Headlines

வடமாகாண சபையின் எதிர்கட்சி பிரதம கொறடாவாக றிப்கான் பதியுதீன் நியமனம்

வடமாகாண சபையின் எதிர்கட்சி தலைவர் மற்றும் பிரதம கொறடா ஆகியோர்களின் பெயர்களை ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது. நடை பெற்று முடிந்த வடமாகாண சபைத் தேர்தலில் எதிர்கட்சியாக ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி காணப்படுவதால் எதிர்கட்சி தலைமைப் பதவி ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்ட ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் கந்தசாமி கமலேந்திரனுக்கும்,எதிர்கட்சியின் பிரதம கொறடா பதவியினை ஜக்கிய முன்னணியில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினரை் றிப்கான் பதியுதீனுக்கும் வழங்குவதற்கான முடிவு…

Read More

ஐ.தே.க.யில் இணைந்த நவீனுக்கு வந்துகுவியும் பேஸ்புக் வாழ்த்துக்கள்..!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து விலகி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்தமை தொடர்பில் கடந்த 24 மணிநேரத்தில் தனது பேஸ்புக் கணக்கில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழ்த்துக்கள் கிடைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று 01/12/2014 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். மீண்டும் எனது அரசியல் தாய் வீட்டுக்கு வந்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன். நுவரெலியா மாவட்டத்திற்கு தேவையான வசதிகளை…

Read More

அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு சூரிய சக்தி

அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகளுக்கும் சூரிய சக்தியை (சோலார் பெனல்கள்) பயன்படுத்த, மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்தத் திட்டத்தினூடாக, மின்சாரத்தை சேமிக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படுவதாகவும் மின்விளக்குகளுக்காகப் பயன்படுத்தப்படும் மின்சக்தியை மிச்சப்படுத்தி, அதனை தேசிய மின் கட்டமைப்புக்குள் சேர்ப்பது தொடர்பில் அமைச்சினால் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

பொன்சேக்காவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடிவு

பீல்ட் மாஷல் சரத்பொன்சேகாவிடம் 500 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். எவன்காட் சம்பவத்தின் மூலம் விஜயதாஸ ராஜபக்ஷ இலஞ்சம் பெற்றதாகவும், அவர் ஒரு திருடன் என்றும் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா நேற்று தெரிவித்திருந்தார். பொன்சேகாவின் இந்தக் கூற்று தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய தனது சட்டத்தரணிகளின் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். இன்று…

Read More

குழந்தையை விற்க முயன்ற தாய் நாடு கடத்தப்பட்டார்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் தனது இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தையை விற்க முயன்ற இலங்கை பிரஜையான பெண் ஒருவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குழைந்தையை வாங்கும் நபராக சென்று பொலிஸார்  குறித்த பெண்ணை கைதுசெய்துள்ளனர். வாழ்க்கைச் செலவிற்கு பணம் இல்லாமையினால் குழந்தையை விற்க முயன்றதாக குறித்த பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். குறித்த பெண் சார்ஜா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்றம் பெண்ணை நாடுகடத்த உத்தரவிட்டுள்ளது.

Read More

வெளிநாட்டு நீதிபதிகளை அழைக்குமாறு கூறவில்லை

மனித உரிமை மீறல் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் நடத்­தப்­ப­ட­வுள்ள விசா­ரணை செயற்­பாட்டில் வெளி­நாட்டு நீதி­ப­தி­களை பங்­கெ­டுக்கச் செய்ய வேண்­டு­மென நான் எனது அறிக்­கையில் பரிந்­துரை செய்­ய­வில்லை. மாறாக தேவை­யெனில் விசா­ரணை செயற்­பாட்டில் வெளி­நா­டு­களின் தொழில்­நுட்ப உத­வி­களை பெற்­றுக்­கொள்­ளலாம் என்ற பரிந்­து­ரை­யையே முன்­வைத்தேன் என்று காணாமல் போனோர் குறித்து விசா­ரணை செய்யும் ஆணைக்­கு­ழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதி­பதி மெக்ஸ்வல் பர­ண­கம தெரி­வித்தார். மனித உரிமை மீறல் மற்றும் போர்க்­குற்­றங்கள் குறித்த இறுதி அறிக்­கையை தயா­ரித்த போது எனக்கு எந்­த­வி­த­மான சவாலும் இருக்­க­வில்லை. உண்­மையைக்…

Read More

மஹிந்தவும், திருடர்களும் வெற்றி பெற்றால் புதிய அரசாங்கம் அமையாது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அடிப்படைவாதிகளும் திருடர்களும் புதிய பாராளுமன்றத்திற்கு தெரிவானால் தேசிய அரசாங்கம் அமைக்கும் எமது திட்டம் ஒரு போதும் சாத்தியமாகாது. தேர்தலில் மஹிந்த போட்டியிட்டு வெற்றியிட்டினாலும் எதிர்கட்சி ஆசனத்திலேயே அவர் அமர்வார் என நிதி அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார். மஹிந்தவிற்கு வேட்புமனு வழங்குவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்னும் தீரமானம் எடுக்கவில்லை. இவ்வாறான சதிதிட்டங்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு போதும்…

Read More

இந்தியாவிற்கு உரிய பதிலடி கொடுங்கள் – நவாஸ் ஷரீப்

ஐ.நா. சபையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் நேற்று(புதன்கிழமை) காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா.சபையில் பேசுவதற்கு முன்னதாக அந்நாட்டு ராணுவ தளபதி ரஹீல் செரீப்பிடம் பேசி உள்ளார். ஐ.நா.சபையில் பேச உள்ள விவகாரம் தொடர்பாக தொலைபேசியில் ரஹீல் செரீப்பிடம், நவாஸ் செரீப் பேசியதாக தெரிகிறது. இதற்கிடையே இந்தியாவின் நடவடிக்கைக்கு முழு திறம்பட பதிலடி கொடுக்குமாறு ரஹீல் செரீபை, நவாஸ் ஷரீப் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவித்து உள்ளன.

Read More

நாகதாழ்வு முள்ளிப்பள்ளம் கிராமத்தின் அபிவிருத்திக்கு மக்கள் காங்கிரசினால் நிதி ஒதுக்கீடு!!!

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் அவர்கள் மூலம் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட கிராமமான முள்ளிப்பள்ள கிராமத்திற்கு பல்வேறுபட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம். முஜாஹிர் அவர்கள் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில் எங்கள் கட்சியின் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் மூலம் எமது பிரதேசத்திற்கு ஒதுக்கப்படுகின்ற நிதி மூலம் கட்சி பேதங்கள் இன்றி பாகுபாடு இல்லாமல் அந்த…

Read More

காலி வன்முறைகளைக் கட்டுப்படுத்த களத்தில் நின்று செயற்பட்ட ரிஷாட்

காலி ஜிந்தோட்டை பகுதியில் நேற்று மாலை (17/ 11/2017) ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் கட்டுக்கடங்காது போனதையடுத்து மன்னாரிலிருந்து கொழும்பு திரும்பியிருந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், உடனடியாக அந்தப் பிரதேசத்துக்கு  விரைந்தார். அமைச்சர் கொழும்பிலிருந்து காலிக்குச் சென்ற நள்ளிரவு வேளை பாதுகாப்பு காரணங்களைக் காட்டி கொழும்பு – காலி வீதியூடாக அந்தப் பிரதேசத்துக்குச் பொலிஸார் அனுமதியளிக்க மறுத்தனர். எனினும், தடைகளையும் பொருட்படுத்தாது, தனது பாதுகாப்பையும் கருத்திற்கெடுக்காது அதிகாலை 1.15 மணியளவில் அங்கு போய்ச் சேர்ந்தார். வன்முறையாளர்களால் உடைக்கப்பட்டு, சேதமாக்கப்பட்டிருந்த…

Read More

பொத்துவில் ஆமவட்டுவான் பகுதியில் காணிகளை எல்லையிடுதல் பிரச்சினைக்கு முஷாரப் எம்.பி யின் தலையீட்டில் தீர்வு!

பொத்துவில் ஆமவட்டுவான் பகுதியில் 06.11.2020 அன்று வன இலாகா அதிகாரிகளினால் எல்லைக்கற்கள் நடப்பட்டவேளை, அங்கு தவறான முறையில் எல்லைகள் இடப்படுகின்றன எனும் மக்களின் முறைப்பாட்டை தொடர்ந்து, குறித்த இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் விரைந்தார். அந்த நேரத்தில் குறித்த பகுதியில் எல்லையிடும் அதிகாரிகள் லாகுகல மற்றும் பொத்துவிலின் எல்லைப்படுத்தலுக்கான 2006 ஆம் ஆண்டின் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி எல்லைகளை அமைக்காமல், அதற்கு முரணான வகையில் எல்லைகளை அமைத்துக்கொண்டிருந்துடன், எந்தப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரிவில் எல்லைகளை அமைக்கின்றார்கள்…

Read More

புத்தளம் அறுவைக்காட்டில் குப்பை கொட்டும் திட்டம் மாபியாக்களின் சதியா ? அமைச்சர் ரிஷாட் பிரதமரிடம் கேள்வி!

கொழும்பிலுள்ள திண்மக்கழிவுகளை புத்தளம் அறுவைக்காட்டில் கொட்டும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டுமென  பிரதமர் ரணில் விக்ரம சிங்க மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களிடம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார். இன்று மாலை (11) பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் பிரதமர் தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு முற்கூட்டியதான தயார் படுத்தும் கூட்டத்தின் போது,  நிகழ்ச்சி நிரலில் புத்தளம் அறுவைக்காட்டு குப்பை பிரச்சினை மற்றும்  திண்மக்கழிவகற்றல் திட்டம் தொடர்பான விவகாரம் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே,  அமைச்சர் ரிஷாட்  அறுவைக்காட்டு குப்பை திட்டத்திற்கு தமது கட்சி …

Read More