Headlines

ரோஹிங்க்யா முஸ்லிம்களுக்காக லண்டனில் ஆர்ப்பாட்டம்

பர்மிய அரசாங்கத்தின் இனவாத, பாராபட்ச  கொள்கையினால் பல தசாப்த காலமாக   தொடர்ந்தும் கொல்லப்பட்டும்,அகதிகளாக்கப்பட்டும் ,அச்சுறுத்தப்பட்டும் வருகின்ற ரோகிங்கா மக்களின் துன்பத்தில் தோய்ந்து, அந்த மக்களைஒடுக்குகின்ற பர்மிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பினை தெரிவிப்பதும், ரோகிங்க மக்களின் மீதான கொடூர அடக்குமுறையை உலகளவில் வெளிக்கொண்டு வருவதும் நம் அனைவரினதும் உடனடிக் கடமையாக உள்ளது. காலத்திற்கு காலம் இனப்படுகொலைக்கும் இனச்சுத்திகரிப்புக்கும் உள்ளாகின்ற ரோகிங்க மக்களின் மீதான கொடூர அடக்குமுறையின் கொடுந்தன்மையை சர்வதேச மயப்படுத்த அனைத்துவகை முயற்சிகளையும் எடுப்பதுடன், அந்த மக்கள் மீதான…

Read More

இங்கிலாந்தில் பெண்களுக்கான தனியான பள்ளிவாசல் உருவாகிறது!

இங்கிலாந்தின் வடக்கே, முஸ்லீம்கள் அதிகம் வாழும் நகர் பிரட்பேர்ட். அங்கு பெண்களுக்காக பெண்களால் நடத்தப்படும் ஒரு பள்ளிவாசலை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிவாசல்களில் பெண்களுக்குத் தேவைப்படும் வசதிகள் குறைவாக இருப்பதால் தனியாக பெண்களுக்கான ஒரு பள்ளிவாசல் தேவை என்கிற திட்டத்தை தற்போது முன்னெடுப்பதாக இதற்கான பெண்கள் அமைப்பு கூறுகிறது. பள்ளிவாசல்களின் நிர்வாகக் குழுக்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் கிட்டத்தட்ட இல்லவே இல்லை என்று கூறுகிறார் முஸ்லீம் பெண்கள் கவுன்சிலின் தலைவரான பனா கோரா. சில மாதங்களுக்கு முன்பு…

Read More

தென் கொரியாவில் வேகமாக பரவும் மெர்ஸ் வைரஸ்: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

தென் கொரியாவில் வேகமாக பரவி வரும் மெர்ஸ் வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. சவுதி அரேபியா நாட்டில் கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் மர்ம நோய் ஒன்று தாக்கியது. அது புது வகை கிருமியால் உருவாகியிருந்தது. இந்த நோய்க்கு ‘மெர்ஸ்’ என்று பெயரிடப்பட்டது. இந்நோய் தாக்கியவர்களில் பலர் உயிரிழந்தனர். அங்கிருந்து ‘மெர்ஸ்’ நோய் மற்ற நாடுகளுக்கும் பரவியது. உலகம் முழுவதும் இதுவரை 1167 பேரை ‘மெர்ஸ்’ நோய் தாக்கியது. இதில் 479…

Read More

நேபாளத்தில் மேகி நூடுல்ஸ் விற்பனை மற்றும் இறக்குமதிக்கு தடை

நேபாள அரசு மேகி நூடுல்சின் விற்பனைக்கும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கும் தடைவித்து உத்தரவிட்டுள்ளது. மேகி நூடுல்சில் உடலுக்கு கேடு விளைவிக்கும் காரீயமும், சுவை கூட்டும் மோனோ சோடியம் குளூட்டோமேட் ரசாயனமும் அதிக அளவு உள்ளதாக புகார் எழுந்துள்ளது. டெல்லி, தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் மேகி நூடுல்ஸ் விற்பனையை தடை செய்துள்ளது. தற்போது ராணுவத்திலும் மேகி நூடுல்சை சாப்பிடக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேபாளத்தில் மேகி நூடுல்ஸ் விற்பனை தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி விவசாயத்துறை அமைச்சக…

