Headlines

‘வீசி’ தோற்பார் என்றால் வழக்குத் தாக்கல் எதற்கு?

சம்மாந்துறை ஆசிக் அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் முன்னாள் உப வேந்தர் இஸ்மாயில் தோற்பார் எனக் கூறும் முகா – அவரை பாராளுன்றம் செல்ல அனுமதிக்கக் கூடாது என வழக்குத் தாக்கல் செய்துள்ளமை எதற்காக? நியாயக பூர்வமான இந்தக் கேள்வி அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை மக்கள் மத்தியிலும் ஏனைய முஸ்லிம் பிரதேசங்களில் உள்ளவர்கள் மத்தியிலும் நேற்று முதல் எழுப்பப்பட்டு வருகின்றது. உபவேந்தர் இஸ்மாயில் அவரது பதவியை இராஜிநாமா செய்யாமல் வேட்பாளராக குதித்துள்ளார்….

Read More

பாடசாலை மாணவன் சடலமாக மீட்பு

உடவலவ – மிரிஸ்வெல்பொத்த பாடசாலைக்கு அருகிலிருந்து மாணவன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 17 வயதுடைய மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலத்தில் வெட்டுக்காயங்கள் இருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குறித்த மாணவன் நேற்று தனியார் வகுப்பிற்கு சென்று  வீடு திரும்பாமையினால்  அவரது தந்தை சம்பவம் தொடர்பில்  பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்நிலையில் இன்று காலை குறித்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Read More

அனில் பிரசன்னவுக்கு தங்கப் பதக்கம்

ரீ 42 பிரிவைச் சேர்ந்த ஆண்­க­ளுக்­கான 200 மீற்றர் ஓட்டப் போட்­டியை 25.11 செக்­கன்­களில் நிறைவு செய்த அனில் பிர­சன்ன ஜயலத் புதிய ஆசிய சாத­னை­யுடன் தங்கப் பதக்­கத்தை சுவீ­க­ரித்தார். இப் போட்­டியை 27.50 செக்­கன்­களில் நிறைவு செய்த புத்­திக்க இந்த்­ர­பால வெண்­க­லப்­ப­தக்­கத்தை வென்றார். இதே­வேளை, ரி 44 பிரிவைச் சேர்ந்த ஆண்­க­ளுக்­கான 200 மீற்றர் ஓட்டப் போட்­டியில் இலங்­கையின் அஜித் ஹெட்­டி­ஆ­ராச்சி (25.05 செக்) மூன்றாம் இடத்தைப் பெற்றபோதிலும் பதக்கம் வெல்லத் தவறினார்.

Read More

உலக அலங்கார மீன் சந்தையில் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடிக்க இலங்கை திட்டம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அர்ப்பணிப்பான தொலை நோக்கின் கீழ் சிறிய மற்றும் நடுத்தர அலங்கார மீன் தொழில் முனைவோருக்கு சர்வதேச சந்தைகளில் அணுகுவதற்கான பாதுகாப்பான புதிய தொழில்நுட்பங்களுடன் தகவல் மற்றும் சலுகைகள் வழங்குதற்கு அரசு தனது முழு முயற்சியினையும் கொண்டுள்ளது. உண்மையில், 2015 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுதிட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இலங்கையின் மீன்வளர்ப்பினை பாதுகாக்க இதற்கு முன் நிகழ்ந்திராத முயற்சிகளினை முன்வைத்துள்ளார். இந்த முயற்சி கிட்டத்தட்ட 2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக எட்டப்பட்டுள்ளது. இன்று(10)…

Read More

சிலாவத்துறை மண் மீட்பு போராட்டத்திற்கு ஆதரவாக மன்னார் பிரதேசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!!!

மன்னார் பிரதேச சபையின் 12வது அமர்வின் போது முசலி பிரதேசபைக்குட்பட்ட சிலாவத்துரையில் கடற்படையினரால் ஆக்கிரமிப்புக்குள்ளான காணியை விடுவித்து மக்களின் பாவனைக்கு கையளிக்கும் தீர்மானம் தவிசாளர் முஜாஹிர் அவர்களினால் கொண்டுவரப்பட்டு உறுப்பினர்களின் முடிவுக்காக சமர்ப்பிக்கப்பட்டது. தவிசாளரினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தினை 21சபை உறுப்பினர்களும் ஏகமனதாக அங்கிகரித்ததுடன்  உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமர்வின் போது கலந்துரையாடப்பட்டது. மேலும் இன மதத்துக்கு அப்பால் 21 நாட்களாக முசலி பிரதேசத்தில் இந்த போராட்டம் நடைபெற்றுவருகின்றது. இந்த முசலி பிரதேசத்தில் 32…

Read More

தன் கடமைக்கப்பால் சமூக சிந்தனையுடன் சேவை செய்தவர் மறைந்த அக்கறைப்பற்று அஹமட் லெப்பை-அனுதாபச்செய்தியில் பிரதியமைச்சர் அமீர் அலி

சிறந்த கல்விமானும் எனது நண்பருமாகிய அஹமட் லெப்பையின் திடீர் மரணச் செய்தி கேள்வியுற்று மிகவும் கவலையடைந்துள்ளேன் என்று கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்துள்ளார். அக்கறைப்பற்றைச் சேர்ந்த கல்விமான் அஹமட் லெப்பையின் மரணச் செய்தி தொடர்பாக வெளியிட்டுள்ள மரணச் செய்தியிலே மேல் குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது… மரணம் அடைந்த எனது நண்பர் அஹமட் லெப்பை மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளராக இருந்த காலத்தில் கல்விப் பொதுத் தராதர…

Read More

யெமன் போரில் காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவமனையில் சவூதி இளவரசர் ஆறுதல்!

