Headlines

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் அரக்கியால பாடசாலை மைதானம் புனரமைப்பு!

  -ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், குருநாகல், அரக்கியால முஸ்லிம் மஹா வித்தியாலய விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்திப் பணிகள் நேற்று (12) ஆரம்பித்து வைக்கப்பட்டது. முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எம்.சி. இர்பானின் வேண்டுகோளுக்கிணங்க, நீண்டகாலம் புனரமைக்கப்படாமல் இருந்த, அரக்கியால பாடசாலை மைதானத்தின் அபிவிருத்திக்காக இருபது இலட்சம் ரூபா நிதி அமைச்சரினால் ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நசீர் தலைமையில் இடம்பெற்ற…

Read More

தொழில் முயற்சியாளர் விருது விழா!

நாட்டின் தொழில் முயற்சியாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நோக்குடன் இலங்கை வர்த்தக சங்கமும், கைத்தொழில் சபையும் இணைந்து வருடாந்தம் ஏற்பாடு செய்துவரும் ஆண்டின் சிறந்த தொழில் முயற்சியாளர் விருது விழா, ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் (11) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அமைச்சர்களான ரிசாட் பதியுதீன், தயா கமகே, மலிக் சமரவிக்கிரம ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 22 வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்விருது விழாவில் ஆண்டின் சிறந்த தொழில்…

Read More

மல்கடுவாவ பிரதேச மக்கள் சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- குருநாகல் மாவட்டத்தின்  மல்கடுவாவ பிரதேச பெரும்பான்மை மக்களுடனான சந்திப்பொன்று, கடந்த ஞாயிற்றுக்கிழமை (10)  மல்கடுவாவ பிரஜா மண்டபத்தில்  இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட இளைஞர்  இணைப்பாளரும், லங்கா சதொச நிறுவனத்தின் முகாமைத்துவ ஆலோசகருமான  அசார்தீன் மொய்னுதீனின் தலைமையில் இடம்பெற்ற  இந்த சந்திப்பில், மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள், சேவைகள்  மற்றும் மக்கள் காங்கிரஸின் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.    

Read More

பாகிஸ்தான் அரிசி ஏற்றுமதியாளர் சங்கத்தினருடனான சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- பாகிஸ்தான் நாட்டின் அரிசி ஏற்றுமதியாளர் சங்கத்தின் உயர் அதிகாரிகளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று மாலை (12)  அமைச்சு அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இக்கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் கே. டி. என். ரஞ்சித் அசோக, கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனத்தின் தலைவர் ரிஸ்வான் மற்றும் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ரிப்கான் பதியுதீன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.        

Read More

இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கான முதலாவது ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ வழிகாட்டி வெளியீடு!

-ஊடகப்பிரிவு- ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ திட்டத்தின் கீழ் இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கான முதலாவது படிப்படியாக விபரிக்கும் அகல் விரிவான வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கான “ஐரோப்பிய ஒன்றிய GSP+ வணிக வழிகாட்டி” என்ற தலைப்பில் அமைந்துள்ள இந்த வழிகாட்டி கையேடு, ஜெனீவாவில் அமைந்துள்ள சர்வதேச வணிக மையமும் [ITC], இலங்கை அரசாங்கமும் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் உருவாக்கப்பட்ட இந்த வழிகாட்டி கையேட்டை இப்போது இணையத்தளத்தில் பார்வையிடலாம். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்,…

Read More

“புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள முஸ்லிம் கூட்டமைப்பால் கிழக்கில் பாரிய மாற்றம் ஏற்படும்” பிரதி அமைச்சர் அமீர் அலி!

  -முர்ஷித்- புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள முஸ்லிம் கூட்டமைப்பு கிழக்கிலும், ஏனைய பிரதேசங்களிலும் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும், பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி, மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதி அமைச்சர அமீர் அலி தலைமையிலான குழுவினர் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் கோறளைப்பற்று பிரதேசசபைக்கான கட்டுப்பணத்தினை திங்கட்கிழமை (11) செலுத்தினர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கோறளைப்பற்று பிரதேச சபையில் போட்டியிடுகின்றது….

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அநுராதபுர மாவட்டத்தில் மயில் சின்னத்தில் தனித்து களமிறங்குகின்றது!