Read More

பெண்கள் வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் தேர்தல் முடிவு ரத்து: பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் உத்தரவு

பாகிஸ்தானில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பெண்களுக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து தேர்தல் முடிவை அந்நாட்டு தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. நாட்டின் வடமேற்கில் உள்ள, பழமைவாதிகள் அதிக அளவில் வசிக்கும் கைபர் பக்துன்க்வா மாகாணம் லோயர் திர் மாவட்டத்தில் உள்ள பிகே-95 தொகுதிக்கு கடந்த மே 7-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. எனினும், தேர்தலின்போது பெண்களுக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, சமூக ஆர்வலர்கள்,…

Read More

ரோஹிங்யாமுஸ்லிம்களுக்கு பிராஜா உரிமை வழங்கப்பட வேண்டும் ; அமெரிக்கா கடும் உத்தரவு

மியன்மாரில் நாட்டில் 1 மில்லியனுக்கும் அதிகமான ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் வாழ்கினறனர் அவர்களுக்கான பிரஜா உரிமைகளை 18 இருந்த 24 மாதத்திற்குள் மியன்மார் அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று அமெரிக்கா நாடு மியன்மார் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான பயங்கரமான, கொடூரமான சம்பவங்களும் இப் பரிதாபமான நிலமையும் பாங்காக்கில் 17 பிராந்திய நாடுகள் அவசர மாநாடு ஒன்றை நடத்தும் அளவிற்கு நாடுகளின் கவனத்தை ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது..

Read More

பேஷன் ஷோக்களுக்கு சவுதி அரேபியாவில் தடை

சவுதி அரேபியாவில் பேஷன் ஷோக்கள் நடத்துவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.சமீப காலமாக சவுதி அரசின் வர்த்தக அமைப்பிடம் உரிய அனுமதி பெறாமல் நிறுவனங்களும் வடிவமைப்பாளர்களும் தங்கள் பொருட்களை அறிமுகப்படுத்தவும், விற்பனையை பெருக்கவும் பேஷன் ஷோக்களை நடத்துவதாக புகார்கள் வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், இந்த முடிவு நிறுவனங்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் பாதித்துள்ளது மட்டும் அல்லாமல் பேஷன் ஷோக்களில் பூனை நடைபோட்ட சவுதி ஆண் மாடல்களை கடுமையான வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது….

Read More

பர்மாவில் கடத்தப்பட்ட 16 வயது ஹாசராவின் கதறல்

அபுசெய்க் முஹம்மத் பத்துபேர் சேர்ந்து ஹாசரா ,வயது 16 என்ற பெண்ணை கடத்தி சென்றுள்ளனர். அந்த பெண் சந்தித்த நேரில் பார்த்த கொடுமைகள் கடல்பயணம் முதல் முகாம்கள் வரை பார்க்கலாம் … கடத்தப்பட்ட பெண் மேற்கு பர்மாவை சேர்ந்தவள். 14 பெண்களோடு அவள் ஆபத்தான கப்பலில் பலநாட்கள் பயணிக்கிறாள் . அந்த மரக்கப்பலில் 95 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளோடு பயணம் தொடர்கின்றது . குலைந்த அரிசியும் ,100 மில்லிதண்ணீரும் மட்டுமே உணவாக தரப்பட்டது நான் முதலில்…

Read More

தாஹிராவுக்கு நீதி கிடைத்தது; அமெரிக்க விமானப் பணிப்பெண் பணியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் அறிவிப்பு! (அல்லாஹு அக்பர்)

