Headlines

கடலில் நீராடச் சென்ற இருவர் பலி

நாரமில பகுதியை சேர்ந்த இரு பெண்கள் கடல் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை கடலில் நீராடச் சென்ற வேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் நாரம்மல, தம்பகிரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமியும், 26 வயதுடைய தாயொருவரும் என்று தெரிய வந்துள்ளது. சிலாபம் முன்னேஷ்வரம் கோயிலிற்கு தமது குடும்பத்தினருடன் வந்திருந்த நிலையில் கடலில் நீராடச் சென்ற வேளையே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவர்கள் இருவருடைய உடல்களும் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு,சடலம் தற்போது…

Read More

என்.எம் நசீர் தலைமையில் பொல்கஹவெல சமூர்த்தி சங்கம் உருவாக்கும் நிகழ்வு இடம்பெற்றது..

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் சிந்தனையில் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் என்.எம்.நஸீர் (MA) அவர்களின் தலைமையில் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் செயலாளரும் முன்னால் பிரதேசசபை உறுப்பினருமான அன்பாஸ் அமால்தீன் ஏற்பாட்டில்  பொல்கஹவெல பிரதேச செயலகத்தில் மினி கவமன்ட் ஆரம்பிக்க சமூர்த்தி சங்கம் உருவாக்கும் நிகழ்வு ஒரலியத்தையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பொல்கஹவெல யுவதிகளுக்கு நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதேச செயலக செயலாளர், சனச அபிவிருத்தி வங்கியின்…

Read More

கொழும்பு மாவட்ட சுயதொழில் முயற்சியாளர்களுக்கான தையல் இயந்திரம் வழங்கி வைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், மக்கள் காங்கிரஸின் மேல்மாகாண சபை உறுப்பினரும், கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளருமான பாயிஸ் அவர்களின் நிதியொதுக்கீட்டில், கொழும்பு மாவட்ட சுயதொழில் முயற்சியாளர்களுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. கொழும்பு மாவட்ட மக்கள் காங்கிரஸின் கட்சிக் காரியாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் பங்கேற்று தையல் இயந்திரங்களை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார். (ன)

Read More

சட்டத்தரணிகள் ஆஜராகக் கூடாது – காத்தான்குடியில் ஆர்ப்பாட்டம்

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் புதன்கிழமை சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து சிறுமியை கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபருக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் ஆஜராகக் கூடாது என தெரிவித்து மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு முன்னால் வியாழக்கிழமை (11) பிற்பகல் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பிரதேசத்திலுள்ள பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறுமியை துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த நபருக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் ஆஜராக கூடாது எனக் கேட்டு சுலோகங்களை…

Read More

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் தெல்தோட்ட முஸ்லிம் கிராமத்தில் சுகாதார மத்திய நிலையம் திறந்து வைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், கண்டி மாவட்ட, பாத்த ஹேவாஹெட்ட பிரதேசத்தின், தெல்தோட்ட முஸ்லிம் கொலனிக்கான சுகாதார மத்திய நிலையம் அமைக்கப்பட்டு, இன்று (08) மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட இணைப்புச் செயலாளர் இஸ்ஸதீன் றியாஸ் மற்றும் கண்டி மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஹம்ஜாட் ஆகியோரது ஆலோசனையில், பாத்த ஹேவாஹெட்ட பிரதேச சபை உறுப்பினர் கலீலுர் ரஹ்மானின் வேண்டுகோளுக்கிணங்க, இருபது இலட்சம்…

Read More

இலங்கைக்கான துருக்கி தூதுவரை சந்தித்த அமைச்சர் றிஷாட் பதியுதீன்

இலங்கைக்கான துருக்கித் தூதுவர் துன்கா ஒஸ்யுஹாதர் தலைமையிலான வர்த்தக குழுவை  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று (19) கூட்டுறவு மொத்த விற்பனை அலுவலகத்தில் சந்தித்த போது எடுத்த படம்.

