Headlines

அம்மா என்ற‌ழைக்காத உயிரில்லையே…. 62 வயது மாற்று திறனாளி மகனை கவனிக்கும் 101 வயது பாச‌ தாய்!

தன் மகனுக்கு தானும் எனக்கு மகனுமாக ஒருவருக்கு ஒருவர் துணையாக உள்ளோம் . என் மகன் வாழ்நாள் உள்ள காலம் வரை தான் உயிரோடிருக்க வேண்டும் ஏனென்றால் எனக்கு பிறகு அவரை கவனிக்க யாரும் இல்லை என்கிறார் மலேசியாவில் 101 வயதுடைய தாயான மூதாட்டி மெலியா தன் மகனான 62 வயதுடைய மாற்று திறனாளியான அப்துல் ரஹமானை வயது முதிர்ந்த நிலையிலும் எவ்வித குறையும் இல்லாமல் மிகுந்த பாசத்தோடு கவனித்து வருவது அனைவரின் உள்ளத்தையும் நெகிழ செய்துள்ளது…

Read More

நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவு

நேபாளத்தில் இன்று காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அந்நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து மேற்காக 157 கி.மீ தொலைவில் உள்ள பரத்பூர் அருகே இந்நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் காரணமாக சேதம் ஏதும் ஏற்பட்டதா என இதுவரை எவ்வித தகவலும் வரவில்லை. முன்னதாக கடந்த மாதம் 25-ந் தேதி நிகழ்ந்த கடும் நிலநடுக்கத்தில் 8000க்கும் மேற்பட்டோர் பலியானார்கள் என்பதும், அதே போல் கடந்த 12-ந் தேதி…

Read More

பாலத்தீனத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரிக்க வத்திகன் முடிவு

பாலத்தீன நாட்டை வாத்திகன் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கும் உடன்பாடு விரைவில் எட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலத்தீன் ஆகிய இரு நாடுகள் தனியாக இருப்பதே இஸ்ரேலுடனான மோதலைத் தணிக்கும் வழி என வாத்திகன் கூறியுள்ளது. இது தொடர்பிலான புதிய ஒப்பந்தத்தில் பாலத்தீனத்தில் கத்தோலிக்க தேவாலயத்தின் செயல்பாடுகள் குறித்த விடயங்களும் இடம்பெறும். இம்முடிவு தொடர்பாக இஸ்ரேல் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள பாலத்தீனப் பகுதிகள் மீது கடந்த ஆண்டு இஸ்ரேல் கடுமையான இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது….

Read More

வரலாற்றில் முதல் முறையாக பிரிட்டன் நாடள மன்றத்திர்குள் நுழையும் 13 முஸ்லிம் MP க்கள்!

பிரிட்டனில் அண்மையில் நாடாளமன்ற தேர்தல் நடந்து முடிந்தது இந்த தேர்தலில் முதல் முறையாக 13 முஸ்லிம்கள் பிரிட்டன் நாடாளமன்றத்திர்கு தேர்வு செய்ய பட்டுள்ளனர் 2010ஆம் ஆண்டு எட்டாக இருந்த முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை தர்போது 13 ஆக உயர்ந்துள்ளது இவர்களில் எட்டு பேர் பெண்களாகும் பிரிட்டன் வரலாற்றில் 13 முஸ்லிம் உறுப்பினர்கள் பிரிட்டன் நாடாள மன்றத்திர்கு செல்வது இது முதல் முறையாகும்

Read More

மீண்டும் நேபாளத்தை உலுக்கிய 7.3 ரிக்டர் நிலநடுக்கம்: பலி 42 ஆக உயர்வு

நேபாளத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 8 ஆயிரம் பேரை இழந்து, அதன் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் படிப்படியாக மீண்டு வரும் நிலையில் நேற்று மீண்டும் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மதியம் சுமார்12.30 மணியளவில் தலைநகர் காத்மாண்டில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் வடகிழக்கு பகுதியில் 7.3-ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 22 ஆக இருந்தது…

Read More

நேபாளத்தில் 8 பேருடன் அமெரிக்க கடற்படை ஹெலிகாப்டர் மாயம்

நிலநடுக்கத்தால் பாதிக்கபட்ட பகுதியில் நிவாரண பணியில் ஈடுப்பட்டிருந்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் அதில் பயணம் செய்த 8 பேருடன் மாயமாகியுள்ளது. அமெரிக்க கடற்படை கேப்டன் கிறிஸ் சிம்ஸ் தெரிவித்துள்ள தகவலின் படி ஹ்யூ என்ற அந்த ஹெலிகாப்டர் செவ்வாய்க்கிழமை அன்று நேபாளத்தின் சாரிகோட் அருகே நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த்து. அப்போது ஹெலிகாப்டரில் 6 அமெரிக்க கடற்படையினர் மற்றும் 2 நேபாள ராணுவ வீரர்கள் இருந்துள்ளனர். மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணியும், காணாமல் போனதற்கான காரணம் குறித்தும்…

Read More

இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம்கள் அபாரவெற்றி, 8 லிருந்து, 13 ஆக உயர்ந்த முஸ்லிம் எம்.பி.க்கள் தொகை

