Headlines

ISIS களுடன் இணைய முற்பட்ட மூவர் இலங்கையில் கைது!

சிரியாவின் போராளிக் குழுக்களுடன் இணைந்து கொள்ளும் நோக்கில் வந்த  மூன்று மாலைதீவுப் பிரஜைகள் இலங்கையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 23 மற்றும் 25 வயதான இரண்டு ஆண்களும் 18 வயதான பெண்ணுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு மாலைதீவுக்கே நாடு கடத்தப்பட்டுள்ளதாக மாலைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மூவரும் துருக்கியின் ஊடாக சிரியாவுக்குள் பிரவேசிக்க திட்டமிட்டதோடு மருத்துவ வியடம் தொடர்பில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் அவர்கள் இலங்கைக்குள் பிரவேசிக்கும் போது ஒருவழி விமான அனுமதிச் சீட்டுக்களையே கொண்டிருந்ததாக…

Read More

முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்படாவிட்டால் அமைச்சுப் பதவியை தூக்கி எறிவேன்

வடக்கில் அடுத்த இரு வருடங்களுக்குள் முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும். இல்லையேல் அமைச்சுப் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு அரசுக்கு எதிராகப் போராடுவேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் சூளுரைத்துள்ளார். நாடாளுமன்றத்தில்  சனிக்கிழமை (5) இடம்பெற்ற கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு சூளுரைத்த அவர் மேலும் கூறுகையில், எனக்கு அமைச்சுப் பதவி கொடுக்க வேண்டாம் எனவும், வன்னி அபிவிருத்தியில் என்னை இணைக்க வேண்டாம் எனவும் தமிழ்த் தேசியக்…

Read More

உருளைக்கிழங்கிற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கான வரி 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி, இதுவரை 35 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ உருளைக்கிழங்கு இப்போது ரூ.40 இற்கு உயர்வடைந்துள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. உள்நாட்டிலுள்ள விவசாயிகளின் நலன் கருதி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மன்னார் நகரை அழகுபடுத்துவதில் தடைகள் ஏற்பட்ட போதும் அவற்றையும் தாண்டி நிர்மாணப் பணிகளை முன்னெடுத்துள்ளோம். மன்னாரில் அமைச்சர் ரிஷாட்

மன்னார் நகரத்தை அழகுபடுத்த நவீனமயமாக்கும் எமது முயற்சிகளில் பல்வேறு தடைகளும், சவால்களும் இருந்தபோதும் அதனையும் தாண்டி, அந்த நகரத்தை நவீனமயப்படுத்துவதற்கான அடிக்கல்லை அண்மையில் நாட்டியிருப்பதாகவும், விரைவில் இந்தப் பணிகளை பூரணப்படுத்தி மக்களுக்கு கையளிக்கவுள்ளோம் என்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் அல் – அஸ்ஹர் பாடசாலையில் அதிபர் மாஹிர் தலைமையில் (30) இடம்பெற்ற நிகழ்வுகளின் பின்னரான கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். புதிய ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான வகுப்பறையை திறந்து வைத்தல், புதிய கேட்போர்…

Read More

மஹிந்தவும் நாமலும் ஒரே சிறையில்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷவுக்கு ஏனைய சந்தேகநபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகளே வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. புதிய மெகசின் சிறைச்சாலையில் ஈ பிரிவில் நாமல் ராஜபக்ஷ தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு தூங்குவதற்கான துணி மட்டும் மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்றைக்கு 30 வருடங்களுக்கு முன்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட போது, இதே சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தாக சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று பகல் முதல் தனக்கான உணவை தனது வீட்டிலிருந்து பெற்றுக்கொள்ள அனுமதி…

Read More

இந்திய இணையதள பயனர்களுக்கு வரப்போகும் பெரிய ஆபத்து – Net Neutrality ? ஏன் ?? எதனால் ?

கண்டிப்பா முழுசா படிச்சிட்டு – முடிந்த அளவு பகிருங்கள் !!!  Net Neutrality – இணைய நடுநிலை Net Neutrality என்றால் அனைத்து இணையதளங்களும் நிலையான வேகம் நிலையான கட்டணம் என்று இணையத்தில் நடந்துகொள்ள ஒரு விதி.இது தான் பொருள் ….ஆனா உண்மை என்னன்னா. முதலில் இதன் பயன்கள் என்ன ??? என்று பார்ப்போம் …. இலவச இன்டர்நெட் !!! வாயை பிளக்காதீர் … உண்மை தான் உங்க போனில் பத்து காசு இல்லேன்னா கூட இலவசமா…