Read More

புலமைப் பரிசில் பரீட்சையின் திருத்தியமைக்கப்பட்ட வெட்டுப் புள்ளிகள் வெளியாகின

ஐந்தாம் தர புலமைப் பரீட்சையின் திருத்தியமைக்கப்பட்ட வெட்டுப்புள்ளிகள் நேற்று (17) வெளியிடப்பட்டது. இதற்கமைய, கொழும்பு, கண்டி மற்றும் மாத்தளைக்கு 152 வெட்டுப்புள்ளியாகவும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு 150 வெட்டுப்புள்ளியாகவும் அமைந்துள்ளது. இதனைத்தவிர, மன்னார், முல்லைத்தீவு, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு 149 வெட்டுப்புள்ளியாக காணப்படுகின்றது. -News1st-

Read More

உயிரை பறிக்கும் உஷ்ணத்திற்கு முற்றுப்புள்ளி

தொடர் உஷ்ணத்திற்கு இன்று முதல் முற்றுப்புள்ளியாக இலங்கையில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. இலங்கையின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தொட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.

Read More

தொழிலாளர்கள் மீது குளவி தாக்குதல்

அட்டன் – எபோட்சிலி தோட்டத்தில் மாஸ்க் பிரிவில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த  2 ஆண் தொழிலாளர்கள் குளவி தாக்குதலுக்கு இலக்காகி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று காலை  9.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர். மரத்திலிருந்த குளவி கூடே இவ்வாறு கலைந்து வந்து தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட  2 தொழிலாளர்களும் சிகிச்சை பெற்று வருவதாகவும் சிகிச்சையின் பின் வீடு திரும்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

Read More

ஜனாதிபதியின் புதிய செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவை சந்தித்து வாழ்த்து தெரிவித்த அ.இ.ம.கா தேசிய அமைப்பாளரும் பாரளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூப்

ஜனாதிபதி புதிய செயலாளரராக பதவியேற்றுள்ள முன்னாள் கிழக்கு மாகாண ஆளுணருமான ஒஸ்டின் பெர்னாண்டோ அவர்களை திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவரும் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூப் அவர்கள் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் தொடர்வதட்கும் , எதிர்காலத்தில் முன்னெடுககப்படவிருக்கும் திட்டங்களுக்கு ஆலோசனைகளையும் , சிபாரிசுகளையும் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். அத்துடன் கிழக்கின் ஆளுநராக சிவில் நிர்வாக கட்டமைப்பை ஏற்படுத்தி சிறந்த சேவையை ஆற்றியமைக்கு…

Read More

முஸ்லிம் பெண்ணுக்கு அறிவுரை கூற முயன்ற நபர் பாடம் கற்றார்

பிரிட்­டனின் வேல்ஸ் பிராந்­தி­யத்தில் பஸ்ஸில் பயணம் செய்­து­கொண்­டி­ருந்த முஸ்லிம் பெண் ஒரு­வ­ருக்கு பிரித்­தா­னிய கலா­சாரம் குறித்து அறி­வுரை கூற முயன்ற நபர் ஒருவர், தானே பாடம் கற்­றுக்­கொண்ட சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளது. நியூபேர்ட் நக­ரி­லி­ருந்து சிவம்­பிரன் நகரை நோக்கி சென்­று­ கொண்­டி­ருந்த மேற்­படி பஸ்ஸில் பெண்­ணொ­ருவர் தனது மக­னுடன் உரை­யாடிக் கொண்­டி­ருந்தார். அப்பெண் முஸ்லிம் கலா­சா­ரப்­படி நிகாப்பும் அணிந்­தி­ருந்தார். இவர்கள் ஆங்­கிலம் அல்­லாத வேறொரு மொழியில் உரை­யா­டு­வதை அவ­தா­னித்த ஆங்­கி­லேய நபர் ஒருவர், மேற்­படி பெண்­ணுக்கு அறி­வுரை…

Read More

ஐ.எஸ். படையை ஒடுக்க நேட்டோ நாடுகள் உடன்பாடு

ஐ.எஸ் இன் நிதி ஆதாரங்களை முடக்கவும், அவர்களது செயல்பாடுகளை ஒடுக்கவும் நேட்டோ நாடுகளிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. நேட்டோ நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகர்களின் ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை இங்கிலாந்தின் வேல்ஸ் நகரில் நடைபெற்றது. அப்போது, ஐ.எஸ். இக்கு எதிராக ஒவ்வொரு நாடும் பங்களிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு, அதையொட்டிய முடிவு எட்டப்பட்டது. அந்தக் கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, “ஈராக் நகரங்களில் மிகப் பெரிய அழிவுகளை ஏற்படுத்தி வரும் காட்டுமிராண்டித்தனமான அமைப்பு,…

Read More