Headlines

கண் தொற்று நோய் தீவிரம் பொதுமக்கள் அவதானம்

ஜுனைட் . எம். பஹ்த் நாட்டின் பலபிரதேசங்களில் புதிய கண் நோயொன்று தற்போது பரவி வருவதாக காத்தான் குடி சுகாதார வைத்திய அதிகாரி  U.L.M.நஸ்ருத்தீன்  பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர் . “வைரல் கண் ஜக்டிவைடிஸ்” என இந்நோய் பெயரிடப்பட்டுள்ளது.  இந்த நோய்குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் இது ஒருவகை வைரஸ் இனால் ஏற்படுகின்றன கண் சிவத்தல், கண்ணில் நீர் வடிதல் என்பன இந்நோயின் அறிகுறிகளாக காணப்படுகின்றது. இந்த அடையாளங்கள் கண்ணிலாவது காணப்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கோ அல்லது அருகிலுள்ள அரச…

Read More

விளையாட்டுக் கழகங்களுக்கான காரியாலயத் திறப்பு விழா!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பிரதேச வாாியாக கால்பந்தாட்டக் கழகம், கிாிக்கட் கழகம் மற்றும் இளைஞர் கழகம் போன்றவற்றை உருவாக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக, அண்மையில் அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேசத்தில் அங்குராா்ப்பண நிகழ்வொன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் கொலேஐ் ஒப் ஹெல்த் சயன்ஸ் கல்லூாியின் பணிப்பாளரும், மக்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தருமான டாக்டர். முனாஸிக் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தாா். பொத்துவில் பிரதேசத்தில் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தோ்தலில் பங்குபற்றி வெற்றிபெற்ற பிரதேச…

Read More

பள்ளிவாசலின் நிர்மானப்பணிகளுக்கு 100 சீமெந்து பக்கட்டுக்கள் அமைச்சர் சஜித் வழங்கிவைப்பு

அஸ்ரப் ஏ சமத் ஹம்பாந்தோட்ட வீரக்கெட்டிய யக்கஸ்முல்ல ஜும்ஆப் பள்ளியவாசலுக்கு சமுர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசவின் ‘சஸூனட்ட அருன’ எனும் வேலைத்திட்டத்தின் கீழ் பள்ளிவாசலின் நிர்மாணப்பணிகளுக்காக 100 சீமெந்து பக்கட்டுக்கள் நேற்று கையளிகக்ப்பட்டது. இந் நிகழ்வின்போது பள்ளிவாசலின் நிருவாக உறுப்பினர்கள், பிரதேச வாழ் முஸ்லீம்களும் கலந்து கொண்டனர். கடற்றொழில் பிரதியமைச்சர் திலிப் விதாஆராச்சியும் ;கலந்து கொண்டார்.

Read More

வெள்ளைவான் கடத்தல்களுடன் தொடர்பு கிடையாது :கோத்தபாய

வெள்ளைவான் கடத்தல்களுடன் தொடர்பு கிடையாது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தம்மீது சுமத்தியுள்ள கடத்தல் மற்றும் ஏனைய குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் எஸ்.புலித்தேவனுடன் தாம் எவ்வித தொடர்புகளையும் பேணவில்லை என அவர் தெரிவித்துள்ளார். தமக்கு எதிராக குற்றம் சுமத்துபவர்கள் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Read More

அரசியல் யாப்பு மாற்றங்களில் சிவில் சமூக அமைப்புகள் அவதானம் செலுத்தி முன் மொழிவுகளை தயார் படுத்துங்கள் – அமைச்சர் றிஷாத்

இக்பால் அலி “வரலாற்றின் முன் எப்போதும் இல்லாதவாறு இந் நாட்டின் ஆட்சி மாற்றத்தில் முஸ்லிம்கள் பெரும் பங்களிப்பு செய்ததொரு வரலாற்று புகழ் மிக்க தேர்தலொன்றையே நாம் சந்தித்தோம். இன்று நாட்டில் நிம்மதி சந்தோசம் நிலவுகின்றது, அரசியல், மற்றும் கொள்கைரீதியில் பல் வேறு கருத்து வேற்றுமைகளை கொண்ட சக்திகள் ஒன்று சேர்ந்து இவ்வரசாங்கத்தை அமைத்துள்ளோம். மேலும் குறுகிய எதிர்காலத்தில் பல்வேறு அரசியல் மாற்றங்களை இலங்கை சந்திக்கவுள்ளது, குறிப்பாக தேர்தல் முறை மாற்றங்கள் பற்றி அரசின் மேல்மட்ட அவதானம் பதிவாகியுள்ளது….

