Headlines

தர்கா நகர் வாசிகசாலை சம்பந்தமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு சாதகமான முடிவு!




பேருவளை பிரதேச சபைக்கு உற்பட்ட தர்கா நகர் வாசிகசாலையில் தமிழ் மொழி தெரியாத அதிகாரிகள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதால், தர்கா நகர் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இடைஞ்சலாக இருப்பதால், தர்கா நகர் வாசிகசாலைக்கு தமிழ் மொழி தெரிந்த அதிகாரியை நியமிக்கும்படி அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப் மரிக்கார் இன்றைய சபைக்கு முன்வைத்த கோரிக்கை சபையால் அங்கீகரிக்கப்பட்டது.

ஹஸீப் மரிக்காரின் இக்கோரிகை சபையில் விவாதத்துக்கு எடுக்கப்பட்ட போது, இக்கோரிக்கை உடன் நிறைவேற்றப்பட வேண்டியது என பிரதேச சபை உறுப்பினர்களான பைஸான் நைஸர் மற்றும் அல்ஹாஜ் பதியுதீன் ஆகியோர் ஹஸீப் மரிக்காரின் கோரிக்கையை ஆமோதித்து கருத்து வெளியிட்டனர்.

இதன்பிற்பாடு இதற்கு உரிய தீர்வை பெற்றுத்தர சபையில் இணக்கப்பாடு எட்டப்பட்டது.

(ன)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *