Headlines

ஆசியா பசுபிக் பிராந்தியத்தின் சர்வதேச தொழில் முனைவோருக்கான அமர்வு முதல் தடவையாக இலங்கையில்!

ஆசியா பசுபிக் பிராந்தியத்தின் முன்னணி சர்வதேச தொழில் முனைவோருக்கான கல்வித் தொடர் அமர்வு, முதல் தடவையாக தென்னாசியாவில் இடம்பெற வேண்டும் என யுனெஸ்கோ – எபீட் (UNESCO-APEID) ஆகிய அமைப்புகளின் தலைமையில் இடம்பெற்ற சந்திப்பின் முடிவையடுத்து, மைல்கல் நிகழ்வாக இந்த அமர்வு இலங்கையில் இடம்பெறுகின்றது. இந்நிகழ்வு இலங்கையின் மிக உயர்ந்த சிறிய நடுத்தர தொழில்முனைவோரான வணிக அபிவிருத்தி முகவராக இயங்கும், தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையினரை (NEDA) இலக்கு வைத்திருப்பது வரப்பிரசாதம் என கைத்தொழில் மற்றும்…

Read More

கலாவெவயில் புணர் நிர்மாணம் செய்யப்பட்ட வீதி மக்கள் பாவனைக்காக திறப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இப்பலோகம பிரதேச சபை உறுப்பினர் நளீமின் வேண்டுகோளுக்கு இனங்க அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிராத்தித்தலைவருமான இஷாக் ரஹுமானின் பன்முகப்படுத்தப்படட நிதியொதுக்கீட்டில் கலாவெவ 491 குசலானகம துலானையில் புணர் நிர்மாணம் செய்யப்பட்ட ஈச்சன்குலம் ஒழுங்கை வீதி பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானினால் மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் பிரதேச மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததனார்

Read More

சம்பந்தனின் பதவியை பறிக்க இடமளிக்கமாட்டோம் – ஜே.வி.பி.

 ஜனா­தி­பதி, பிர­தமர் கன­வுகள் கலைந்­துள்ள நிலையில் சம்பந்­தனின் எதிர்க்­கட்சி ஆச­னத்­தை­யேனும் பறிக்கும் நோக்­கத்­தி­லேயே மஹிந்த அணி­யினர் செயற்­பட்டு வரு­கின்­றனர். பாரா­ளு­மன்­றத்தில் குழப்­பங்­களை மேற்­கொள்­ளவும், பயங்­க­ர­வாத கதை­களை பரப்­பவும் இதுவே காரணம் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திஸா­நா­யக்க தெரிவித்தார். எம்­மீது பொய்க்­குற்றம் சுமத்தி எதி­ரணி பலத்­தினை குறைக்க முயற்­சிக்­கின்­றனர். ஆனால் நாம் இருக்கும் வரையில் அதற்கு இட­ம­ளிக்க மாட்டோம் எனவும் அவர் குறிப்­பிட்டார். எதிர்க்­கட்சி பத­விக்­காக தொடர்ச்­சி­யாக மஹிந்த அணி­யினர் போரா­டி­வரும் நிலை­யிலும், மக்கள்…

Read More

எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து தன்னால் உடனடியாக தீர்மானிக்க முடியாது -சபாநாயக

எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து தன்னால் உடனடியாக தீர்மானம் எதனையும் மேற்கொள்ள முடியாது என்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் தெளிவின்மை காணப்படுவதையிட்டு விளக்கமளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபையில் புதிய நிலைமையொன்று தோன்றியுள்ளது. எனவே, இது தொடர்பில் கிடைக்கக் கூடிய உதாரணங்களை கவனமாக ஆராய்ந்து தீர்ப்புக் கூறுவது சபாநாயகரை பொறுத்த விடயமாகும் என்றார். நாடாளுமன்ற மரபுகள் மற்றும்; நிலையியல் கட்டளையிட்டு பெரிதும் பேசுகின்ற பிரதமர், எதிர்க்கட்சி…

Read More

மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஹெல உறுமயவும் ஆதரவு

அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஐாதிக ஹெல உறுமயவும் எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கவுள்ளது. அண்மையில் அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஐாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

Read More

இம்முறை ஏறாவூரில் நான் நேரடியாக களமிறங்கி அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளேன் -அமீர் அலி

ஏ.எச்.ஏ.ஹுஸைன் எதிர்வரும் அரசியல் சூழல் இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மைச் சமூகங்கள் அனைத்துக்கும் குறிப்பாக, முஸ்லிம்களுக்கு அநேக இழப்புக்களை தருகின்ற ஒன்றாக அமையலாம் என்று சமூர்த்தி அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் மத்தி கல்வி வலயத்திலுள்ள அமீரலி வித்தியாலய வருடாந்த மெய்வல்லுநர் போட்டி, திங்கட்கிழமை (16) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘தொகுதிவாரி தேர்தல் முறைமையின் கீழ், அவசரமான ஒரு தேர்தல் அரசாங்கத்தினால் நடத்தப்படுகின்றபோது, அது…

