Headlines

பொலிஸார் – பொதுமக்களுக்கு இடையிலான உறவில் விரிசல்!

பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக புதிய பொலிஸ்மா அதிபராக பதவியேற்ற பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இன்று தனது கடமைகளை மத அனுஸ்டானங்களின் பின் பொறுப்பேற்றுக் கொண்ட பொலிஸ்மா அதிபர் அங்கு இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். பொலிஸாரின் கடமைகள் மற்றும் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை பொலிஸ்மா அதிபர் என்ற ரீதியில் தனது எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் ஊடகவியலாளர்களிடம் தெளிவுப்படுத்தி்யுள்ளார்.

Read More

19ஆவது சட்டத்திருத்தம்: உச்சநீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு

இலங்கை அரசியல் சாசனத்தின் 19ஆவது சட்டத் திருத்தத்தின் சில பிரிவுகளை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரத்தை மட்டுப்படுத்துவது, தேர்தல் நடைமுறையில் மாறுதல் கொண்டுவருவது உட்பட பல விஷயங்களை உள்ளடக்கிய அரசியல் சாசனத்தின் 19ஆவது திருத்ததை மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் சமர்பித்தது. . அமைச்சரவையின் தலைவராக பிரதமர் செயல்படுவது, அமைச்சர்களின் எண்ணிக்கையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை பிரதமருக்கு வழங்குவது போன்ற சில அம்சங்களுக்கு நாடாளுமன்ற ஒப்புதலுக்கு…

Read More

இந்திய – இலங்கை பாலம் அமைக்கப்பட்டால் அதனை தகர்ப்பேன் : கம்­மன்­பில

இந்­தியா – இலங்­கைக்கு இடையில் பாலம் அமைக்­கப்­பட்டால் அது வடக்கு, கிழக்­கையும் இந்­தி­யா­வையும் இணைப்­ப­தாக அமையும். எனவே இந்­தியா- இலங்­கைக்கு இடையில் பாலம் ஒன்றை அமைத்தால் அதனை தகர்ப்பேன் என பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் தூய்­மை­யான ஹெல உறும­யவின் தலை­வ­ரு­மான உதய கம்­மன்­பில தெரி­வித்­தார். கொழும்பு பாகொ­டையில் அமைந்­துள்ள தூய்­மை­யான நாளைக்­கான அமைப்பின் தலைமை அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் கூறு­கையில், ஆசிய அபி­வி­ருத்­தியின் உத­வியில் இலங்கை–இந்­தி­யாவை நிரந்­த­ர­மாக இணைக்கும் ஹனுமான்…

Read More

ஸ்மார்ட் கைப்பேசிகளை ஆக்கிரமிக்கும் ஆபாச வீடியோக்கள்..

 அனைத்து வகையான வசதிகளும் உள்ளடக்கப்பட்டதாக ஸ்மார்ட் கைப்பேசிகள் மாறியுள்ள நிலையில் சிறியவர்களிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் இவற்றினை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறிருக்கையில் இவ்வருட முடிவில் 136 பில்லியன் ஆபாச வீடியோக்கள் பார்வையிடப்பட்டிருக்கும் என ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு ஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்களும் சராசரியாக 348 ஆபாச வீடியோக்களை பார்வையிட்டிருப்பார்கள் என புள்ளிவிபரங்கள் மூலம் அறியப்பட்டுள்ளது. இதேவேளை இந்த எண்ணிக்கையானது மேலும் ஐந்து வருடங்களில் 55 சதவீதத்தினால் அதிகரித்திருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும்…

Read More

விஜித்த ஹேரத்க்கு, 1500 ரூபாய் அபராதம்

மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் இருந்து, பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் விடுவிக்கப்பட்டுள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் பயணித்த வாகனம் தொலைபேசிக் கம்பம் ஒன்றுடன் மோதி, நேற்று முன்தினம் இரவு இராஜகிரிய பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியது. இதன்பின்னர் இவருக்கு எதிராக மது போதையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. இது தொடர்பில் வெலிகடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட விஜித்த ஹேரத், பின்னர் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். எதுஎவ்வாறு…

Read More

சர்வதேச வர்த்தக உடன்பாடு தொடர்பிலான செயலமர்வில் அமைச்சர் ரிஷாட் முக்கிய உரை……

ஊடகப்பிரிவு 2013 ஆம் ஆண்டு சர்வதேச ரீதியில் கையெழுத்திடப்பட்ட “வர்த்தக வசதிகள் உடன்பாடு” தொடர்பில் இலங்கை ஏற்றுமதி வர்த்தகர்களுக்கு தெளிவுபடுத்தும் விழிப்புணர்வுச் செயலமர்வு நாளை (26) கொழும்பு சின்னமன் கிரேண்ட் ஹோட்டலில் ஆரம்பமாகின்றது. முதல் நாள் அமர்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டு தொடக்க உரை ஆற்றவுள்ளார். இந்த செயலமர்வை ஜெனீவாவைத் தளமாகக் கொண்டியங்கும் வர்த்தகத்திற்கான உலகளாவியக் கூட்டு (Global Alliance For Trade in Geneva) மற்றும் கொழும்பில் இயங்கும்…

