Headlines

குற்றங்கள் நிரூபிக்கப்படின் தண்டனை நிச்சயம்: ருவன் விஜயவர்த்தன




போர் இடம்பெற்ற காலப்பகுதியில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
எனினும் குற்றமற்றவர்களை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், அவர்களை தடுக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இல்லை எனவும், அரசியல் கைதிகள் விடயத்தில் ஜனாதிபதியும், பிரதமரும் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் போராட்டங்களை நடத்த வேண்டிய தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *