Headlines

பேராதனை பல்கலைகழக முதற்கலை வெளிவாரிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்

பேராதனை பல்கலைக்கழகத்தின் தொலைகல்வி நிலையத்தின் முதல்கலைத் வெளிவாரிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி இம்மாதம் 30ஆம் திகதியாகும். இப்பரீட்சைக்காக 2011ஆம் ஆண்டுக்குப் பின்னரும் செல்லுபடியான பதிவை மேற்கொண்டோர் பரீட்சைக்காக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப்படிவங்களையும் மேலதிக விபரங்களையும் www.pdn.ac.lk என்ற இணையதள முகவரியினூடாக பெற்றுக்கொள்ளலாம். அல்லது அலுவலக நேரங்களில் பேராதனை பல்கலைக்கழகத்தின் தொடர் தொலைக்கல்வி நிலையத்திற்கு நேரடியாக சமூகமளித்து விபரங்களையும் விண்ணப்பப்படிவங்களையும் பெற்றுக்கொள்ளலாம்.

Read More

அமெரிக்க பாதுகாப்புச் செயலாளராக அஷ்டொன் கார்ட்டெரை அறிவிக்கவுள்ள ஒபாமா

இன்று வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் ஒபாமா, அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகனின் முன்னால் பிரதித் தலைவரான அஷ்டொன் கார்ட்டெர் என்பவரைத் தமது புதிய பாதுகாப்புச் செயலாளராக அறிவிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. இச்செய்தி உறுதியாகும் பட்சத்தில் கடந்த மாதம் பதவி விலகியிருந்த சக் ஹாகெலின் இடத்தை இவர் நிரப்புவார் என எதிர்பார்க்கப் படுகின்றது. அஷ்டொன் கார்ட்டெர் ஏற்கனவே ஆக்டோபர் 2011 முதல் டிசம்பர் 2013 வரை லெயொன் பனெட்டாவின் கீழ் பிரதிப் பாதுகாப்புச் செயலாளராகக் கடமையாற்றி இருந்தார்…

Read More

செல்பி எடுத்த மஹிந்த!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இளைஞர்கள் சிலருடன் செல்பி எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். கால்டன் இல்லத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்ட போதே மேற்படி இளைஞர்களின் வற்புறுத்தலின் பேரில் செல்பி எடுத்து கொண்டதாக பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

குறைந்த வருமானம் பெறுவோருக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு

அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சின் கீழான தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக குறைந்த வருமானம் பெறும் 150 இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் அன்மையில் கல்னேவ பிரதேச சபை உறுப்பினர் இஜாஸ் அவர்களின் தலைமையில் நேகமயில் வழங்கி வைக்கப்பட்டது.     இந்நிகழ்வில் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…

Read More

பாராளுமன்ற கலைப்பை எதிர்த்து மக்கள் காங்கிரஸ் வழக்கு தாக்கல் செய்தது!

அரசியலமைப்பை மீறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாராளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று (12) உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீபினால் தாக்கல் செய்யப்பட் இந்த மனு மீதான விசாரணை, இன்றே எடுத்துக்கொள்ளப்படுகின்றது. இந்த வழக்கில் சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ மக்கள் காங்கிரஸ் சார்பில் ஆஜராகியுள்ளார்.   -ஊடகப்பிரிவு-

Read More

කොස්ගම  වැසියෝ අදත් උද්ගෝෂණයේ –  ගමනා ගමනය අඩාලයි 

– නිලුපුලී – සිය ඉල්ලීම්වලට බලධාරීන් අවධානය යොමු නොකරන බව සඳහන් කරන සාලාව විරෝධතාකරුවන් යළිත් අද දිනද (එනම් ජූනි 9)  හයිලෙවල් මාර්ගය  අවහිර කරමීන් විරෝධතාවයක් ආරම්භ කර ඇති බව වාර්තා වේ.  මෙම හේතුවෙන් කොස්ගම  ප්‍රදේශයේ හයිලෙවල් මාර්ගයෙහි ගමන් ගන්නා වාහන  යළි සීමා කිරීමට සිදු වු බව පොලීසිය පවසයි.

Read More

கொழும்பில் மின் தடை!

கொழும்பு நகருக்கு மின் விநியோகத்தை வழங்கும் இரு மின் நிலையங்களின் இணைப்பில்  புதிதாக மாற்றம் செய்ய இருப்பதால் கொழும்பு நகரில் மின் தடை ஏற்படலாம் என மின்சார சபை ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுவரை காலமும் கொழும்பு நகருக்கு ஒரு இணைப்பின் ஊடாகவே மின்சாரம் வழங்கப்படுகின்றது. இந்த இணைப்பில் திருத்தம் மேற்கொள்ளும் போது மின் தடை ஏற்படலாம்  என மின்சார சபை ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார்.

