Headlines

19ஐ தோற்கடிப்பதற்கு மஹிந்த ஆதரவுக்குழு இறுதிவரை செய்த சூழ்ச்சி

அரசியல் யாப்புக்கான 19வது திருத்தத்தைத் தோற்கடிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு நல்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இறுதி வரையும் சூழ்ச்சிகளை மேற்கொண்டதாக வெளிவிவகாரப் பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா நேற்றுத் தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்ட வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இந்நாட்டு மக்கள் பெரிதும் சந்தோஷப்படும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க அரசியல் யாப்பு திருத்தம் நேற்று முன்தினம் இடம்பெற்றது….

Read More

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பெட்ரோல் மற்றும் Wi-fi தன்சல்

வெசக் தினத்தன்று இலவச WiFi வசதிகள் கொழும்பு மற்றும் மாத்தறை ஆகிய இடங்களில் செயற்படுத்தப்படும் என ICTA தெரிவிக்கின்றது. இவ்வாறு WiFi தன்சல் வழங்கப்படுவது இலங்கை வரலாற்றிலேயே முதற் தடவை ஆகும். கொழும்பில் லேக் ஹவுஸ் வெசக் பகுதியில் இலவச WiFi தொழிற்படுத்தப்படவுள்ள அதே வேளை மாத்தறையில் பொது நூல் நிலையம் மற்றும் வைத்தியசாலை ஆகிய பகுதிகளை உள்ளடக்கும் வகையில்  இலவச WiFi செயற்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக டயலொக் மற்றும் லங்கா பெல் ஆகிய நிறுவனங்கள்…

Read More

ஒபாமா தொழுவதற்கு கற்று வருகிறார்.. சவுதி பத்திரிகையிடம் பாட்டி

அதிபர் பராக் ஒபாமாவின் தந்தைவழி தாத்தாவின் மூன்றாவது மனைவி, சாரா உமர், 90. இவர் கினியா நாட்டை சேர்ந்தவர். சாரா உமர், தன் மகனும், பராக் ஒபாமாவின் சித்தப்பாவுமான சையது ஒபாமா மற்றும் பேரன் மூசா ஒபாமாவுடன், சென்ற வாரம் மக்காவிற்கு உம்ரா செய்ய சென்றுள்ளார். பின்னர் சவுதி அரேபியாவில் இருந்து வெளியாகும், ‘அல்வதன்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், தன்னுடைய பேரன், முஸ்லிம் மதக் கோட்பாடுகளை ஏற்பதற்காகவும் , தொழுவதற்கு  கற்று வருவதாகவும் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர்…

Read More

எமக்­கான புதிய பாதை­யினை ஆரம்­பித்­துள்ளோம், முஸ்லிம்களையும் இணைத்துக்கொண்டு பயணிக்க தயார் – ஞான­சாரர்

இஸ்லாமிய சமய நடவ­டிக்­கை­க­ளுக்­காக நாம் முரண்­ப­ட­வில்லை. இந்த நாட்டை இஸ்­லா­மிய மயப்­ப­டுத்தும் முயற்சிகளுக்காகவே நாம் போராடினோம். இப்போதும் எமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இலங்கையின் உண்மையான மதம் பௌத்தம் மட்டுமே. அதை பாதுகாக்க வேண்டியது எம் ஒவ்வொருவரதும் கடமை. அந்த கடமையினையே நாம் செய்து வருகின்றோம் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார் . பெளத்த சிங்கள மக்களை பாது­காக்க தாம் புதிய அரசியல் பாதையினை உருவாக்கவுள்ளதாகவும்,…

Read More

நேபாளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விரும்புவோர் தொடர்புகொள்ளலாம் : பிரதமர் அலுவலகம் அறிவிப்பு

நேபா­ளத்தில் ஏற்­பட்ட பூகம்­பத்­தினால் அந்­நாட்டில் மக்கள் பாதிக்­கப்­பட்டு, வீடு­களை இழந்தும் உண்ண உண­வின்­றியும் துன்­பப்­ப­டு­கின்­றனர். இதன்­படி நேபாள அர­சாங்கம் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு தேவை­யான அத்­தி­யா­வ­சிய பொருட்கள் தொடர்­பி­லான பட்­டி­ய­லொன்றை இலங்கை அர­சாங்­கத்­திடம் வழங்­கி­யுள்­ளது. பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு தேவை­யான பொருட்­களை சிவில் அமைப்­பு­களோ அல்­லது தனி நபரோ வழங்க விரும்­பினால் மாவட்ட செய­லா­ள­ரிடம் ஒப்­ப­டைக்க முடியும். மேலும் இது தொடர்பில் மேல­திக தக­வல்­களை பெற­வேண்­டு­மாயின் அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தை அணுகு­மாறு பிர­தமர் அலு­வ­லகம் அறி­வித்­துள்­ளது. இதே­வேளை உலர்…

Read More

வீதி அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளரிடம் விசாரணை

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் வி .ஈ.எஸ். வீரசிங்கஹவிடம் நிதி மோசடி விசாரணை பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். வீதி அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலேயே இவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஜ. தே. க. தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று பிரதமராக இருப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் அதன் தமைமையுமே காரணமாகும்

