Headlines

எதிர்வுகூறமுடியாத பிரித்தானிய தேர்தலில் மில்லியன்கணக்கான மக்கள் வாக்களிப்பு : இன்று மாலைக்குள் இறுதி பெறுபேறுகள்

பிரித்­தா­னிய பொதுத் தேர்தல் நேற்று வியா­ழக்­கி­ழமை ஆரம்­ப­மான போது, வெற்­றியைப் பெறு­வது யார் என்­பதை எதிர்­வு­கூ­ற­மு­டி­யாத நிலை­யி­லுள்ள அந்தத் தேர்­தலில் மில்­லி­யன்­க­ணக்­கான மக்கள் வாக்­க­ளித்­தனர். இந்தத் தேர்தல் நாடெங்­கு­முள்ள சுமார் 50,000 வாக்­க­ளிப்பு நிலை­யங்­களில் அந்­நாட்டு நேரப்­படி காலை 7.00 மணிக்கு ஆரம்­ப­மாகி இரவு 10.00 மணிக்கு நிறை­வு­பெற்­றது. மொத்தம் 650 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை தெரிவு செய்­வ­தற்­கான மேற்­படி தேர்­தலில் வாக்­க­ளிக்க 50 மில்­லியன் பேர் பதி­வு­செய்­தி­ருந்­தனர். பொதுத் தேர்­த­லுடன் 279 அதி­கா­ர­ச­பைக்­கான 9,000 க்கும் அதி­க­மான ஆச­னங்­க­ளுக்கு…

Read More

அகதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது!- அவுஸ்திரேலியா

இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.இலங்கைக்கு வருகை தந்திருந்த அந்த நாட்டின் குடிவரத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இலங்கையில் இருந்து தமிழக முகாம்களில் இருந்தும் வரும் அகதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.இந்தநிலையில் புதிய அரசாங்கத்தின் வருகை, அவுஸ்திரேலியாவுக்கு மாத்திரம் அல்ல. இலங்கையின் உள்நாட்டிலும் பிரச்சினையை குறைத்துள்ளது என்று டட்டன் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் டட்டன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு இராஜாங்க…

Read More

ஜெர்மன்விங்ஸ் விபத்து: விமானத்தை மோதுவதற்காக துணை விமானி பயிற்சி எடுத்ததாக அதிர்ச்சி தகவல்

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரிலிருந்து ஜெர்மனியின் டியூஸெல்டார்ப் நகரை நோக்கி சென்ற ஜெர்மன்விங்ஸ் பயணிகள் விமானம் பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பெலோன் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 144 பயணிகள் உள்ளிட்ட 150 பேரும் பலியாகினர். துணை விமானி லுபிட்ஸ் விமானத்தை வேண்டுமென்றே திட்டமிட்டு மலையில் மோதியது விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் ஜெர்மன் நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், விபத்து நடந்த அதே நாளில் துணை…

Read More

2 குழந்தைகளுடன் கடத்தல்காரனிடம் சிக்கிய நிலையில் பீட்சா ஆர்டர் மூலம் போலீசாருக்கு தகவல் அனுப்பிய தாய்

முன்னாள் நண்பனால் கத்திமுனையில் பிடிபட்ட நிலையில் தன்னையும், தனது 2 குழந்தைகளும் அறிவு சாதுர்யத்தால் ஒரு பெண் காப்பாற்றிய செய்தி தற்போது வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஹைலேண்ட்ஸ் கவுண்ட்டியில் வசிக்கும் ஒரு பெண்ணின் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்த அவரது முன்னாள் நண்பன், கத்தி முனையில் அந்தப் பெண்ணையும், அவரது 2 குழந்தைகளையும் சிறைபிடித்து, கடத்திச் செல்ல முயற்சித்தான். அவனிடம் இருந்து தப்பிக்க சாதுர்யமாக திட்டம் தீட்டிய அந்தப் பெண், ‘குழந்தைகள் பசியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு…

Read More

மீண்டும் பிறந்தார் இளவரசி டயானா

இங்கிலாந்தின் குட்டி இளவரசிக்கு சார்லட் எலிசபத் டயானா என பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும், கேம்ப்ரிட்ஜின் மதிப்பிற்குரிய இளவரசி சார்லட் என்று அவர் அழைக்கப்படுவார் எனவும் கென்சிங்டன் அரண்மனை அதிகாரப்பூர்வமாக தகவலை அறிவித்துள்ளது. இங்கிலாந்து இளவரசர் சார்ல்ஸ்–டயானா தம்பதியரின் மூத்த மகன் இளவரசர் வில்லியம் (வயது 32). ஸ்காட்லாந்து செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் படித்தபோது, கேட் மிடில்டனை சந்தித்தார். இருவரும் காதலித்து, 2011 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதிதி திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியருக்கு…

Read More

நேபாளில் அசிங்கப்பட்ட இந்திய பத்திரிக்கைத் துறை!

80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான நிலநடுக்கத்தை சந்தித்த நேபாளத்தில் இதுவரை 7 ஆயிரம் பேருக்கு மேல் இறந்துவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு செய்தி சேகரிக்க சென்றுள்ள இந்திய பத்திரிகையாளர்களை மனிதாபிமானம் அற்ற முறையில் செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதாகக்கூறி அவர்களை வெளியேறும்படி வலியுறுத்தி உள்ளனர். இந்திய பத்திரிகையாளர்களுக்கு எதிராக, “உங்கள் நாட்டிற்கு திரும்பி போங்கள்” என்று ஹேஷ்டேகை நேற்று உருவாக்கி டுவிட்டரில் ஒரு லட்சம் டுவிட்டுகளை பதிவு செய்துள்ளார்கள் நேபாள மற்றும் இந்தியாவை சேர்ந்தவர்கள். டுவிட்டர்…

Read More

மீட்புப் பணிகளை நிறுத்திக்கொள்வதாக நேபாள அரசு அறிவிப்பு!

