Headlines

நிலநடுக்கத்தால் காத்மாண்டு நகரம் 10 அடி தூரம் தெற்காக நகர்ந்துள்ளது: வல்லுனர்கள் தகவல்

நேபாளத்தை புரட்டி போட்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டின் தலைநகர் காத்மாண்டு 10 அடி தூரம் தெற்காக நகர்ந்துள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் இமயமலையின் உயரத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளனர். கடந்த சனிக்கிழமையன்று நிகழ்ந்த 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் இதுவரை 4300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதுடன், 8000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக அதிக அளவில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கத்திற்கு பின் ஏற்பட்ட ஒலி அலைகள் மூலம் பெறப்பட்ட நிலஅதிர்வு தரவின்…

Read More

நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பம் 20 அணுகுண்டு வெடித்ததற்கு சமம்: அதிர்ச்சி தகவல்

நேபாளத்தில் கடந்த 25–ஆம் திகதி (சனிக்கிழமை) 7.9 ரிக்டரில் பூகம்பம் ஏற்பட்டது. அதில் காத்மாண்டு, போக்ரா, தீர்த்திநகர் உள்ளிட்ட பெரும் பாலான இடங்களில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள், ஓட்டல்கள் இடிந்து தரை மட்டமாயின. இடிபாடுகளுக்குள் சிக்கி ஏராளமானவர்கள் பலியாகினர். இதுவரை 4,310 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இடிபாடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. இடிபாடுகளுக்குள் இன்னும் பிணங்கள் கிடக்கின்றன. எனவே பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டும் என அஞ்சப்படுகிறது. மேலும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம்…

Read More

நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் 80 லட்சம் மக்கள் பாதிப்பு: ஐ.நா.சபை தகவல்

பூகம்பத்தால் சின்னா பின்னமான நேபாளத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த பூகம்ப சேதம் குறித்து ஐ.நா.சபை கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. இந்த பூகம்பத்தில் 39 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் 11 மாவட்டங்கள் மிக கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. சுமார் 80 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படுவதால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரங்களில் குடும்பத்துடன் தங்கியுள்ளனர். அவை போதுமான…

Read More

இலங்கையிலிருந்து சவூதி அரேபியாவுக்கு சென்றவர், 3 நாட்களின் பின் விபத்தில் வபாத்

-அனா- சவுதிஅரேபியாவின் ரியாத் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம் பெற்ற வாகண விபத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தை இஸ்தலத்திலயே மரணமடைந்துள்ளார். ஓட்டமாவடி முதலாம் வட்டாரம் ஐ.எம்.எல். ஐஸ்வாடி வீதியைச் சேர்ந்த புஹாரி முஹம்மது முஹம்மது பாஸில் (வயது – 28) எனும் இரண்டு வயது குழந்தையின் தந்தையே இவ்வாறு மரணமடைந்தவராவார். மரணமடைந்தவர் வெளிநாட்டுக்கு தொழில் நிமித்தம் கடந்த 23.04.2015ம் திகதி இலங்கையில் இருந்து சென்றுள்ள வேளையில் 26.04.2015ம் திகதி நல்லிறவு…

Read More

அசைவப்பிரியர்களே…. இது உங்களுக்கான டிப்ஸ்!

அமிலமான(Fatty Acid) ஒமேகா-3 இயல்பான வளர்ச்சிக்கும், உடல்நலத்திற்கும் மிகவும் இன்றியமையாதது. ஒமேகா 3 உள்ள உணவுகள் ஒமேகா 3 உள்ள உணவுகளில் முதன்மையானவவை மீன்கள். அதுவும் சால்மன், துனா, சார்டின், ஹெர்ரிங், நெத்திலி போன்றவற்றில் அதிகம் அளவு ஒமேகா 3 உள்ளது. இந்த வகை மீன்களை வறுக்காமல் உண்டால் இதயத்திற்கு மிகவும் நல்லது. வாரம் ஒருமுறை இந்த மீன்களை உண்டால் மாரடைப்பு வரும் சாத்தியக்கூறு 44% குறைகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வால்நட் போன்ற கொட்டைகளிலும், ஆலிவ்…

Read More

ஓமன்:(மஸ்கட்டில்) வெளிநாட்டவருக்கு பொது மன்னிப்பு அறிவிப்பு!

ஓமனில் உள்ள ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. ஓமனில் பொது மன்னிப்பு வழங்க முடிவு செய்துள்ளது. மன்னர் நோய்வாய் பட்டு அதில் இருந்தது புரணகுணம் அடைந்த நிலையில் இதை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றன. இதனை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அங்கிருந்து வரும் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. இதை முடிந்த அளவு பயன்படுத்தி கொள்ள அங்குள்ள தூதரக அதிகாரியும் செய்தி வெளியிட்டுள்ளது. இது வருகிறது ஜூன் 1 முதல 30 வரை இருக்கும் என்று…

Read More

அரேபிய சட்டங்களை அறியாதவர்களாக நாம்..!

