Headlines

அப்துல் கலாம் காலமானார்

மேகாலய மாநில தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.) இன்று நடைபெற்ற கருத்தரங்கில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிக் கொண்டிருந்த அப்துல் கலாமுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மயங்கி சரிந்த அவரை அங்குள்ள பெத்தானி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து ராணுவ மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் குழு…

Read More

சிரிப்பு வரவழைக்கும் GASஐ சுவாசித்த வாலிபர் பலி

இங்கிலாந்தில் லாப்பிங் GAS (சிரிப்பை வரழைக்கும் GAS எனப்படும்) நைட்ரஸ் ஆசிட் மோகம் அதிகமாக உள்ளது. டீன் ஏஜ் முதல் பெரியவர்கள் வரை இதை சுவாசித்து மிக மகிழ்ச்சியாகவும், பேரானந்தமாகவும் இருக்க விரும்புகின்றனர். அதுவே அவர்களுக்கு எமனாக மாறி விடுகிறது. நைட்ரஸ் ஆசிட் உடலில் இருக்கும் ஆக்சிஜனை செயல் இழக்க செய்து உயிரை இழக்க செய்கிறது. அது போன்ற சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. லண்டனை சேர்ந்த 18 வயது வாலிபர் ஒருவர் நண்பரின் விருந்து நிகழ்ச்சிக்கு சென்றார்,….

Read More

உலகின் முதல் மலேரியா தடுப்பூசிக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்

கொடிய உயிர்க்கொல்லி நோயான மலேரியா காய்ச்சலை தடுத்து, கட்டுப்படுத்தும் புதியவகை தடுப்பூசிக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த 2013 ஆண்டில் மட்டும் மலேரியா பாதிப்பினால் 6 லட்சத்து 27 ஆயிரம் மக்கள் பலியாகினர். இவர்களில் 5 லட்சத்து 62 ஆயிரம் பேர் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள். இதில் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 82 சதவீதம் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த நோயில் இருந்து உலக மக்களை காப்பாற்றும் முயற்சியில் கடந்த…

Read More

சாப்பிட ஆள் இல்லை – சரியும் மெக்டொனால் வருவாய்

பிரபலமான துரித உணவுகளை விற்பனை செய்யும் நிறுவனமான மெக்டொனால்டின் வருவாய் சரிந்துவருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காலாண்டிற்கான வருவாய் கணக்குகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் நிறுவனத்தின் வருவாய்யானது 13.3 சதவீதம் குறைந்துள்ளதாகவும், இது டாலர் மதிப்பில் 1.2 பில்லியன் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக ஆசிய நாடுகளில் அதன் விற்பனை 4.5 சதவீதம் சரிந்துள்ளது. சொந்த நாடான அமெரிக்காவில் விற்பனை சரிவானது 2 சதவீதமாக உள்ளது. ஒட்டு மொத்தமாக உலக அளவில் மெக்டொனால்டு விற்பனை 0.7 சதவீதம்…

Read More

7000 கார்களுக்குச் சொந்தக்காரர்..!

உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான, புரூனே நாட்டின் சுல்தான், ஆடம்பர கார்களை வாங்கி குவிப்பதில் அவருக்கு நிகர் அவர் மட்டுமே. எண்ணெய் வளமிக்க நாடான புரூனே, 1967ல் தனி நாடானது. அதன் சுல்தானாக (மன்னராக) ஹசனன் போக்கியா முயுசுதீன் வாதுலா இருந்து வருகிறார். எண்ணெய் வளத்தால் கொழிக்கும் அந்நாட்டு சுல்தானின் வருமானத்திற்கு, அளவே இல்லாமல் போய் விட்டது. ஒரு வினாடிக்கு அவரது வருவாய், 5,277 ரூபாய். அதுவே, ஒரு வாரத்திற்கு 3,191 கோடி ரூபாய். அவரது…

Read More

பூமி போன்ற புதிய கோளை கண்டுபிடித்தது கெப்ளர் விண் தொலைநோக்கி

மிகப் பெரிய விண் தொலைநோக்கியான கெப்ளர் பூமி போன்ற புதிய கோளை கண்டுபிடித்ததுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கெப்ளர் விண்கலம் என்பது விண் தொலைநோக்கி ஆகும். கடந்த 2009ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட கெப்ளர் தற்போது பூமியிலிருந்து 150 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் சுற்றி வருகிறது. கெப்ளர் தொலை நோக்கி  இதுவரை 1028 கிரகங்களையும், 4661 கிரகம் போன்றவற்றையும் கண்டுபிடித்துத் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கெப்ளர் தொலைநோக்கி கிட்டத்தட்ட பூமி போலவே உள்ள ஒரு புதிய கோள்ளை கண்டுபிடித்துள்ளது….

Read More

நவாஸ் ஷெரீபை அமெரிக்காவுக்கு அழைத்த ஒபாமா

ராணுவ பலத்தை அதிகரிப்பதை விட்டு, இந்தியாவுடன் அமைதியான உறவை மேற்கொள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் முயன்று வருவதை அவரது சமீபத்திய நடவடிக்கைகள் வெளிப்படுத்தி வரும் நிலையில், இந்தியா உள்பட அண்டை நாடுகளுடன் நட்புறவை வலுப்படுத்துவதற்கான கொள்கைகளுக்கு ஆதரவு திரட்டும் வகையில், அரசுமுறை சுற்றுப்பயணமாக அமெரிக்காவுக்கு வருகை தர வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள தகவலின்படி, அக்டோபர்…

Read More

என்ன செய்ய நினைக்கிறார் ஒபாமா?