மறு சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதால் மீட்புப் பணிகளை நிறுத்திகொள்வதாக நேபாள நாட்டு அரசு அறிவித்துள்ளது. நேபாள நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தில் அந்நாடு சீர்குலைந்து போனது. வெறும் 3 கோடி மக்கள் தொகை மட்டுமே உள்ள நேபாளத்தில் 80 லட்சம் பேர் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியா, சீனா,அமெரிக்கா உள்ளிட்ட 32 நாடுகள் நேபாள நாட்டின் மீட்புப் பணிகளுக்கு உதவி வருகின்றன. பலி எண்ணிக்கை 7 ஆயிரத்து 500ஐ தாண்டி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில்…

Read More

அனைத்து தொழிலாளர்களும் தமது உரிமைகளை அனுபவிக்கும் வகையில் சட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும்

Irshad Rahumathulla இந்த நாட்டில் தொழில் புரியும் அனைத்து தொழிலாளர்களும் தமது உரிமைகளை அனுபவிக்கும் வகையில் சட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இந்த உரிமைகளுக்கு தடைகள் வருகின்ற போது இதனை வெற்றிக் கொள்ள தமது கட்சியின் தொழிற்சங்கம் எல்லா நேரங்களிலும் செயற்படும் என்றும் கூறினார். தொழிலாளர் தினத்தையிட்டு அமைச்சர் றிசாத் பதியுதீன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவ்வறிக்கையில்…

Read More

மகளின் பெயரை மாற்ற தந்தைக்கு உத்தரவு

புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு, பெற்றோர் தங்களுக்கு பிடித்தமான பெயர்களை சூட்டி மகிழ்வர். ஆனால் சீனாவில் ஒரு குழந்தைக்கு சூட்டப்பட்ட பெயரை மாற்றுமாறு, அதன் தந்தைக்கு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. சீனாவில் பிறக்கும் குழந்தைகளுக்கு பெயர் வைப்பது தொடர்பாக அந்த நாட்டு அரசு சில சட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த சட்டத்தின் அடிப்படையில் பெயர் வைக்காவிட்டால், சம்பந்தப்பட்ட பெற்றோர் மீது வழக்கு தொடரப்படும். அங்கு வசித்து வரும் லியூ என்பவர் தனக்கு புதிதாக பிறந்த பெண் குழந்தைக்கு பெய்…

Read More

கிரேக்க நாட்டில் கலகக்காரர்களிடம் இருந்து மந்திரியை காத்த மனைவி

கிரேக்க நாட்டில் யானிஸ் வாரவ் பக்கிஸ், நிதி மந்திரி பதவி வகித்து வருகிறார். அவர் தனது மனைவி டேனி மற்றும் நண்பர்களுடன் அங்கு எக்சார்சியா மாவட்டத்தில் உள்ள ஒரு உணவு விடுதிக்கு நேற்று முன்தினம் சென்றிருந்தார். அவர்கள் அனைவரும் இரவு விருந்தினை சாப்பிட்டு முடித்தனர். அப்போது அங்கு அதிரடியாக புகுந்த இடதுசாரி கிளர்ச்சியாளர்கள் கண்ணாடி பொருட்களை வீசி அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் நிதி மந்திரி யானிஸ், காயம் அடைந்து விடாதபடிக்கு மனைவி டேனி,…

Read More

வேற்றுக் கிரகவாசிகளை தேடும் புதிய திட்டத்தை நாசா அதிகாரப்பூர்வமாக தொடங்கியது

வேற்று கிரகவாசிகளை தேடும் புதிய திட்டத்தை நாசா அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இந்த புதிய திட்டம் மூலம் பூமியை தவிர மற்ற கிரகங்களில் உயிரினங்கள் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதா என்பது பற்றி திவீரமாக ஆய்வு செய்யபடும். இதற்காக அமைக்கபட்டுள்ள குழுவில் உலகம் முழுவதிலுமிருந்து 12 பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை சேர்ந்த விஞ்ஞானிகள் இடம் பெற்றுள்ளனர். நாசாவின் விண்வெளி தொலைநோக்கி கெப்லர் இதுவரை, 1,000 இற்கும் மேற்பட்ட வேற்றுக கிரகங்களை கண்டறிந்துள்ளது. இவற்றில் அளவில் பூமி போன்று உள்ள…

Read More

குவைத்தில் நிலநடுக்கத்தை பற்றி கிண்டல் செய்த இந்தியரை குத்திக் கொன்ற நேபாளி!

குவைத்தில் வேலை பார்க்கும் நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் தனது நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை பற்றி கிண்டல் செய்த இந்தியரை கொலை செய்துள்ளார். நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் குவைத்தில் வேலை செய்து வருகிறார். அவர் தங்கியிருக்கும் அறையில் இந்தியர் ஒருவரும் தங்கியிருந்தார். இந்நிலையில் அந்த இந்தியர் கடந்த சனிக்கிழமை நேபாளத்தில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கம் பற்றி கிண்டல் செய்துள்ளார். இதனால் அந்த நேபாள நபருக்கு கடும் கோபம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் பலியான நிலநடுக்கத்தை பற்றி கிண்டல் செய்த இந்தியரை…

Read More