நாளுக்குநாள் வேலைத்தேடி அரேபிய தீபகற்பத்திற்கு படையெடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. தகைமைக்கு தகுந்த தொழில், கூடிய ஊதியம் என உழைப்பு ஒன்றை நோக்காக கொண்டே இந்த படையெடுப்புகள் நடந்தேறுகின்றன. இவ்வாறானதொரு சூழலில் நமது சொந்தபந்தங்கள், நண்பர்கள் தமது குடும்ப உறுப்பினர்களுக்கு பாசத்தின் விளைவாக பண்டங்களை பரிமாறிக்கொள்வது வழமை. கத்தார், சவூதி அரேபியா, குவைத், ஓமான், பஹ்ரைன் என எந்த நாடுகளை எடுத்தாலும் குறைந்தபட்சம் இரண்டு வருட பணி ஒப்பந்தம் செய்தாக வேண்டும். என்னத்தான் தொழிற்நுட்பங்கள்…

Read More

A/C-ஆல் ஏற்படும் விபரீத விளைவுகள் – எச்ச‍ரிக்கும் மருத்துவர்கள்!li

‘ராத்திரி முழுக்க‌ ஒரே புழுக்கம்… தாங்கவும் முடியல… தூங்கவும் முடியல… எவ்வளவு செலவானாலும் புது ஏசி வாங்கி வீட்ல மாட்டப்போறேன்!’’ இப்படி அங்கலாய்த்துக் கொள்பவரா நீங்கள்? அப்போது நீங்கள்தான் முதலில் இதைப் படிக்க வேண்டும்! ஒரு காலத்தில் ஏர்கண்டிஷனர் சாதனம் ஆடம்பரப் பொருளாக இருந்தது. காலத் தின் தேவையில் அலுவலகங்கள் குளிர் சாதன வசதிக்கு மாறிவிட்டன. இதனால் ஏசியின் குளுமைக்கு பெரும்பாலான மக் கள் பழகிப்போனார்கள். வீட்டிலும் ஏசி பயன்படுத்துவது அதிகரித்தது. இங்குதா ன் பிரச்னையே ஆரம்பம்….

Read More

சவூதி அரேபியாவில் நடந்த வாகன விபத்தில் ஓட்டமாவடி இளைஞன் பலி

அப்துல்லாஹ் சவூதி அரேபியா றியாத் நகரில் (27) திங்களன்று இடம்பெற்ற நடந்த வாகன விபத்தில் மட்டக்களப்பு ஓட்டமாவடியைச் சேர்ந்த புஹாரி பாஸில் (வயது 28) எனும் இளைஞர் மரணமடைந்து விட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாகவே இவர் தொழில் வாய்ப்பின் நிமித்தம் இலங்கையிலிருந்து சவூதி அரேபியா றியாத் நகரிலுள்ள கம்பனி ஒன்றுக்கு சென்றதாகவும் அவ்வேளையில் இந்த வாகன விபத்தில் சிக்கி மரணமடைந்து விட்டதாகவும் உறவினர்கள் மேலும் தெரிவித்தனர். சடலத்தை சவூதி அரேபியாவின் றியாத் நகரிலேயே…

Read More

மேல் மாகாண சபை உறுப்பினா் பைருஸ் தலைமையில்: பாராளுமன்றத்தை நோக்கி மக்கள் படையெடுப்பு

அஹமட் இர்ஸாட் நாட்டிலுள்ள அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்காகவும், தேர்தல் முறை மாற்றத்தினை அமுல்படுத்துவதற்காகவும் நேற்று திங்கட்கிழமை (27.04.2015) பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட பத்தொன்பதாவது திருத்தச் சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பினைக் காட்டுவதினை தவிர்த்து நாட்டில் அமைதியானதும் சுதந்திரமானதுமான ஆட்சியினை நிலை நாட்டும் பொருட்டு சமர்பிக்கப்பட்ட பத்தொன்பதாவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு ஒத்துளைப்பு வழங்குமாறு எதிர்க்கட்சிகளை வேண்டி மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளரும், மேல் மாகாண சபை உறுப்பினறுமான பைருஸ்  தலைமையில் 5000க்கும் அதிகமான…

Read More

விவசாயிகளின் நெல்லினை கொள்வனவு செய்ய தேவையான நிதியினை ஒதுக்கீடு செய்யுமாறு அமைச்சர் றிஷாத் கோரிக்கை

இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ் மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகளின் நெல்லினை கொள்வனவு செய்ய தேவையான நிதியினை ஒதுக்கீடு செய்யுமாறு வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன்நிதி அமைச்சர் ரவி கருநாயக்கவிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார். வன்னி மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடை இடம் பெறுவதாகவும்,விவசாயிகள் அறுவடை செய்த நெல் கொள்வனவுக்கு போதுமான நிதி தம்மை வந்தடையவில்லையென அதிகாரிகள் தெரிவித்துள்ளது தொடர்பில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் நிதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 இலட்சம் கிலோவும்,வவுனியா…

Read More

இக்கட்டான சூழ்நிலையிலும் ஒரு முஸ்லிமை நம்பினார் ரணில்…

கடந்த ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் அப்போதய ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயளாலர் திஸ்ஸ அத்தநாயக்க மஹிந்த அரசில் இணைந்து ஐக்கிய தேசிய கட்சிக்கு பெரும் நெருக்கடியை கொடுத்திருந்தார். அப்போது உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அமைச்சர் கபீர் ஹசீம் அவர்களை ரனில் கட்சி பொது செயளாலராக நியமித்திருந்தார்.இதற்காக அவர் எவரிடமும் அனுமதியையோ அலோசனையோ கேட்கவில்லை இவ்விடயம் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்து . பலம் பெரும் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயளாலர் பதவிக்கு…

Read More