Read More

ஐ.நா. சபையில் ‘ராபியா’ அடையாளத்தை காட்டி உரை நிகழத்திய துருக்கிய ஜனாதிபதி

(Inamullah Masihudeen) தற்பொழுது அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் தாபனத்தின் 69 ஆவது பொது சபை மாநாட்டில் நேற்று உரையாற்றிய துருக்கி ஜனாதிபதி ரஜப் தயிப் அர்டோகான் எகிப்தின் சதிப்புரட்சி அரசினை சாடியதோடு பார்வையாளர்களாக இருக்கும் சர்வதேச பிராந்திய சக்திகளையும் அக்கிரமத்தின் பங்காளிகளாக வர்ணித்தார். பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்றொழித்து, மக்களின் நியாயமான ஜனநாயக போராட்டங்களை கனரக ஆயுதங்கள் கொண்டு அடக்கி எகிப்தின் சட்டபூர்வமான அரசை கவிழ்த்து ஜனாதிபதியையும் ஏனைய…

Read More

நீங்கள் சாம்சங் மொபைல் வச்சுருக்கீங்களா..?

சாம்சங் மொபைல் பயன்படுத்துபவர்களில் 600 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் பாதுகாப்பற்ற முறையில் தங்களின் மொபைலை பயன்படுத்தி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட சாம்சங் நிறுவனத்தின் கேலக்சி எஸ் 6 மாடல் மொபைல் உள்ளிட்ட சாம்சங் மொபைலில் குறிப்பிட்ட சில பட்டன்களை அழுத்தினால் அவர்களின் மொபைலை யார் வேண்டுமானாலும் எளிதாக ஊடுருவி விட முடியுமாம். லண்டனில் பிளாக் ஹெட் செக்யூரிட்டி அமைப்பு நடத்திய மாநாட்டில் ரேயன் வெல்டன் என்ற பாதுகாப்பு ஆய்வு நிறுவனம் சாம்சங்…

Read More

பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூபின் நிதியுதவியில் விசேஷட தேவையுடையோருக்கு உபகரண உதவிகள்!!!

துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை பிரதி அமைச்சர் கெளரவ அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து கிண்ணியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட விசேட தேவையுடையோர்களுக்கான சங்கங்களுக்கு போட்டோ கொப்பி இயந்திரங்கள் வழங்கள் மற்றும் பைசல் நகர் CTB தக்கியா மஸ்ஜித்கான ஒலி பெருக்கி உபகரணங்கள் வழங்கள் நிகழ்வானது 07.01.2019.இன்று கிண்ணியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் DR.ஹில்மி முகைதீன் பாவா அவர்களினால் அவ் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன….

Read More

இலங்கையில் வாழும் ஒவ்வொரு பிரஜையும் 4 இலட்சம் ரூபா கடன்காரா்களாக உள்ளனா் -சஜித்

– அஸ்ரப் ஏ சமத் – அண்மையில் அமைச்சரவையில் ஹம்பாந்தோட்டையில் உள்ள மத்தல விமான நிலையத்தில் உள்ள கட்டிடத்தினை ஹம்பாந்தோட்டை விவசாயிகளின் நெல்லை களஞ்சியப்படுத்துவதற்கு பாவிப்பதற்கு ஒரு அமைச்சா் அமைச்சரவை பத்திரம் தயாரித்திருந்தாா்.. ஆனால் அதனை அமைச்சரவை ஏற்றுக்கொள்ள வில்லை. இது தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச செய்த அபிவிருத்திகள். இலங்கையில் வாழும் ஒவ்வொரு பிரஜையும் 4 இலட்சம் ரூபா கடன் காரா்களாக உள்ளனா். என அமைச்சா் சஜித் பிரேமதாச தெரிவிப்பு ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வாழும்…

Read More

சரிந்தது மஹிந்த அரசு!

இலங்கையில் நடைபெற்று வந்த குடும்ப ஆட்சியை நாட்டு மக்கள் முடிவுக்குக் கொண்டு வந்து மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தல் நேற்று நடைபெற்று முடிவுகளும் அறிவிக்கப்பட்டு பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 7ஆவது ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளார். கடந்த கால அராஜக ஆட்சிக்கு மக்கள் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளனர். அம்பாந்தோட்டையில் பிறந்த மஹிந்த ராஜபக்ச தனது தந்தையாரின் அரசியல் வழியிலேயே தானும் அரசியலில் நுழைந்தவர். 1970 ஆம் ஆண்டு சுதந்திரக்…

Read More

தற்காலிகமாக மூடப்படும் யால வனவிலங்குகள் சரணாலயம்!

யால தேசிய வனவிலங்குகள் சரணாலயம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனவிலங்குகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி வரை இது மூடப்படுவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விலங்குகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் சரணாலயம் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள விலங்குகளின் இயற்கை நடத்தைகள் குறுக்கீடு இல்லாமல் இடம்பெறுவதற்கும் யால வனவிலங்குள் சரணாலம் மூடப்படுவதாக வனவிலங்குகள் பாதுகாப்பு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை ஒவ்வொரு வருடமும் குறித்த காலப்பகுதியில், யால சரணாலயத்தை தற்காலிகமாக…

Read More