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவி காலம் முடிவடைவதற்கு இன்னும் 18 மாதங்களே உள்ளது. அந்நாட்டு சட்டப்படி ஒருவர் இரண்டு முறைக்கு மேல் அதிபராக இருக்க முடியாது என்பதால் அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது. இந்நிலையில் இன்னும் மீதமிருக்கும் இந்த 18 மாதங்களில் நீங்கள் முக்கியமாக என்ன செய்ய நினைக்கிறிர்கள் என்று கேட்கப்பட்டதிற்கு ஒபாமா ”இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளையும் பருவநிலை மாற்றம் தொடர்பான அமெரிக்காவின் பரிந்துரைகளை ஏற்க செய்வது தான் என் முக்கிய…

Read More

சவப்பெட்டியில் அமர்ந்து திருமண புகைப்படங்கள்

தமது திரு­மண புகைப்­ப­டங்கள் மங்­க­ள­க­ர­மாக இருக்க வேண்டும் என திரு­மண பந்­தத்தில் இணையும் ஜோடிகள் விரும்­பு­வது வழமை.ஆனால் மர­ணச்­ச­டங்­கு­க­ளுக்­கான ஏற்­பா­டு­களை வழங்­கு­ப­வர்­க­ளாக பணி­யாற்றும் ஜென்னி டாய் மற்றும் தரென் செங் (30 வயது) ஆகியோர் தமது திரு­மணப் புகைப்­ப­டங்­களை சவப்­பெட்­டி­யொன்­றினுள் அமர்ந்தும் அதற்கு அருகில் நின்றும் எடுத்­துள்­ளனர். இந்த புகைப்­ப­டங்கள் சிங்­கப்­பூரில் புங்கொல் நக­ரி­லுள்ள பூங்­கா­வொன்றில் எடுக்­கப்­பட்­டுள்­ளன. பிர­பல மர­ணச்­ச­டங்கு ஏற்­பாட்­டாளர் ஒரு­வரின் மக­ளான ஜென்னி, மரணம் தொடர்பில் சிறு­வர்­க­ளுக்­கான புத்­த­கங்­களை எழு­தி­யுள்ளார். மக்கள் வாழ்க்­கையின் அங்­க­மா­க­வுள்ள…

Read More

குட்டிக் குழந்தையை காப்பாற்றிய ஐந்து வயது அஹமத்

இங்கிலாந்தின் கிழக்கு சஸ்செக்ஸ் கவுண்டியைச் சேர்ந்த யுசிகேஃபீல்டு பகுதியைச் சேர்ந்தவர் ஜான் பென்னி (வயது 68). இவரது மனைவி கரோலின் (வயது 57). இவர்கள் இருவரும் தங்களின் ஒரு வயது பேத்தியுடன் கடைக்கு சென்றனர். குழந்தை ஐரிஸ் தூங்கியதால் காரின் பின் இருக்கையில் படுக்க வைத்துவிட்டு பொருட்களை வாங்கினர். சாவியை எடுக்கவில்லை. திரும்பி வந்து பார்த்தபோது கார் தானாகவே பூட்டிக் கொண்டிருந்தது. காரைத் திறக்க எந்த வகையிலும் முடியாததால், ஐரிஸின் பாட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து…

Read More

குழந்தையை காருக்குள் வைத்து பூட்டிச் சென்ற தந்தை கைது

ஆஸ்திரேலியாவில் 2 வயது குழந்தையை காருக்குள் வைத்து பூட்டிச்சென்ற தந்தையை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். சிட்னியைச் சேர்ந்த ஒருவர் தனது 2 வயது குழந்தையுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றுள்ளார். நேர்முகத் தேர்வு நடைபெறும் பெல்லா விஸ்டா என்ற பகுதி வந்தவுடன், தனது குழந்தையை காரினுள் வைத்து பூட்டிவிட்டு சென்று விட்டார். பூட்டிய காருக்குள் குழந்தை இருப்பதை அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று குழந்தையை மீட்டனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த அந்த…

Read More

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் பதவி: இந்தியாவுக்கு சீனா ஆதரவு

ஐ.நா. சபையில் அதிகாரமிக்க பாதுகாப்பு கவுன்சிலில் சீனா, பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 5 நாடுகள்தான் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. இதில் நிரந்தர உறுப்பினர் பதவி பெற வேண்டும் என்பது இந்தியாவின் நெடுநாளைய விருப்பம். இந்த விஷயத்தில் இப்போது இந்தியாவுக்கு சீனா திடீரென ஆதரவு தெரிவித்துள்ளது. ரஷியாவில் உள்ள உபா நகரில் நேற்று முடிந்த ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டின் நிறைவில் வெளியிடப்பட்ட பிரகடனத்தில் இது தெரியவந்துள்ளது. அந்த பிரகடனத்தில், “சர்வதேச விவகாரங்களில் பிரேசில், இந்தியா, தென்…

Read More