-இர்ஷாத் ரஹ்மதுல்லாஹ்- ஜக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று பிரதமராக இருப்பதற்கு எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் அதனது தேசிய தலைமைத்துவமுமே காரணமாகும்.ஆனால் இன்று சில வங்குரோத்து நிலை அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் பிரபல்யம் ஆக வேண்டும் என்பதற்காக செல்லாத தீர்மானங்களை எடுப்பது நகைப்புக்கிடமானது என மன்னார் நகர சபையின் உறுப்பினர் நிலாமுதீன் நகுசீன் தெரிவித்தார். வன்னி மாவட்டத்தின் அரசியல் நிலவரம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேலும் அவர் கூறியதாவது –…

Read More

வேற்றுக் கிரகவாசிகளை தேடும் புதிய திட்டத்தை நாசா அதிகாரப்பூர்வமாக தொடங்கியது

வேற்று கிரகவாசிகளை தேடும் புதிய திட்டத்தை நாசா அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இந்த புதிய திட்டம் மூலம் பூமியை தவிர மற்ற கிரகங்களில் உயிரினங்கள் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதா என்பது பற்றி திவீரமாக ஆய்வு செய்யபடும். இதற்காக அமைக்கபட்டுள்ள குழுவில் உலகம் முழுவதிலுமிருந்து 12 பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை சேர்ந்த விஞ்ஞானிகள் இடம் பெற்றுள்ளனர். நாசாவின் விண்வெளி தொலைநோக்கி கெப்லர் இதுவரை, 1,000 இற்கும் மேற்பட்ட வேற்றுக கிரகங்களை கண்டறிந்துள்ளது. இவற்றில் அளவில் பூமி போன்று உள்ள…

Read More

இன்னும் 2 ஆண்டுகளில் ரோபோகாப்ஸ்: துபாய் போலீசார் தீவிர முயற்சி .

அடுத்த இரண்டாண்டுகளுக்குள் கம்ப்யூட்டர் மூளையுடன் செயல்படும் ரோபோகாப்ஸ்களை அறிமுகப்படுத்த துபாய் போலீசார் திட்டமிட்டுள்ளனர். லோம்பார்கினி கார்களை அடுத்து ‘ஃபெராரி’ கார்களையும் வாங்கி ரோந்து பணிக்கு பயன்படுத்தும் துபாய் போலீசார், உலகின் அதிநவீன விலை உயர்ந்த கார்களான ‘ஆஸ்டன் மார்ட்டின்’, ‘பெண்ட்லி’, ‘மெர்செடெஸ்’ ஆகிய சொகுசு கார்களையும் வாங்கி ரோந்து பணியில் இணைத்தனர். ‘போர்ஸ்சே பனமெரா எஸ்.இ.-ஹைப்ரிட் கார்களும் இந்த அலங்கார அணிவகுப்பு வரிசையில் சமீபத்தில் இணைக்கப்பட்டது. இந்த அதிநவீன சொகுசு கார்களில் பொருத்தப்பட்டுள்ள எஞ்சின் 5.2 வினாடிகளில்…

Read More

திருக்குர்ஆனை உண்மைப்படுத்திய உணர்ச்சிப்பூர்வ சம்பவம்….!!

நேபாள் தலைநகர் காத்மாண்டுவில் ஏக இறைவனை வணங்கும் இறையில்லமான பள்ளிவாசல் கம்பீரமாய் காட்சியளித்து வருகிறது. இந்த பள்ளிவாசலில் தினசரி ஐவேளை தொழுகை உட்பட ஜும்ஆவும் நடைபெற்று வருகிறது. திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்…. எந்த ஒரு சமுதாயமும் தனக்குரிய தவணை வந்து விட்டால் அவர்கள் ஒருகணம் கூட பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள் (திருக்குர்ஆன் 7:34) நமக்கு உரிய நேரம் வந்து விட்டால் ஒரு நொடி கூட பிந்தவும் மாட்டோம், முந்தவும் மாட்டோம், நம்முடைய நேரம் வந்து விட்டால்…

Read More

அபுதாபியில் தங்கக் கட்டிகளை வழங்கும் A.T.M. இயந்திரம் அறிமுகம்!

ஏ.டி.எம்., இயந்திரங்கள் மூலம் எளிதாக பணம் எடுப்பதற்கு, வங்கிகள் வசதி செய்து கொடுத்துள்ளது போல, ஏ.டி.எம்., இயந்திரம் மூலம் தங்கம் விற்பனையும் ஒரு சில நாடுகளில் நடந்து வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (அபுதாபி), ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளில் ஏ.டி.எம்., இயந்திரங்கள் மூலம் தங்கம் விற்பனை நடந்து வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில்தான் அபுதாபியில் ஏ.டி.எம்., இயந்திரம் மூலம் தங்கம் விற்பனை தொடங்கியது. ஆன் -லைன் மூலம் தங்கம் விற்பனை செய்துவரும் ஜெர்மனியைச் சேர்ந்த…

Read More

குவைத்தில் நிலநடுக்கத்தை பற்றி கிண்டல் செய்த இந்தியரை குத்திக் கொன்ற நேபாளி!

குவைத்தில் வேலை பார்க்கும் நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் தனது நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை பற்றி கிண்டல் செய்த இந்தியரை கொலை செய்துள்ளார். நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் குவைத்தில் வேலை செய்து வருகிறார். அவர் தங்கியிருக்கும் அறையில் இந்தியர் ஒருவரும் தங்கியிருந்தார். இந்நிலையில் அந்த இந்தியர் கடந்த சனிக்கிழமை நேபாளத்தில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கம் பற்றி கிண்டல் செய்துள்ளார். இதனால் அந்த நேபாள நபருக்கு கடும் கோபம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் பலியான நிலநடுக்கத்தை பற்றி கிண்டல் செய்த இந்தியரை…

Read More