Headlines

இஸ்லாமிய பொருளாதாரத்தை நடை முறைபடுத்துவது காலத்தின் கட்டாயம் – ஜேர்மன்

20 நாடுகளின் நிதி அமைச்சர்களின் மாநாடு சில தினங்களுக்கு முன்பு துருக்கியின் அன்கரா நகரத்தில் நடை பெற்றது இந்தியாவின் நிதி அமைச்சர் அருண்யேட்லியும் இதில் பங்கெடுத்தார். ஜெர்மன் நிதி அமைச்சரின் கருத்து மாநாட்டில் பலரையும் கவரும் விதத்தில் இருந்தது ஜெர்மன் நிதி அமைச்சர் தனது உரையில் உலக பொருளாதாரத்தோடு இஸ்லாமிய பொருளாதாரத்தையும் இணைத்து செயலாற்ற வேண்டிய கால கட்டத்தில் நாம் இருக்கிறோம். இஸ்லாமிய பொருளாதாரம் உலகின் முக்கிய இடத்தை பிடித்திருப்பதை தற்போதைய சூழலில் நாம் மறுத்து விடமுடியாது . உலக…

Read More

இஸ்லாத்தில் இணைந்த விமான பணிபெண் மது பானங்களை பரிமாற முடியாது என உறுதி

அமெரிக்காவின் எக்ஸ்பிரஸ் ஜெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணி பெண்ணாக பணியாற்றி வந்த இஸ்லாமிய பெண் ஒருவர் விமான பயணத்தின்போது பயணிகளுக்கு மதுவகைகளை பரிமாற மறுத்துவிட்டார். இதற்கு எனது மார்க்கம் இடம் தரவில்லை எனவே இந்த பணியை நான் செய்ய முடியாது என்று அவர் காரணம் கூறிவிட்டார். இந்த காரணத்திற்காக குறிப்பிட்ட அந்த நிறுவனம் அந்த பணி பெண்ணின் பதவியை பறித்ததுள்ளது. இதை எதிர்த்து நீதி மன்றம் சென்ற அவர் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுத்தார். பணிநீக்கம்…

Read More

உயிருடன் இருக்க வேண்டும் என இறைவனிடம் வேண்டினேன்’: சிறுவனின் சடலத்தை எடுத்த பொலிஸ் அதிகாரி

“சிறுவனை பார்த்த போது உயிருடன் இருக்க வேண்டும் என இறைவனிடம் வேண்டினேன். ஆனால் உயிரிழந்து காணப்பட்டான்’ என்று துருக்கி கடற்கரையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட சிறுவனின் சடலத்தை எடுத்த துருக்கி பொலிஸ் அதிகாரி மெக்மெட் சிப்லாட் தெரிவித்துள்ளார். சிரியாவின் இடம்பெறும் உள்நாட்டுப் போர் காரணமாக அந்நாட்டு மக்கள்  துருக்கி வழியாக அண்டை நாடான ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து வருகின்றனர். ஆனால் தனது நாடுகளில் அகதிகள் குடியேறுவதை ஐரோப்பிய நாடுகள் வண்மையாக எதிர்த்து வந்தன. இந்நிலையில் துருக்கி…

Read More

பண்டைய ஸ்பார்ட்டன் மாளிகை கண்டுபிடிப்பு

கற்காலத்துக்கு அடுத்த காலகட்டத்தில், மக்கள் வெண்கல உபகரணங்களை பயன்படுத்த தொடங்கிய காலத்தில் அழிந்துபோன ஸ்பார்ட்டாவின் மிசிநேயியன் கலாச்சாரத்தைச் சேர்ந்த மாளிகை கண்டறியப்பட்டுள்ளது. பண்டைய கிரேக்கத்தின் கலாச்சாரமான ஸ்பார்ட்டாவின் மிசிநேயியன் கலாச்சாரத்தைச் சேர்ந்த மாளிகையின் மிஞ்சியிருந்த பகுதிகளை கிரீஸ் நாட்டு அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். கிரீஸ் நாட்டின் தென் பகுதியில் உள்ள ஸீரோகாம்பி என்ற பகுதியில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப் பிரபலமாக இந்தக் கலாச்சாரம் கருதப்படுகிறது. பத்து அறைகள் கொண்ட இந்த மாளிகை அயியோஸ் வேசிலேயியோஸ்…