யெமனி ல் நடைபெறும் உள்நாட்டு போர் கடந்த மார்ச் 19-ந் தேதி முதல் தீவிரம் அடைந்துள்ளது. அரசுக்கு எதிராக போரிடும் ஹவுத்தி கிளர்ச்சி படையை ஒடுக்க சவுதி அரேபியா தலைமையில் அதன் நட்பு நாடுகளும் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தின. இதற்கு ஹவுத்தி கிளர்ச்சியாளர்களும் எதிர் தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் பெருமளவில் ஏற்பட்டுள்ளது. இதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரர்களை சவுதி அரேபியா இளவரசர் பைசல் பின் காலித் மருத்துவமனைக்கு சென்று…

Read More

இஸ்ரேலைக் கதிகலங்க வைத்த பலஸ்தீன் இளைஞர்களின் தாக்குதல்

நேற்று முன்தினம் மாலை (08) இஸ்ரேலின் தலைநகரான ‪தெல்லபீபில்‬ ‪இஸ்ரேலின்பாதுகாப்பு_அமைச்சு‬ மற்றும் முக்கிய ‪இராணுவ_தலைமையகம்‬ அருகே இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 யூதப்படையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் 11 பேர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது . மேலும் அவர்கள் தாக்குதல் நடத்தியவர்களைப் பற்றி கூறுகையில் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பாலஸ்தீனர்கள்தான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்கள் என்றும் .அவர்களில் ஒருவர் ‪ஷஹீதாக்கப்பட்டுள்ளதாகவும்‬ மற்றொருவர் ‪#‎கைது‬ செய்யப்பட்டுள்ளார் என்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது ….

Read More

‘கிழ‌க்கு மக்க‌ளை ம‌டைய‌ர்க‌ளாக‌ க‌ருதி ஓரங்க‌ட்டி வ‌ந்த‌ ர‌வூப் ஹ‌க்கீமை கிழ‌க்கின் ப‌க்க‌ம் திரும்பி ஓட‌ வைத்த‌வ‌ர் அமைச்ச‌ர் ரிஷாத்தும் அவ‌ர் க‌ட்சியுமாகும்’ முபாரக் அப்துல் மஜீத்!

அமைச்ச‌ர் ரிசாத் ப‌தியுதீன் ச‌மூக‌த்துக்காக‌ என்ன‌ செய்தார் அவ‌ர‌து க‌ட்சியான‌ அ.இ.ம‌. கா என்ன‌ செய்துள்ள‌து என‌ ச‌மூக‌த்தின் வாக்குக‌ளை பெற்று அச்ச‌மூக‌த்துக்கு சேவை செய்யாத‌ முஸ்லிம் காங்கிர‌சின் ஆத‌ர‌வாள‌ர்க‌ள் கேட்ப‌து அவ‌ர்க‌ளின் அறியாமையை காட்டுகிற‌து என‌ உல‌மா க‌ட்சியின் த‌லைவ‌ரும் அ.இ.ம‌க்க‌ள் காங்கிர‌சின் முன்னாள் கொள்கை ப‌ர‌ப்பு செய‌லாள‌ருமான‌ முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்தார். அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து, அமைச்ச‌ர் ரிசாத் ப‌தியுதீன் என்ப‌வ‌ர் த‌ன‌து அமைச்சை ப‌ய‌ன்ப‌டுத்தி த‌ம‌க்கு வாக்க‌ளித்த‌ வ‌ட‌ மாகாண‌ ம‌க்க‌ளுக்கு…

Read More

இரட்டைப் படுகொலையை கண்டித்து ஏறாவூரில் கடையடைப்பு

ஏறாவூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற இரட்டைக் கொலையுடன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் நால்வருக்கும்  அதிக தண்டனை  வழங்கக் கோரி இன்று ஏறாவூரில் கடையடைப்பு இடம்பெற்று வருகின்றது. மட்டக்களப்பு –  ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் நகர் முகாந்திரம் வீதி  முதலாவது ஒழுங்கையில் உள்ள வீட்டில் ஒன்றாக வசித்து வந்த நூர்முஹம்மது சித்தி உசைரா (வயது 56) மற்றும் அவரது மகளான ஜெனீரா பானு மாஹிர் (வயது 32) ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் மர்மமான முறையில்…

Read More

மாளிகைக்காடு நகரில் சதொச திறந்து வைப்பு!

– அஸ்லம் எஸ்.மௌலானா – அம்பாறை மாவட்டத்தின் மாளிகைக்காடு நகரில் லங்கா சதொச கிளை ஒன்று  கடந்த ஞாயிற்றுக்கிழமை கைத்தொழில், வர்த்தக அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிஷாட் பதியூதீனால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஹ்ரூப், அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல், லக்சல நிறுவனத்தின் தலைவர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் சுபைதீன் ஹாஜியார்…

Read More