Headlines

மஹிந்தவிற்கு வயதாகிவிட்டது – அமைச்சர் ராஜித

70 வயதான மஹிந்த ராஜபக்ச, இன்னும் பல வயதானவர்களை வைத்து க்கொண்டு புதிய கட்சி ஒன்றை அமைக்க முயற்சிப்பது சாத்தியமற்றது என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பேருவளையில் (29) நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், இந்தக் கருத்தை வெளியிட்டார். மஹிந்த தரப்பினர், எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை மையப்படுத்தி புதிய கட்சியை அமைக்க திட்டமிடுகின்றனர். எனினும் அது சாத்தியமாகாது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். மஹிந்தவுக்கும் வயதாகிவிட்ட நிலையில் அவருடன் இணைந்திருப்பவர்களும் அரசியலில் வங்குரோத்து நிலையை…

Read More

றிஷாட் பதியுதீன் நிதி ஒதுக்கீட்டில் உப்புக்குளம் புதிய குடியேற்றத்திற்கான உட்கட்டமைப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத்தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான றிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் உப்புக்குளம் புதிய குடியேற்றம் 2ம் கட்டையில் குடியேறும் மக்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்பாடு செய்யும் வேலைத்திடம் ஆரம்பமானது. இந்த நிகழ்வில் அமைச்சரின் இணைப்பாளர் முஜாஹிர் மற்றும் முன்னால் நகரசபை உறுப்பினர் நகுசீன் ஊர்பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

Read More

நசீர் மன்னிப்பு கேட்க, வேண்டுமென்பது தவறானது – ஹசன் அலி எதிர்ப்பு

-விடிவெள்ளி  ARA.Fareel- கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் சம்பூர் மத்­திய மகா வித்­தி­யா­ல­யத்தில் நடை­பெற்ற நிகழ்வில் கடற்­படை தள­ப­தி­யுடன் நடந்து கொண்ட விதம் தொடர்­பாக அவர் மன்­னிப்புக் கேட்க வேண்டும் எனக் கோரப்­ப­டு­வது தவ­றாகும். ஒருவர் தவறு செய்­தி­ருந்­தாலே மன்­னிப்புக் கேட்க வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலி தெரி­வித்தார். கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் நடை­பெற்ற சம்­ப­வத்­துக்கு மன்­னிப்பு கேட்க வேண்டும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு…

Read More

இன்று பூமிக்கு அண்மையில் வரும் குறுங்கோளால் – நாசா!

வெள்ளிக்கிழமை 2014 YB35 என்று பெயரிடப் பட்ட ஓரளவு பெரிய குறுங்கோள் (asteroid) ஒன்று பூமிக்கு அண்மையில் அதாவது பூமியில் இருந்து 2.8 மில்லியன் தொலைவில் கடந்து செல்வதாகவும் இது பூமிக்கும் நிலவுக்கும் இடையேயான தூரத்தை விட 11.7 மடங்கு அதிக தூரத்திலே தான் கடந்து செல்வதால் இது பூமியுடன் மோதாது எனவும் இதனால் ஆபத்தில்லை எனவும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அறிவித்துள்ளது. அரிஷோனா பல்கலைக் கழகத்தின் கட்டெலினா வான் ஆய்வுப் பிரிவால் கண்டு…

Read More

கொழும்பில் மிதந்துவந்த மீனுடன் விளையாடிய 21 பேர், வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பின் புறநகர் கல்கிஸ்ஸை கடலில் மிதந்து வந்த நச்சுத்தன்மை கொண்ட ஜெலி மீன் (நுங்கு மீன்) ஒன்றை வைத்து விளையாடிய 21 பேர் கொழும்பு தெற்கு களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இந்தநிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கடுமையான சொறி, எரிச்சல், தடிப்பு மற்றும் வலி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் எவரது உயிருக்கும் ஆபத்து இல்லை என்று வைத்தியசாலை தரப்பு தெரிவித்துள்ளது.

Read More

மருதமுனை இளைஞர் அணியுடனான சந்திப்பில் அமைப்பாளர் சித்தீக் நதீர் பங்கேற்பு!

