணைகளில் முன்னிலையாகியிருக்கவில்லை. கடந்த 2015ம் அண்டு செப்டம்பர் மாதம் 8ம் திகதி தேர்தல் சட்டங்களை மீறி வெலிப்பனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட…

Read More

அமைச்சர் றிஷாத், பிரதமரை சந்திக்க முடிவு,,,,,

-சுஐப் எம்.காசிம் – சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிகளைப் பற்றி பிழையான எண்ணங்களையும், கருத்துக்களையும் ஏற்படுத்துவதற்காக இனவாத சக்திகளின் ஒத்துழைப்புடன் சில முகநூல்களும், போலி இணையத்தளங்களும் தீவிர செயற்பாட்டில் இறங்கியுள்ளன என்றும், இவ்வாறான போலிப் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் போலியான இணையத்தளங்கள் மற்றும் முகநூல்களைக் கட்டுப்படுத்தும் வழி வகைகள்  மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அமைச்சர் றிசாத் பதியுதீன் சட்டமும், ஒழுங்கும் அமைச்சர் சாகல இரத்நாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார். கடந்த காலங்களிலும் முஸ்லிம்கள் தொடர்பில் இத்தகைய போலியான, பொய்யான, வேண்டுமென்றே திரிவுபடுத்தப்பட்ட…

Read More

மஹியங்கனையில் நிலைமை சுமுகம்

மஹி­யங்­கனை  பொலிஸார், பொலிஸ் நிலை­யத்தில் ஏற்­பாடு செய்­தி­ருந்த இரு தரப்­பு­க­ளுக்­கு­மி­டை­யி­லான சமா­தானப் பேச்­சு­வார்த்­தையை அடுத்து எதிர்­கா­லத்தில்  பிரச்­சி­னைகள் எது­வு­மின்றி  சமா­தா­ன­மாக வாழ்­வ­தாக  இரு­த­ரப்­பி­னரும் உறு­தி­ய­ளித்­தனர். மஹி­யங்­கனை நக­ரி­லுள்ள பன்­ச­லையில்  கடந்த நோன்­மதி தினத்­தன்று பெளத்த தேரர்  ஒருவர்  நிகழ்த்­திய  மார்க்க பிர­சங்­கத்தில் முஸ்­லிம்­களைப் பற்றி தவ­றாக  தெரி­விக்­கப்­பட்­ட­மை­யை­ய­டுத்து அதற்கு  எதிர்ப்பு  தெரி­வித்து முஸ்லிம் இளை­ஞர்கள் பெளத்த  கொடி­களை  எரித்­ததாலேயே இந்த  முறுகல் நிலை உரு­வா­ன­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இச்­சம்­ப­வத்தில் ஈடு­பட்­ட­தாக  சந்­தே­கத்தின் பேரில் எட்டு  இளை­ஞர்கள் 14 நாட்கள்…

Read More

தெஹி­வளை பள்­ளி­வா­சலின் விஸ்­த­ரிப்புக்கு, பிக்­குகள் கடும் எதிர்ப்பு – நிர்வாகிகளுக்கும் அச்சுறுத்தல்

தெஹி­வளை பாத்யா மாவத்­தையில் அமைந்­துள்ள பள்­ளி­வா­சலின் விஸ்­த­ரிப்பு பணி­க­ளுக்கு அப் பிர­தேச பௌத்த பிக்­குகள் சிலர் கடும் எதிர்ப்பு வெளி­யிட்­டுள்­ளனர். இச் சம்­பவம் நேற்று முன்­தினம் (23) இரவு இடம்­பெற்­றுள்­ளது. இத­னை­ய­டுத்து  பள்­ளி­வாசல் நிர்­வா­கி­களை தெஹி­வளை பொலிஸ் நிலை­யத்­திற்கு அழைத்து பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி கலந்­து­ரை­யாடல் ஒன்றை மேற்­கொண்டார். இதற்­க­மைய நேற்றுக் காலை பள்­ளி­வாசல் நிர்­வா­கி­க­ளுக்கும் எதிர்ப்பு வெளி­யிட்ட பௌத்த தேரர்கள் தலை­மை­யி­லான குழு­வி­ன­ருக்­கு­மி­டையில் பொலிஸ் நிலை­யத்தில் விசா­ர­ணைகள் இடம்­பெற்­றன. இதன்­போது ஆர்.ஆர்.ரி. நிறு­வன சட்­டத்­த­ர­ணி­களும் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்­தனர்….

Read More

ஞான­சாரரின் கருத்துக்கு, ஜம்­இய்­யத்துல் உலமா கண்­டனம்

– பரீல் – அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை­யினால் அங்­கீ­காரம் பெற்­றுள்ள ‘தப்லீக் ஜமாஅத்’ ஒரு அடிப்­ப­டை­வாத குழு என பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் கருத்து வெளி­யிட்­டுள்­ள­மைக்கு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை கண்­டனம் தெரி­வித்­துள்­ளது. ‘தப்லீக் ஜமாஅத்’ மக்­க­ளி­டையே நற்­பண்­பு­க­ளையும் சகோ­த­ரத்­து­வத்­தை­யுமே போதித்து வரு­கி­றது. மக்­களை நல்­வ­ழிப்­ப­டுத்­து­வ­தே­யன்றி அடிப்­ப­டை­வா­தத்தைப் போதிக்­க­வில்லை என  அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பொதுச்­செ­ய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் தெரி­வித்தார். பொது­ப­ல­சேனா…

Read More

நாட்டில் கடுமையாக இஸ்லாமிய தீவிரவாதம் வியாபித்துள்ளது! ஞானசார தேரர்

நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை விடவும் இஸ்லாமிய தீவிரவாதம் வியாபித்துள்ளது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தெரிவித்துள்ளார். கிருலப்பனை போதி பௌத்த மந்திரயவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இந்த விடயம் தொடர்பில் உரிய தரப்பினர் எவரும் எந்தவிதமான கவனமும் செலுத்தவில்லை. அரசியலில் இருக்கும் சில தரப்பினர் தங்களது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள பொதுபல சேனா மீது குற்றம் சுமத்தி வருகின்றனர்….

