Headlines

மஹிந்த ராஜபக்ச நிதியத் தலைவர் மீதும் விசாரணை!

மஹிந்த ராஜபக்ச அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் நிதி மோசடி தொடர்பான பொலிஸ் பிரிவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். சுமார் 100 மில்லியன் ரூபா ஊழல் தொடர்பிலேயே இந்த விசாரணை இடம்பெற்றுள்ளது. ஹோமாகம தியகம மைதான அமைப்பு பணிகளின் போது இந்த நிதி மோசடி இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மைதான அமைப்பின் போது தனியார் ஒப்பந்தக்காரர்களும் அரசாங்கம் ஒப்பந்தக்காரர்களுடனும் இணைந்து மோசடி மேற்கொள்ளப்பட்டதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த மைதான அமைப்பு தொடர்பில் ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் லலித் வீரதுங்கவும் அண்மையில்…

Read More

தீவிரவாதப் பட்டியலில் இருந்து ஹமாஸ் ஐ நீக்கும் தீர்ப்புக்கு ஐரோப்பிய யூனியன் எதிர்ப்பு!

உலகத் தீவிரவாத அமைப்புக்களின் பட்டியலில் இருந்து ஹமாஸ் ஐ நீக்க சமீபத்தில் ஐரோப்பிய யூனியனின் நீதிக்கான உயர் நீதிமன்றம் டிசம்பரில் தீர்மானம் மேற்கொண்டது. ஆனால் ஐரோப்பிய யூனியன் இதற்குச் சம்மதிக்காது ஹமாஸ் போராளிகளைத் தொடர்ந்து தீவிரவாதப் பட்டியலில் நீட்டிக்குமாறு சமீபத்தில் மனு தொடுத்ததை அடுத்து ஐரோப்பிய யூனியனை திங்கட்கிழமை கடுமையாகச் சாடியுள்ளது ஹமாஸ் அமைப்பு. காஸாவில் இருந்து ஹமாஸ் இன் பேச்சாளர் சமி அபு ஷுஹ்ரி பத்திரிகைகளுக்கான மின்னஞ்சல் வழியிலான அறிவிப்பில், இவ்விவகாரம் தொடர்பாகத் தகவல் அளித்தார்….

Read More

“நபிகள் நாயகத்தின் அடக்கத்தலமருகிலும் விவாதத்திற்கு தயார்” – ஞானசார

பௌத்த சமயத்திற்கு ஏற்படும் அழுத்தங்களுக்கு எதிராக பாணந்துறை கொள்கை போன்ற வாத விவாதங்களுக்கு தயார் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பி்ல் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், பன்றி ஒற்றன் அண்மையில் எமக்கு விடுத்த கொலை அச்சுறுத்தல் பேச்சு காரணமாக மிகவும் சிறந்த வழி உருவாகியுள்ளது. அங்காங்கே இருந்து கொண்ட திருட்டு கல்லை பொறுக்கி கண்ணாடி மாளிகைகளுக்கு கல்லெறியாமல்,…

Read More

ஐ.நா விசாரணை அறிக்கையை தாமதப்படுத்தும் யோசனைக்கு ஆணையாளர் ஹுசைன் ஆதரவு

ஐ.நா அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதனை சில மாதங்களுக்கு காலம் தாழ்த்துமாறு இலங்கை அரசாங்கம் கோரியிருந்தது. புதிய விசாரணைப் பொறிமுறைம ஒன்றை உருவாக்கும் நோக்கில் இவ்வாறு அவகாசம் கோரப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள 30ம் அமர்வுகள் வரையில் இலங்கை குறித்த விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதனை ஒத்தி வைக்கும் யோசனையை ஆதரிக்கின்றேன். இலங்கை நிலைமைகளின் மாற்றம் மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையிலேயே அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதனை காலம் தாழ்த்துவது நியாயமானது என கருதுகின்றேன் என ஆணையாளர் தெரிவித்துள்ளார். அறிக்கை சமர்ப்பிப்பது குறித்து ஐக்கிய நாடுகள்…