Read More

அதிபர் பதவி ஓய்வுக்கு பின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பணிபுரிய ஒபாமா திட்டம்

தற்போது அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் வருகிற 2017–ம் ஆண்டு முடிவடைகிறது. அதன் பின்னர் எதிர்காலத்தில் அவர் மேற்கொள்ளும் பணி குறித்து தற்போது பல யூகங்கள் எழ தொடங்கி விட்டன. இந்த நிலையில் அவர் அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பணிபுரிய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. கொலம்பியா பல்கலைக் கழக தலைவர் லீ பொலிக் கர் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது…

Read More

பாதிரியார் உட்பட 480 பேர் இஸ்லாத்தை தழுவினர்

ருவாண்டா நாட்டில் கிறிஸ்த்துவ பாதிரியாரோடு சேர்த்து மொத்தம் 480 பேர் நேற்று முன்தினம் ( 31-08-2015) இஸ்லாத்தை ஏற்றனர். மேலும், தங்களது கிருஸ்துவ வழிபாட்டு தளத்தை பள்ளிவாசலாக மாற்றினர். அல்லாஹ் இவர்களின் இம்மை மறுமை வாழ்வை சிறப்பாக்கி வைக்கட்டும் ஆமீன். அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும், மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும், உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக –…

Read More

வெனிசூலா சிறைச்சாலையில் பயங்கர தீ விபத்து: 17 கைதிகள் கருகி சாவு

வெனிசூலாவில் உள்ள சிறைச்சாலையில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வடக்கு வெனிசூலாவின் காரபோபா மாநிலத்தில் உள்ள டோகுயிட்டோ சிறைச்சலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 9 ஆண்கள், 8 பெண்கள் என 17 பேர் இறந்ததாகவும், 11 பேர் படுகாயமடைந்ததாகவும் அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் வேலன்சியாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது….

Read More

இஸ்லாமிய பெண்கள் பாக்கியம் நிறைந்தவர்கள் – அமெரிக்க எழுத்தாளர்

இஸ்லாமிய பெண்கள் அடக்கி ஒடுக்க படுவதாக மேற்குலகம் மற்றும் சில அறிவு ஜீவிகளும் கூவி வரும் நிலையில் அமெரிக்காவின் அறிவு ஜீவியும் பிரபல எழுத்தாளருமான சூயி அவர்கள் இஸ்லாமிய பெண்கள் பாக்கியம் நிறைந்தவர்கள் என்றும் இஸ்லாமிய மார்கத்தில் ஆண்கள் தான் அப்பாவிகள் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். உலகம் எண்ணுவது போல் இஸ்லாமிய பெண்கள் அடக்கி ஒடுக்க படுவதாக முதலில் தாம் எண்ணியதாக கூறும் சூயி சில மாதங்கள் சவுதி அரேபியாவில் வாழும் வாய்ப்பு கிடைத்த போது தான் தனது…

Read More

1000 பேரை இஸ்லாத்தில் இணைத்த மாணவி

பெல்ஜிய பெண்ணான வெரோனிக் கூல் எல்லோரையும் போல கல்லூரிக்கு சென்று வந்தார். கல்லூரியில் பயிலும் ஒரு சில இஸ்லாமிய மாணவிகளோடு தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் செய்து வரும் பழக்கங்கள் இவருக்கு வித்தியாசமாக படவே இஸ்லாத்தை அறிவதில் ஆர்வம் கொண்டார். இஸ்லாமிய தோழிகள் மூலமாக அவருக்கு குர்ஆன் மொழி பெயர்ப்பு கிடைத்தது. குர்ஆனை ஆழ்ந்து படித்தார். பிரஸ்ஸல்ஸில் உள்ள இஸ்லாமிக் சென்டருக்கு அடிக்கடி போய் வந்தார். இஸ்லாம் இந்த இள நங்கையை ஆட் கொண்டது. கலிமா மொழிந்து ஏக…