Read More

மகிந்த ராஜபக்சவுக்கு நல்லதொரு அடியை அமீர் அலி அடித்தார் -ரஜித்த சேனாரத்தின

அஸ்ரப் ஏ சமத் முன்னாள் கல்வியமைச்சர் பதியுத்தீன் மஹ்முதின் மகன் டாக்டர் தாரீக் மஹ்முதினை தலைவராக் கொண்ட சூறாக் கவுன்சிலின் ஆதரவுடன் 67வது சுதந்திர தினத்தினை முஸ்லீம்கள் கொண்டாடும் ;முகமாக சுதந்திரம் பற்றிய பேச்சுக்கள் இன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. சுகாதார அமைச்சர் ரஜித்த சேனாரத்தின உரையாற்றும்போது– முஸ்லீம்கள் இந்த நாட்டுக்கு வரும்போது ஒரு போதும் பெண்களை கொண்டு வரவில்லை அவர்களது முதலாவது கப்பல் எனது தொகுதியான பேருவளையில் தான் வந்து இறங்கியது. அவர்கள் முதலில்…

Read More

தபால்மூல வாக்களிப்பிற்கான வாக்கட்டைகள் அச்சிடும் பணிகள் பூர்த்தி

பொதுத் தேர்தலுக்கான தபால்மூலம் வாக்களிப்பவர்களுக்கான வாக்கட்டைகள் அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளன. அச்சிடப்பட்ட அனைத்து தபால் மூலம் வாக்காளர்களின் வாக்கட்டைகளும் தேர்தல்கள் ஆணையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகர் காமினி பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். ஏனைய உத்தியோகபூர்வ வாக்கட்டைகள் அனைத்தும் விரைவாக அச்சிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, கடந்த ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில் இம்முறை கிடைத்துள்ள விண்ணப்பங்களின் பிரகாரம் தபால் மூலம் வாக்களிப்போர் எண்ணிக்கை 25இ000 வரை அதிகரித்துள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவிக்கின்றார். இதனிடையே, எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான…

Read More

சதாம் ஹூசைன் நல்ல மனிதர் – ட்ரம்ப்

அமெரிக்காவின் ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் அவர்கள், சதாம் ஹூசைனை ஒரு நல்ல மனிதர் அவர்கள் பயங்கரவாதிகளிற்கு எதிராகப் போரிட்டார் என்று தெரிவித்துள்ளார். சதாம் ஹூசைனும், லிபிய அதிபர் கடாபியும் இன்று உயிருடன் இருந்தால் உலகம் நன்றாக இருந்திருக்கும் என்று குறிப்பிடும் டொனால்ட் ட்ரம்ப் இப்போதும் முஸ்லிம்களை எதிர்க்கின்றார்.

Read More

தொடரும் அதிரடி கைது நடவடிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் கலையரசன் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (27) திருக்கோவில் பகுதியில் வைத்து முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்  ராம் கைது  செய்யப்பட்டதை தொடர்ந்தே திருகோணமலை அரசடிப் பகுதில் வைத்து கலையரசன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More

ஐ.நா. சபையில் ‘ராபியா’ அடையாளத்தை காட்டி உரை நிகழத்திய துருக்கிய ஜனாதிபதி

(Inamullah Masihudeen) தற்பொழுது அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் தாபனத்தின் 69 ஆவது பொது சபை மாநாட்டில் நேற்று உரையாற்றிய துருக்கி ஜனாதிபதி ரஜப் தயிப் அர்டோகான் எகிப்தின் சதிப்புரட்சி அரசினை சாடியதோடு பார்வையாளர்களாக இருக்கும் சர்வதேச பிராந்திய சக்திகளையும் அக்கிரமத்தின் பங்காளிகளாக வர்ணித்தார். பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்றொழித்து, மக்களின் நியாயமான ஜனநாயக போராட்டங்களை கனரக ஆயுதங்கள் கொண்டு அடக்கி எகிப்தின் சட்டபூர்வமான அரசை கவிழ்த்து ஜனாதிபதியையும் ஏனைய…

Read More

ஜனாதிபதியின் இணையத்தை முடக்கியவர்கள் பிணையில் விடுதலை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இணையத்தளத்தை ஹேக் செய்த இரு இளைஞர்களையும் பிணையில் விடுதலை செய்து கொழும்பு பிரதான நீதிமன்ற நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டார். ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இணையத்தை ஹேக் செய்த குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களில் 17 வயது மாணவரை 10 இலட்சம் ரூபா சரீரப் பிணை இரண்டிலும், 27 வயதான இளைஞரை 10 இலட்சம் ரூபா சரீரப் பிணை நான்கும், 25 000 ரூபா ரொக்கப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரையும்…

Read More