Read More

பொதுபல சேனா ஜனாதிபதி, பிரதமருக்கு மகஜர்

அர­சாங்கம் இஸ்­லா­மிய அபி­வி­ருத்தி வங்­கியின் உறுப்­பு­ரி­மையை பெற்றுக் கொள்­வ­தற்கு எதிர்ப்புத் தெரி­வித்தும் இதன் மூலம் நாட்டில் ஷரீஆ சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த முயற்­சிப்­பதை எதிர்த்தும் பொது­ப­ல­சேனா அமைப்பு ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ருக்கு மக­ஜ­ரொன்­றினைக் கைய­ளித்­துள்­ளது. கடந்த வெள்­ளிக்­கி­ழமை மாலை பொது­ப­ல­சே­னாவின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் டிலந்த விதா­ன­கே­யினால் இந்த மகஜர் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. குறிப்­பிட்ட மக­ஜரில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது; இலங்கை தற்­போது எதிர்­நோக்­கி­யுள்ள பொரு­ளா­தார நெருக்­கடி கார­ண­மாக ஒரு பில்­லியன் அமெ­ரிக்க டொலரைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக இலங்­கையில் சமய ரீதி­யி­லான வங்கி முறை­யொன்­றினை அரசு…

Read More

போலி பேஸ்புக் கணக்குகள் தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள்

இந்த வருடம் இதுவரையான காலப் பகுதியில் இணையத்தளங்கள் தொடர்பில் 1150 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கை ஒன்றியம் தெரிவித்துள்ளது. போலி பேஸ்புக் கணக்குகள் தொடர்பிலேயே அதிகளவிலான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஒன்றியத்தின் சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த கூறியுள்ளார். புகைப்படங்களை போலியான முறையில் பயன்படுத்தி பேஸ்புக் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளதாக அநேகமானவர்கள் முறைப்பாடு செய்திருந்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அனைவரும் பார்ப்பதற்கு ஏதுவாக புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றமையே இந்தப் பிரச்சினைக்கான காரணம் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக…

Read More

ஊழல் மோசடிகளுக்கு எதிரான எமது வேட்டை ஆரம்பமாகிவிட்டது : அனுரகுமார திஸாநாயக்க

முன்­னைய ஆட்­சியில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் ஊழல் மோச­டிகள் தொடர்பில் தொடர்ச்­சி­யான முறைப்­பா­டு­களை தற்­போ­தைய புதிய அர­சாங்கம் மூலம் வெளிப்­ப­டுத்தும் நட­வ­டிக்கை தொடர்­கின்­றது. முன்­னைய ஆட்­சியில் முக்­கிய பிர­மு­கர்கள் பலரின் ஊழல்கள் தொடர்­பி­லான ஆதா­ரங்கள் எம்­மிடம் இருக்கின்றன. ஊழலுக்கு எதிரான எமது வேட்டை ஆரம்பமாகிவிட்டது என்று மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனுர குமார திஸா­நா­யக்க தெரிவித்தார் முன்­னைய அர­சாங்­கத்தின் முக்­கிய உறுப்­பி­னர்­க­ளான பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக் ஷவிற்கும் எதி­ரான பாரிய…

Read More

தோல்வி மனபாங்கை எடுத்துக் காட்டும் ரவூப் ஹக்கீமின் அம்பாறை பேச்சு – ஜெமீல்

மு. கா. வேட்பாளர்களே ! சிங்கள பகுதிகளில் வாக்குகளை தேடுங்கள் ! முன்னால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் தற்போதைய அகிலக் இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய பட்டியல் வேட்பாளரருமான ஜெமீல் அவர்கள் நேற்றைய தினம் சாய்ந்தமருது கட்சி ஆதரவாளர்களை சந்தித்து அம்பாறை மாவட்ட தற்போதைய அரசியல் களநிலவரங்களை பற்றி கருத்து தெரிவித்து உரையாற்றுகையில் கூறினார். அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில் கூறியதாவது நேற்றைய முன்தினம் ஸ்ரீ. மு. கா. தலைவர்…

Read More

இலங்கையில் இரட்டைப் பிரஜாவுரிமை மீண்டும் நடைமுறைக்கு வந்தது!