Read More

இனவாதத்தை தூண்டி நாட்டை சீரழிக்க முயற்சி.!

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் தமது சமூகம் சார்பாக குரல்கொடுக்கும்போது அதனை இனவாத அமைப்புகள் எதிர்ப்பது வேடிக்கையாக உள்ளது. பொதுபலசேனா, ராவணா பலய மற்றும் சிங்கள ராவய போன்ற இனவாத அமைப்புகள் மீண்டும் இனவாதத்தை தூண்டி நாட்டை சீரழிக்க முனைகின்றன. எனினும், இந்த அரசாங்கத்தினால் இனவாத சக்திகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என அமைச்சர் ரிசாட் பதியுதீன் உட்பட பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்…

Read More

பொதுபல சேனாவின் நடவடிக்கையால் நீதிமன்றத்திற்கு அவமதிப்பு ஏற்பட்டதா?

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட சிலர் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்திற்கு எதிரில் நடந்து கொண்ட விதம் குறித்து சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நீதிமன்றத்திற்கு அவமதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து பார்க்குமாறு ஹோமாகம நீதவான், மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை முன்வைத்துள்ள நீதவான், சம்பவம் தொடர்பான முறைப்பாட்டை மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். ஊடகவியலாளர் பிரகீத் எக்நேலியகொட காணாமல் போன சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின்…

Read More

தண்டனையை நெருங்கும் ஞானசார

ஞானசார தேரரை செப்ரம்பர் 13ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவினை விடுத்தள்ளது. மாலபே பிரதேசத்தில் கிருஸ்தவ தேவாலயமொன்றை தாக்கி சேதப்படுத்திய வழக்கு தொடர்பிலேயே இவருக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் உட்பட இன்னும் சில பிக்குகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கே ஞானசார தேரவுக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இவ் வழக்கு தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு பொதுபலசேனா பிக்குகள் நிரபராதிகள் என…

Read More

வவுனியாவில் சிங்க லே

வவுனியா பிரதேசத்திற்கு இனவாத அமைப்பான சிங்க லே  வருகை தந்து சிங்கள மக்களுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளதுடன், அவர்களுக்கான உதவித் திட்டம் ஒன்றினையும் ஆரம்பித்துள்ளது. வவுனியா, அவுரந்துலாவ பிரதேசத்திற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை சிங்களே அமைப்பின் தலைவர் ஜம்துரே சந்திரரட்ண தேரர் உள்ளிட்ட குழுவினர் வருகை தந்து அப்பகுதியில் குடியிருக்கும் சிங்கள மக்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டனர். அதன் பின்னர் அப்பகுதியில் சிங்க லே அமைப்பின் நிதி உதவியில் அமைக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கான சுகாதார வைத்திய நிலையம் ஒன்றினையும் திறந்து வைத்தனர்….

Read More

வட்டரக விஜித தேரர் இன்று வாக்குமூலம்

பொதுபல சேனா அமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடொன்றின் பேரில் ஜாதிக பல சேனாவின் செயலாளர் வட்டரக விஜித தேரர் இன்று(28) நாரஹேன்பிட்ட பொலிசுக்கு வாக்குமூலம் வழங்க வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வட்டரக விஜித தேரர் தேசியக் கொடியை அகௌரவப்படுத்தியதாக தெரிவித்து, பொதுபல சோன விஜித தேரருக்கு எதிராக கிருலப்பன பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது. குறித்த இந்த முறைப்பாட்டை விசாரணை செய்ய கிருலப்பனை பொலிஸார் நடவடிக்கை எடுக்கும் போது, தனக்கு பாதுகாப்புப் பிரச்சினை காணப்படுவதாக வட்டரக விஜித தேரர் பொலிஸில்…

Read More

முஸ்லிம்களுக்கு ஒரு அங்கல இடமும் கிடையாது – சிங்­கள ராவய

கூர­க­லயில் ஜெய்­லானி பள்­ளி­வாசல் அமைந்­துள்ள பிர­தேசம் பௌத்­தர்­களின் புனி­த­பூ­மி­யாகும். இது எமது பூர்­வீக தொல்­பொருள் பிர­தே­ச­மாகும். நாட்­டி­லுள்ள தொல்­பொருள் சட்­டத்தைப் பயன்­ப­டுத்தி கூர­க­லயில் முஸ்­லிம்­களின் வணக்­கஸ்­தலம் அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என சிங்­கள ராவய அமைப்பின் தலைவர் அக்­மீ­மன தயா­ரத்ன தேரர் தெரி­வித்­துள்ளார். கூர­கல விவ­காரம் தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில் ‘கூர­க­லயில் அமைந்­துள்ள முஸ்­லிம்­களின் வணக்க ஸ்தலம் இன்னும் இயங்­கி­வ­ரு­கி­றது. அப்­ப­கு­தி­யி­லுள்ள சட்­ட­வி­ரோத கட்­ட­டங்கள் அனைத்தும் அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்­டு­விட்­டன. முஸ்­லிம்­களின்…

Read More