எதிர்வுகூறமுடியாத பிரித்தானிய தேர்தலில் மில்லியன்கணக்கான மக்கள் வாக்களிப்பு : இன்று மாலைக்குள் இறுதி பெறுபேறுகள்
பிரித்தானிய பொதுத் தேர்தல் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமான போது, வெற்றியைப் பெறுவது யார் என்பதை எதிர்வுகூறமுடியாத நிலையிலுள்ள அந்தத் தேர்தலில் மில்லியன்கணக்கான மக்கள் வாக்களித்தனர். இந்தத் தேர்தல் நாடெங்குமுள்ள சுமார் 50,000 வாக்களிப்பு நிலையங்களில் அந்நாட்டு நேரப்படி காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி இரவு 10.00 மணிக்கு நிறைவுபெற்றது. மொத்தம் 650 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான மேற்படி தேர்தலில் வாக்களிக்க 50 மில்லியன் பேர் பதிவுசெய்திருந்தனர். பொதுத் தேர்தலுடன் 279 அதிகாரசபைக்கான 9,000 க்கும் அதிகமான ஆசனங்களுக்கு…