-ஊடகப்பிரிவு-    அநுராதபுர மாவட்டத்திலுள்ள அநுராதபுர நகர சபை, ஹொரவப்பத்தானை பிரதேச சபை, கஹட்டகஸ்கிகிலிய பிரதேச சபை, இப்பலோகம பிரதேச சபை, கெக்கிராவ பிரதேச சபை, மதவாச்சி பிரதேச சபை ஆகியவற்றில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தனது மயில் சின்னத்தில் தனித்து போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. புத்தளம் மாவட்டத்தின் வனாத்தவில்லு பிரதேச சபையிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியிருக்கின்றது. மக்கள் காங்கிரஸின் செயலாளர் எஸ்.சுபைர்தீன் இன்று காலை (12) அநுராதபுர…

Read More

பிறைந்துறைச்சேனை அல்/இஸ்மா பாலர் பாடசாலை மாணவர் விடுகை விழா!

-முர்ஷித்- சிறுபான்மை சமூகத்தினர் இலகுவாக பணக்காரராக வர வேண்டும் என்று நினைத்து, போதை மாத்திரைகளை விற்பனை செய்கின்றார்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை அல் / இஸ்மா பாலர் பாடசாலை மாணவர் விடுகை விழா அஸ்ஹர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது  பிரதம அதிதியாகக்  கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே  இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்- பௌத்த நாட்டிலே சிறுபான்மை சமூகமாக வாழ்கின்றோம்…

Read More

கண்டி மாவட்டத்தில் வேரூன்றும் மக்கள் காங்கிரஸ்! மயில் சின்னத்தில் தனியாக போட்டியிடவும் ஆலோசனை!

-ஊடகப்பிரிவு- கண்டி மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது கட்சிப் பணிகளை விரிவுபடுத்தியதனை அடுத்து, அந்த பிரதேசத்தில் உள்ள பல சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள் பலர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம்.காதரின் (கம்பளை காதர் ஹாஜியார்) மருமகன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உடுநுவர பிரதேச சபை உறுப்பினர்களான நசார், உடையார், ஹனீபா ஆகியோர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர்,…

Read More

திருமலை, மட்டக்களப்பு, அனுராதபுரம் மாவட்டங்களின் பெரும்பாலான சபைகளில் மக்கள் காங்கிரஸ் மயிலில் குதிக்கின்றது!

  -ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திருமலை, மட்டக்களப்பு, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் மயில் சின்னத்தில் தனித்துக் களமிறங்குவதாகவும், திருமலை, மட்டக்களப்பு மாவட்டங்களின் உள்ளூராட்சி சபைகளுக்கான கட்டுப்பணத்தை செயலாளர் எஸ்.சுபைர்தீன், அந்தந்த மாவட்டங்களின் செயலகங்களில் செலுத்தியதாகவும் மக்கள் காங்கிரசின் அரசியல் விவகார சட்டப் பணிப்பாளர் ருஷ்தி ஹபீப் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகரசபை, கோரளைப்பற்று பிரதேச சபை, கோரளை மேற்கு பிரதேச சபை, ஏறாவூர் பற்று பிரதேச சபை, காத்தான்குடி நகரசபை ஆகியவற்றிலும், திருகோணமலை…

Read More

அம்பாறை முஸ்லிம் பிரதேசங்களில் மயில் சின்னத்தில், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு கட்டுப்பணம்…

-ஊடகப்பிரிவு-    அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு, இன்று (11) அம்பாறை மாவட்டத்தில் பல பிரதேசங்களில் கட்டுப்பணத்தை செலுத்தியதாக, மக்கள் காங்கிரஸின் அரசியல் விவகாரப் பொறுப்பாளரும், சட்டத்தரணியுமான ருஷ்தி ஹபீப் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் எஸ்.சுபைர்தீன், இன்று காலை அம்பாறை மாவட்ட செயலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியதாக அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, அக்கரைப்பற்று மாநகர சபை, அக்கரைப்பற்று பிரதேச சபை, பொத்துவில் பிரதேச…

Read More

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் களமிறங்க இளைஞர்கள் முண்டியடிப்பு! சிராஸின் அணுகுமுறைக்கு வரவேற்பு…

ஏ.எச்.எம். பூமுதீன் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வில் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. அம்பாறை மாவட்டம் வழமை  போன்று சூடுபிடித்துள்ளது. கட்சியால் அதிகாரமளிக்கப்பட்டோர் தத்தமது கட்சி வேட்பாளர் தெரிவை மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன், மு.கா முன்னாள் செயலாளர் நாயகம் ஹஸனலி தேர்தல் கூட்டு வைத்து “ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு” எனும் பெயரில் அம்பாறை மாவட்டத்தில் மயில் சின்னத்தில் போட்டியிடவுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் மற்றும் தமிழ் பிரதேச உள்ளுராட்சி சபைகளில் கூட்டமைப்பு போட்டியிடவுள்ளன….

Read More