வெளிநாட்டுப் பிரஜாவுரிமையுடன் வாழும் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் நடைமுறை நேற்று வியாழக்கிழமை (ஜனவரி 01, 2015) முதல் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இரட்டைப் பிரஜாவுரிமை வழங்குகின்ற நடைமுறையை இலங்கை அரசாங்கம் 2011 ஆம் ஆண்டில் தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்திருந்தது. ஆரம்பத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு நிரந்தர வதிவிட உரிமையும், அதன் பின்னர் இரட்டைக் குடியுரிமையும் வழங்கப்பட்டுவந்தது. ஆனால், சொந்த நாட்டில் வந்து நிரந்தரமாக வசிப்பதற்கும், பணத்தை முதலீடு செய்வதற்கும் பிள்ளைகளை அரச…

Read More

சிங்கள மக்களுக்கு வீடுகள் அமைச்சர் றிசாத் அடிக்கல்லை நாட்டினார்

வவுனியா வடக்கு  ஈரட்பெரிய குளத்தில் சிங்கள மக்களுக்கென அமைச்சர் றிசாத்தின் சொந்த முயற்சியினால் சுமார் 25 வீடுகள் கட்டப்படவுள்ளன. இதற்கான அடிக்கல்லை இன்று (02/06/2016) அந்தப் பிரதேசத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீன் நாட்டி வைத்தார். இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் ஜெயதிலக, அமைச்சரின் வவுனியா இணைப்பாளர் முத்து முஹம்மத், பொதுசனத் தொடர்பு அதிகாரி மொஹிடீன் உட்பட பலர் பங்கேற்றனர். இன்று காலை இடம்பெற்ற இந்த நிகழ்வின் பின்னர் வடமாகாண சபை உறுப்பினர் ஜயதிலக கருத்துத் தெரிவிக்கும்…

Read More

துபாயில் பெரும் தீ விபத்து. இரு 5 மாடி கட்டிடங்கள் சாம்பல் (வீடியோ & படங்கள்)

துபாயின் தேரா பகுதியில் இரு 5 மாடி கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்ததால் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. துபாயின் தேரா பகுதியில் சலாவுதீன் சாலையில் உள்ள கிரவுன் ப்ளாசா மாலுக்கு அருகே உள்ள இரு 5 மாடி கட்டிடங்களில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த இரு மாடி கட்டிடங்களும் தற்போது முழுவதுமாக எரிந்து கொண்டுள்ளன. இக்கட்டிடங்கள் முராகாபாட் போலீஸ் நிலையம் முன்பாக உள்ளன. கடந்த 30 நிமிடங்களுக்கு முன்பு இத்தீவிபத்து ஏற்பட்டது. இதன் அருகே உள்ள பெட்ரோல் பங்கில்…

Read More

தேசிய சங்க சபை முன்வைத்த 15 கோரிக்கைகளை மைத்திரிபால ஏற்றுக்கொண்டார்

இலங்கையின் பௌத்த மக்களிடையில் செல்வாக்கு பெற்றுள்ள தேசிய சங்க சபை, பொது வேட்பாளர் மைத்திரிபாலவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளது. நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்தல், சிறந்த நிர்வாகத்தை ஏற்படுத்தல் உட்பட்ட பல விடயங்கள் தொடர்பில் அந்த சங்கம் நேற்று மைத்திரிபாலவுடன் உடன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன்போது சங்க சபையின் பொதுசெயலாளர் வண. பஹியங்கல ஆனந்தசாகர தேரர் முன்வைத்த 15 அம்சக் கோரிக்கையை மைத்திரிபால ஏற்றுக்கொண்டார்.. இதனையடுத்து கருத்துரைத்த தேரர், தாம் மைத்திரிபாலவின் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு ஆதரவளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Read More