Read More

மக்கள் காங்கிரஸின் இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர் அன்வர் வரிப்பத்தன்சேனை பகுதியில் பணிகளை ஆரம்பித்தார்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஐ.அன்வர்,  ஊரின் அபிவிருத்தி மற்றும் கட்டுமானப் பணிகள், கல்வி அபிவிருத்தி தொடர்பில் ஊர்ப் பிரமுகர்களுடன்  கலந்தாலோசித்தார். அத்துடன் இறக்காமம் பிரதேசபைக்குட்பட்ட பொது விளையாட்டு மைதானத்துக்குச் சென்று பார்வையிட்ட அவர், மைதானத்தை செப்பனிடல், சுத்தப்படுத்தல் போன்ற வேலைகளைக் கண்டறிந்துஅதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். மேலும் மின்விளக்குகள் அற்ற பாதைகளைக் கண்டறிந்து, அந்த வீதிகளுக்கான மின்விளக்குகள் பொருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    

Read More

13 வருட கல்வி அவசியமாக்கப்படவுள்ளது – பிரதமர்

தமது ஆட்சிகாலத்தில் 13 வருட கல்வியை அவசியப்படுத்தவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அந்த காலத்துக்குள் பாடசாலைகளுக்கு செல்ல சிரமங்கள் இருக்குமாக இருந்தால் அதற்காக நிவாரணங்கள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆசிரியர்களை பொறுத்தவரையில் அவர்கள் கல்வி கற்பித்தல் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளை தவிர வேறு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படக் கூடாது. அவர்கள் மாணவர்களுக்கு முழு கல்வியையும் போதிக்கும் செயலை மாத்திரம் மேற்கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Read More

நட்பு ரீதியான கப்பலுக்கு அமோக வரவேற்பு

ஜப்பான் நட்பு ரீதியான கப்பல் நான்கு வருடங்களின் பின்னர் கொழும்பு துறைமுகத்தை நேற்று வந்தடைந்தது. 12 நாடுகளைச் சேர்ந்த சுமார் 243 பேர் இந்த கப்பலில் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த கப்பல் 28ஆவது தடவையாக கடந்த மாதம் 28ஆம் திகதி ஜப்பானின் யோகோஹமா துறைமுகத்திலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்து நேற்று நாட்டை வந்தடைந்துள்ளது. இதன்படி, இந்த கப்பலில் வருகைத் தந்திருந்த இளைஞர் யுவதிகளை நேற்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கப்பலுக்கு சென்று சந்தித்து கலந்துரையாடல்களை…

Read More

மியன்மார் தேர்தல்: தோற்றதும் பேய் வென்றதும் பேய்?

13 மில்லியன் முஸ்லிம்களின் வாக்குரிமை மறுக்கப்பட்ட நிலையில் மியன்மாரில் இடம்பெற்ற தேர்தலில் ஆங்சாங் சூயி தலைமையிலான எதிர்க் கட்சி வெற்றியீட்டி ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை பலத்தை பெறும் என ஆரம்பகட்ட தேர்தல் முடிவுகளைக் கொண்டு எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் கட்சி ஏற்கனவே தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. அமைதிக்காக நோபல் விருது வென்ற ஆங்சாங் சூயின் முஸ்லிம் சிறுபான்மை மீதான அடக்குமுறைக்கு எதிராக கண்டனம் தெரிவிக்காததுடன் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை தொடர்பில் இதுவரை வாய்திறந்தது இல்லை. இவருக்கு நோபல் விருது…

Read More

கற்பழிக்க முயன்றவனை கத்தியால் குத்திய பெண்ணுக்கு தலை துண்டிப்பு

ஈரானை சேர்ந்த பெண் ரெகானே ஜப்பாரி (26). கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை கற்பழிக்க முயன்ற ஒருவனை கத்தியால் குத்தி கொலை செய்தார். அதனால் கைது செய்யப்பட்ட ஜப்பாரிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்தார். அங்கும் அவரது தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் அவரை மன்னிக்க மறுத்ததால் இன்று அவர் தூக்கிலிடப்படுகிறார்.

Read More

தமக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படலாம் – மஹிந்த

கிருலப்பனையில் நடைபெற்ற மேதின கூட்டத்தில் கலந்து கொண்டமைக்காக, தமக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மகிந்த ஆதரவாளர்களால் நேற்றைய தினம் (1) கிருலப்பனையில் மேதினக் கூட்டம் நடத்தப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மகிந்த ராஜபக்ஷ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் சிறிலங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர். இந்த நிலையில் தமக்கும், தமக்கு ஆதரவாக செயற்பட்ட சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்…

Read More