–ஏ.எச்.எம்.பூமுதீன்– மருதமுனை இளைஞர் குழுவினருக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மருதமுனை அமைப்பாளரும், நாவிதன்வெளி மற்றும் மருதமுனை பிரதேச இளைஞர் அமைப்பாளருமான சித்தீக் நதீருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை (31) மருதமுனையில்  இடம்பெற்றது. கல்முனை மாநகர சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போனஸ் ஆசனத்துக்காக பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் வேட்பாளரான பூமுதீன் மலிக்கின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பிரதம அதிதியாக சித்தீக் நதீர் கலந்து சிறப்பித்தார். கலந்துரையாடலுக்கு மத்திய குழுவின் பிரதித்…

Read More

சுவரொட்டிகள் அகற்றப்பட்டன

பாதுக்க பகுதியில் ஒட்டப்பட்டிருந்த தேர்தல் சுவரொட்டிகளை நேற்று செவ்வாய்க்கிழமை (14) இரவு அகற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நாடு முழுவதிலும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சகல பொலிஸ் நிலையங்களுக்கும் பணித்துள்ளார்.

Read More

அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் நிதியுதவின் கீழ் முசலி பிரதேசத்தில் விளையாட்டு மைதானங்களுக்கான அடிக்கள் நாட்டும் நிகழ்வு…

முசலி பிரதேசத்தின் மீள்குடியேரிய கிராமங்களின் இளைஞர்களுக்கான விளையாட்டு துறையின் வளர்ச்சிக்காக ரூபா 50 இலட்சம் நிதியினை மீள்குடியேற்ற செயலனியூடாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் ஒதுக்கியுள்ளார்கள். பாலைக்குழி,கொண்டச்சி,அகத்திமுரிப்பு அலக்கட்டு,கரடிக்குழி மரிச்சிக்கட்டி முள்ளிக்குளம் போன்ற கிரமங்களுக்கு மைதானம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதிக்கான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கும் நிகழ்வு முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியேக செயலருமான றிப்கான் பதியுதீன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் அலிக்கான் ஷரீப் முசலி பிரதேச சபை தவிசாளர்…

Read More

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை குழு அங்கத்தவராக கே.எம்.நிலாம் நியமனம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக் குழு அங்கத்தவராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம்.நிலாம் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வை.எம்.எம்.ஏயின் வேண்டுகோளுக்கிணங்க, சுகாதார போசனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனத்தை யாழ்ப்பாணம் அகில இலங்கை  வை.எம்.எம்.ஏயின் அலுவலகத்தில் வைத்து  நேற்றிரவு(25) அதன்  தலைவர் எம்.எஸ் றஹீமினால் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன், குறித்த பேரவையின் உதவி செயலாளரான என்.பவாஸ் என்பவரும் இக்குழு அங்கத்தவராக நியமனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரக் களம் சூடு பிடிக்கிறது; எதிரணி 140 கூட்டங்களை நடத்துகிறது!

ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியின் சார்பில் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து எதிரணியின் பிரச்சாரக்குழு 140 பிரதான கூட்டங்களை நடத்தத் தீர்மானித்துள்ளது. இந்தக் கூட்டங்களில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர். அத்தோடு, கிராமிய மட்டங்களில் 12 ஆயிரம் சிறிய கூட்டங்களை நடத்துவதற்கும்…

Read More

இணையத்தளங்களில் வெளிவந்த செய்தி என்னைப் பழிவாங்கும் நோக்குடையது –  றிப்கான் பதியுதீன்

தலைமன்னாரில் அமைந்துள்ள காணி ஒன்றை போலியான உறுதிப்பத்திரத்தைப் பயன்படுத்தி, தான் விற்பனை செய்ததாக இணையத்தளங்களில் வெளியான செய்தியை வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் முற்றாக மறுத்துள்ளார். தன்மீது அரசியல் காழ்ப்புணர்வு கொண்டோர்களால், இந்த விடயம் வேண்டுமென்றே திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளதாகவும், இது ஒரு அபாண்டமான குற்றச்சாட்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் இது தொடர்பில் கூறியதாவது, எவரோ ஒருவர் வேண்டுமென்று என்மீது கொடுத்த முறைப்பாட்டை ஆழ அகல விசாரிக்காமல், என்னைக் குற்றவாளியாக இனங்காட்ட சில பத்திரிகைகளும், இணையத்தளங்களும்…

Read More