Read More

ஹம்பாந்தோட்டையிலுள்ள சில எதிா்கட்சி அரசியல் வாதிகள் – சஜித் பிரேமதாச

– அஸ்ரப் ஏ சமத் – ஹம்பாந்தோட்டையில் பல்லிமல்ல சந்தியில் கடந்த ஒக்டோபா் 12ஆம் திகதி சுத்தமான குடிநீா் பெற்றுத் தருமாரு ஹம்பாந்தோட்டையில் உள்ள சில எதிா்கட்சி அரசியல் வாதிகள் அரசியல் லாபம் கருதி மக்களை ஆர்பாட்டத்தில் ஈடுபடுத்தினாா்கள் . இம் மக்களின் குடி நீா்த்திட்டத்திற்காக ஏற்கனவே என்னால் சமா்ப்பிக்கப்பட்ட அமைச்ரவைப் பத்திரத்தில் 2149 லச்சம் ருபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சா் சஜித் பிரேமதாச கூறினாா். இன்று (29) வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளா் மாநாட்டிலேயே…

Read More

மைத்திரியிடம் ஆலேசனை கேட்ட தாய்லாந்து பிரதமர்

ஊழல், மோசடிக்காரர்கள் மற்றும் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் எவருக்கும் நான் கருணை காட்டமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாத்தளை மாவட்டம் “லக்கலை” பொலிஸ் மைதானத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நாட்டை கட்டியெழுப்புவதற்கு இன்று அனைவரும் இணைந்த அரசாங்கமாக முன்னோக்கிச் செல்கின்றோம். ஊழல் மோசடிகள், சட்டவிரோதமான செயற்பாடுகள் அனைத்தையும் இல்லாதொழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுக்கும். எவரும் என்னை சந்தேகிக்க முடியும்….

Read More

2 அடி நீளமும் 34 கிலோ எடையுமுடைய உலகின் மிகப் பெரிய முத்து

2.2 அடி நீள­மான பாரிய முத்து ஒன்றை பிலிப்­பைன்ஸைச் சேர்ந்த மீனவர் ஒருவர் வைத்­தி­ருக்­கிறார். இது, உலகில் இது­வரை கண்­டு­பி­டிக்­கப்­பட்ட மிகப் பெரிய முத்து எனக் கரு­தப்­ப­டு­கி­றது. பிலிப்­பைன்ஸின் பலவான் தீவின் கடற்­க­ரை­யொன்றில் 10 வரு­டங்­க­ளுக்கு முன்னர் மேற்­படி மீனவர் இந்த முத்தை கண்­டெ­டுத்தார். இதன் பெறு­மதி சுமார் 10 கோடி அமெ­ரிக்க டொலர்கள் (சுமார் 1,546 ரூபா) எனக் கரு­தப்­ப­டு­கி­றது. எனினும், மேற்­படி மீனவர் இந்த முத்தின் பெறு­ம­தியை உண­ர­வில்லை. இம் ­முத்தை தனது அதிஷ்டப்…

Read More

றோ அதிகாரி கைது

இந்தியப் கடற்படையில் கடமைபுரியும்  இந்திய புலனாய்வுதுறை அதிகாரியொருவரை பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பாதுகாப்புப் படை கைதுசெய்துள்ளது. டான் செய்தி சேவையின் தகவல்களின்படி பலூசிஸ்தான் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது அவ்வதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகத்துக்கு பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரியொருவர் தெரிவித்தார். கைதுசெய்யப்பட்ட றோ அதிகாரி, மேலதிக விசாரணைகளுக்காக  இஸ்லாமாபாத் நகரத்துக்கு அனுப்பப்பட்டுள்ளார். பலூசிஸ்தானில் இடம்பெற்ற பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளுடன்; தொடர்புபட்டிருப்பதுடன் பலூசிஸ்தான் பிரிவினைவாதக் குழுவுடன் இந்த உளவாளிக்குத் தொடர்பு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இந்த உளவாளி,…

Read More

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான, ஒருநாள் பயிற்சிப் பட்டறை

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மூவின ஊடகவியலாளர்களுக்குமான ஒருநாள் பயிற்சிப் பட்டறை மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றினை ‘விடியல் ஸ்ரீலங்கா’ அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் கடமையாற்றும் தமிழ், சிங்கள, முஸ்லிம் இனங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கிடையில் பரஸ்பர புரிந்துணர்வைக் கட்டியெழுப்பும் நோக்கிலேயே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களுக்கிடையிலான உறவை மேம்படுத்தல், தகவல் அறியும் சட்டமூலம், அறிக்கையிடலுக்கு நவீன தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கான வழிகாட்டல்கள் ஆகிய தலைப்புகளிலும் விரிவுரைகள்…

Read More

மீன் ஏற்றுமதி தடை நீங்கும் சாத்தியம்?

இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டக் குழுவினர் இன்று கடற்றொழில் அமைச்சரை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கையின் மீன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கு முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் ஆராய இந்த இலங்கை வந்துள்ளது. ஐரோப்பாவின் இந்தக் குழு கடந்த 12ஆம் திகதி கொழும்பு வந்தது. நால்வரடங்கிய இந்தக் குழுவில் இரண்டு தொழில்நுட்ப அதிகாரிகளும் உள்ளடங்குகின்றனர். உலகெங்கும் சட்டவிரோதமான வகையில் மீன்பிடித்தொழிலை எதிர்த்துப் போராடும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இலங்கையிலிருந்து…

Read More