Read More

சவூதியில் வாஷிங் மெஷினுக்குள் விழுந்து சிக்கிய 3 வயது குழந்தை

சவுதி அரேபியாவில் விளையாடும்போது வீட்டில் இருந்த வாஷிங் மெஷினுக்குள் தவறிவிழுந்து சிக்கிக்கொண்ட 3 வயது பெண் குழந்தையை உயிருடன் காப்பாற்ற அந்நாட்டின் பாதுகாப்பு படையினர் நடத்திய போராட்டம், ‘வைரல்’ புகைப்படங்களாக சமூக வலைத்தளங்களை கலக்கி வருகின்றது. பலமணி நேர போராட்டத்துக்கு பின்னர், வாஷிங் மெஷினை வெட்டி அந்த குழந்தையின் உயிரை காப்பாற்றிய பாதுகாப்பு படையினருக்கு பாராட்டு மழையும், அந்த குழந்தைக்கு இந்தகதி ஏற்பட காரணமாக இருந்த தாயின் அஜாக்கிரதைக்கு வசை மழையும் பெருகி வருகின்றது. அந்த தாய்க்கு…

Read More

அமெரிக்காவில் லஞ்சம் தந்த இந்தியர் கைது

அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் மதுபானக்கடை திறக்க விரும்பிய முகுந்த்குமார் படேல்(52) என்பவர் உள்ளாட்சி நிர்வாகத்திடம் இதற்கான அனுமதிகோரி இந்தியாவை சேர்ந்த விண்ணப்பித்தார். இதனை பரிசீலிக்க தங்களுக்கு உரிமை இல்லை என கூறிய அதிகாரிகள், உள்ளாட்சியைச் சேர்ந்த மக்கள் பிரநிதியிடம்தான் இதற்கான அதிகாரம் உள்ளது என்றனர். இதைத்தொடர்ந்து, கிழக்கு கிளீவ்லேண்ட் பகுதியின் உள்ளாட்சிப் பிரதிநிதியைச் சந்தித்த முகுந்த்குமார் படேல் இந்த விண்ணப்பத்தை அங்கீகரித்து கையொப்பமிட்டால், இரண்டாயிரம் அமெரிக்க டாலர்களை அவருக்கு லஞ்சமாக கொடுப்பதாக ஆசை காட்டினார். இதற்கு, அந்த…

Read More

சிறைக்கு திரும்பிய மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி நஷீட்

மாலை­தீவு முன்னாள் ஜனா­தி­பதி மொஹமட் நஷீட்­டிற்கு விதிக்­கப்­பட்ட 13 வருட சிறைத்­தண்­டனை வீட்டுக் காவ­லாக குறைக்­கப்­பட்­ட­தற்கு ஒரு மாதத்­திற்குப் பின்னர் அவர் சிறை திரும்­பி­யுள்­ள­தாக அவ­ரது கட்சி திங்­கட்­கி­ழமை தெரி­வித்­தது. மாலை­தீவின் தலை­ந­க­ரி­லுள்ள வீட்­டி­லி­ருந்து நஷீட் ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு மாபுஷி தீவி­லுள்ள பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்ட சிறைச்­சா­லைக்கு அழைத்துச் செல்­லப்­பட்ட வேளை பொலிஸார் மற்றும் சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கும் அவ­ரது மாலை­தீவு ஜன­நா­யகக் கட்­சியின் ஆத­ர­வா­ளர்­க­ளுக்­கு­மி­டையே மோதல் இடம்­பெற்­றுள்­ளது. தண்­டனை மாற்­றப்­பட்­டி­ருந்த நிலையில் நஷீட் சிறைச்­சா­லைக்கு திரும்­பவும் அனுப்பி வைக்­கப்­பட்­டமை…

Read More