Read More

பதிய அரசியலமைப்புக்கான ஆலோசனைகளை, ஜம்­இய்­யத்துல் உலமாவும் வழங்கும்

கில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை நாடளாவிய ரீதியில் சகல பிர­தே­சங்­க­ளி­லு­முள்ள துறைசார் நிபு­ணர்கள், புத்­தி­ஜீ­விகள், சமூக ஆர்­வ­லர்கள் மற்றும் உல­மாக்­க­ளி­ட­மி­ருந்து புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான ஆலோ­ச­னை­க­ளையும் கருத்­துக்­க­ளையும் பெற்றுக் கொள்­ள­வுள்­ளது. அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் கிளைகள் மூலம் இந்­தப்­பணி முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பான அறி­வு­றுத்­தல்­களை உலமா சபையின் பொதுச் செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக், உலமா சபையின் கிளை­களின் செய­லா­ள­ருக்கு அனுப்­பி­வைத்­துள்ளார். நாடெங்­கு­முள்ள உலமா சபை­­க­ளி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொள்­ளப்­படும் ஆலோ­ச­னைகள் ஒன்­றாகத் தொகுக்­கப்­பட்டு அர­சியல் யாப்பு வரைபுக்…

Read More

கடந்த காலங்களில் கொள்ளைக்காரர்களாக இருந்தவர்கள் தற்போது கொள்கை அரசியலைப்பற்றி பேசுவதற்கு யோக்கியதை அற்றவர்கள் – அமீர் அலி

கடந்த காலங்களில் கொலைகாரர்களாகவும் கொள்ளைக்காரர்களாகவும் இருந்தவர்கள் தற்போது கொள்கை அரசியலைப்பற்றி பேசுவதற்கு யோக்கியதை அற்றவர்கள் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். இன்று (4.1.2017) புதன்கிழமை அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே  மேற்கண்டவாறு கூறினார்.. அவர் மேலும் தெரிவிக்கையில் ஓரிரு தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவர் பிரதியமைச்சர் அமீர் அலி ஒரு கொள்கை அரசியல் வாதி அல்ல எனவும் முஸ்லிம் காங்கிரசிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரசிலும்…

Read More

கல்பிட்டி, மண்டலக்குடா இல்மா பாடசாலைக்கு நிதி ஒதுக்கீடு!

-ஊடகப்பிரிவு- கல்பிட்டி மண்டலக்குடா இல்மா ஆங்கிலப் பாலர் பாடசாலை அபிவிருத்திப் பணிகளுக்காக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் ரூபா 114,000/- நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி மற்றும் கல்பிட்டி பிராந்திய அமைப்பாளர் ஆப்தீன் எஹியா ஆகியோரின் சிபாரிசில்,  கல்பிட்டி நகர அமைப்பாளர் ஜனாப் முஸம்மிலின் வேண்டுகோளுக்கிணங்க, இந்த நிதி அமைச்சரினால் வழங்கப்பட்டுள்ளது. கல்பிட்டி நகர அமைப்பாளரான முஸம்மில் அண்மையில் பாடசாலைக்கு சமூகமளித்து அபிவிருத்திப்…

Read More

“ஊர்வலங்கள் மேளதாளங்கள் அன்றி உணர்வு ரீதியாக கொண்டாடுவோம்” – மேதின செய்தியில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்!

தொழிலாளர் வர்க்கத்தினரின் உழைப்பு, அர்ப்பணிப்பு, வாழ்க்கைப் போராட்டங்களுக்கு விடிவு, விடுதலை கிடைக்க வேண்டுமெனக் கூறியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்பதியுதீன், அதிகாரத் தொனியில் உழைப்பாளிகளை அடக்க முனைவதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் குறிப்பிட்டுள்ளார். தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது பற்றி, மேலும் தெரிவித்துள்ளதாவது, தினமும் உழைத்தாலும் வாழ்க்கையில் உயர முடியாத நிலையிலே தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களின் உரிமைக்கான குரல்கள் ஓங்கி ஒலித்துப் புரட்சி ஏற்பட்டதாலே உலகெங்கும் “மே…

Read More

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் இணைந்து செயற்­பட்டுள்ளேன் ஜனாதிபதி மைத்ரி

நாட்டில் ஜன­நா­ய­கத்தை வெற்­றி­கொள்ளும் போராட்­டத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் இணைந்து செயற்­பட்டுள்ளேன். நானும் ரணில் விக்கிரமசிங்கவும் ஒன்­றி­ணைந்து மிகப்­பெ­ரிய அர­சியல் முடிச்சை அவிழ்த்­துள்ளோம் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். நாட்டில் ஜன­நா­யகவாதிகள் இனியும் வாய்­மூடி இருக்­காது சமூ­கத்தின் நல­னுக்­காக குரல் எழுப்­ப­வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார். கொழும்பில் நேற்று கலைஞர் உபுல் சாந்த சன்­னஸ்­க­லவின் புத்­தக வெளி­யீட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். ஜனாதிபதி அங்கு மேலும் தெரி­விக்­கையில், நான் இன்று ஜனா­தி­ப­தி­யாக இருந்­தாலும்…

Read More