முஸ்லிம் பெண் பயணி ஒருவர் விமானப் பயணத்தின்போது அவர் முஸ்லிம் என்பதால் மோசமாக நடத்தப்பட்ட சம்பவம் ஊடகங்கள் மற்றும் சமூக வலை தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சம்மந்தப்பட்ட விமான நிறுவனம் இந்த சம்பவத்திற்கு காரணமான தங்கள் நிறுவனத்தின் துணை நிறுவனமான ’சியாட்டில் அமெரிக்கா’வின் பணிப்பெண், பணியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் அறிவித்துள்ளது. அமெரிக்காவில் வசித்து வரும் தாஹிரா அகமத், கடந்த வாரம் சிகாகோவிலிருந்து வாஷிங்டன் செல்லும் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானத்தில் பயணித்தார். பயணத்தின்போது விமானப் பணிப்பெண்ணிடம்…

Read More

பூமியின் சுழற்சி வேகம் குறைவதால் ஜூன் மாதத்தில் ஒரு வினாடி அதிகம்

பூமியின் சுழற்சி வேகம் குறைவதால் இந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு வினாடி நீண்டதாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். டிஸ்கவர் இதழில் வெளிவந்துள்ள செய்தியின்படி ஒருங்கிணைக்கப்பட்ட உலக நேரமானது ஜூன் 30-ம் தேதி நள்ளிரவு 00:00:00 என்று மாறுவதற்கு பதிலாக 23:59:60 இருக்கும் என கூறப்பட்டுள்ளது. பூமியின் சுழற்சியானது வழக்கத்தை விட ஒரு வினாடி குறைவதால் இது ஏற்படுகிறது. இதனால் பூமியில் உள்ள கடிகாரங்களில் நேரத்தை மாற்றி அமைக்கவேண்டும். கூடுதல் வினாடி அல்லது லீப் வினாடி…

Read More

புகைப்பிடித்து பாதிக்கப்பட்டோருக்கு 12.4 பில்லியன் டாலர் இழப்பீடு: புகையிலை நிறுவனங்களுக்கு கனடா நீதிமன்றம் உத்தரவு

புகைப்பிடித்ததால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புகையிலை நிறுவனங்கள் 12.4 பில்லியன் டாலரை இழப்பீடாக கொடுக்க வேண்டும் என கனடா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த இழப்பீடு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 79 ஆயிரத்து 155 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இம்பீரியல் டொபேக்கோ, ரோத்மன்ஸ் பென்சன் அண்ட் ஹைட்ஐஸ் மற்றும் ஜே.பி.ஐ. மென்டொனால்ட் ஆகிய சிகரெட் நிறுவனங்கள் மீது இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கனடாவின் கியூபெக் மாகாணத்தில் 1998-ம் ஆண்டு புகைப்பிடிப்பதால் வரும் உடல்நலக் கேடுகளுக்கு பற்றி தனது தயாரிப்புகளில் விளம்பர வாசகம்…

Read More

என் நண்பனை புதைக்க நானே குழி தோண்டினேன் – ரோஹிங்க்யா முஸ்லிம் சகோதரர் கண்ணீர் ரிப்போட்

அபுஷெய்க் முஹம்மது 1.ஒரு வருடத்திற்கு முன்பு ரோஹிங்க்யா முஸ்லிம்களை கடத்திய கொடுமைக்காரர்களை விட்டும் அவர்களின் முகாம்களை விட்டும் தப்பி சென்று இருக்கின்றார் தோஹா . 2.தோஹா மற்றும் அவருடைய நண்பர்கள் முகாம்களை கண்காணிக்கும் நபர்களால் கொடூரமான முறையால் இரும்புத்தடி மற்றும் கட்டையால் பெற்ற தாக்குதல் பொறுக்க முடியாமல் தப்பிச்சென்று உள்ளனர் . 3.அடர்ந்த காட்டுப்பகுதியான மலேசியா -தாய்லாந்த் நாட்டின் எல்லையோரப் பகுதிகளான வாங் கெலிஅன் என்ற இடத்தில் முகாம்கள் அமைக்கப்பட்டு இந்த கொடுமைகள் அரங்கேறி உள்ளன ….

Read More