இங்கிலாந்தில் நேற்றுமுன்தினம் (07-05-2015) நடந்த நாடாளுமன்ற தேர்தலில், 13 முஸ்லிம்கள் எம்பி’க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர், நடப்பு நாடாளுமன்றத்தில் 8 முஸ்லிம்கள் உள்ள நிலையில், இது அபாரமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. நடப்பு நாடாளுமன்றத்தில், இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த 10 பேர் எம்.பி.க்களாக உள்ள நிலையில், அதே எண்ணிக்கையை இந்திய வம்சாவளியினர் மீண்டும் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். கன்சர்வேட்டிவ் கட்சி, தொழிலாளர் கட்சி, லிபரல் ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பாக நிறுத்தப்பட்டிருந்த 24 முஸ்லிம்களில் 13 முஸ்லிம்கள் வெற்றி…

Read More

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹூசைனி முபாரக் மற்றும் அவரது மகன்களுக்கு சிறைதண்டணை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கிப்தில் 30 ஆண்டுகளாக கொடுங்கோல் ஆட்சி நடத்தி வந்த முன்னாள் ஜனாதிபதி ஹூசைனி முபாரக்கிற்கு மூன்றாண்டும் அவரது மகன்களுக்கு 4 ஆண்டும் சிறைதண்டணை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹூசைனி முபாரக்கின் பதவி காலத்தில் அவரும், அவரது மகன்களும் செய்த ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது. இந்நிலையில், இன்று வழக்கை விசாரித்த நீதிபதி, முபாரக்கிற்கு மூன்றாண்டும் அவரது மகன்கள் கமால் முகமது ஹூசைனி முபாரக், மற்றும்…

Read More

பிரித்தானியாவில் எம்.பி.யாக தெரிவு செய்யப்பட்டுள்ள 20 வயது மாணவி

பிரித்தானியாவில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 20 வயது பெண் ஒருவர் இளம் எம்பியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் ஸ்கொட்லாந்திலிருந்து போட்டியிட்ட மேஹ்ய்ரி பிளாக்(Mhairi Black-20) என்ற பெண், அந்நாட்டின் மிக இளம் வயது எம்.பி.யாக இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளார். தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட இவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட தொழிலாளர் கட்சியின் வேட்பாளரும், அக்கட்சியின் வெளிநாட்டு விவகார செய்தி தொடர்பாளருமான டக்ளஸ் அலெக்சாண்டர் என்பவரை 5000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். தேர்தலில்…

Read More

நேபாள பூகம்பம்- தேவைப்படும் நிதி கிடைக்கவில்லை

நேபாளத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டோருக்குத் தேவைப்படும் உதவிகளைச் செய்ய போதுமான நிதி கிடைக்கவில்லை என்று ஐ நா தெரிவித்துள்ளது. இதுவரை நிவாரண நிதியாக 22 மில்லியன் டாலர்கள் மட்டுமே கிடைத்துள்ளதாக நேபாள பணிகளுக்கான ஒருங்கிணைப்பாளரான ஜேம்ஸ் மெக்கோல்ட்ரிக் தெரிவித்துள்ளார். சுமார் இரண்டு வாரத்துக்கும் முன்பு நேபாளத்தில் இடம்பெற்ற பூகம்பத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ 415 மில்லியன் டாலர்கள் வேண்டும் என்று ஐ நா கோரியிருந்தது. நிதி உதவிகள் வேகமாக கிடைத்தால்தான், மலைப் பகுதிகளில் இருக்கும் தொலைதூர கிராமங்களில் உள்ள மக்களுக்கு…

Read More

இங்கிலாந்து பாராளுமன்றத் தேர்தல்: ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டார் டேவிட் கெமரூன்

பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் டேவிட் கெமரூன் தலைமையிலான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி அதிக இடங்களை பிடித்து தொடர்ந்து 2 ஆவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. 650 இடங்களைக்கொண்ட இங்கிலாந்தின் பாராளுமன்றத் தேர்தல் நேற்று (07) நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மொத்தமுள்ள 650 தொகுதிகளில், இதுவரை 540 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 245 இடங்களும், மிலிபாண்ட் தலைமையில் போட்டியிட்ட தொழிலாளர் கட்சிக்கு 212 இடங்களும், நிகோலா…

Read More

துபாயில் சம்பளம் கிடைக்காததால் திருமணத்தை நிறுத்திய இந்திய என்ஜினீயரின் சோகம்

ஐதராபாத்தைச் சேர்ந்த எலக்ட்ரிக்கல் என்ஜினீயர் ஒருவர் தான் வேலைப்பார்த்த நிறுவனம் சம்பள பணத்தை கொடுக்காததால் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் பணச்சிக்கலில் தனது திருமணத்தையே நிறுத்தியுள்ளார். ஐதராபத்தைச் சேர்ந்த முகமது அப்துல் காதீர் (வயது 30) என்பவர் துபாயில் உள்ள நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல் என்ஜினீயராக வேலைப்பார்த்து வருகிறார். அவருக்கு மாதச் சம்பளம் 6500 திர்ஹாம் (இந்திய மதிப்பில் ரூ. 1,13,644). ஆனால் கடந்த அக்டோபர் மாதம் கடைசியாக 3500 திர்ஹாம் சம்பளம் வாங்கினார். அதன்பின் அந்த நிறுவனம்…

Read More