Headlines

முகமது அலியின் குருதியில் நச்சுத் தன்மை – இஸ்லாமிய முறைப்பாடி ஜனாஸா நல்லடக்கம்

-BBC- அமெரிக்காவின் கென்டகி மாநிலத்திலுள்ள, மறைந்த குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலியின் சொந்த ஊரான லூயிஸ்வில்லில் அவரது இறுதி சடங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வெள்ளிக்கிழமை நடக்கவுள்ள முகமது அலியின் இறுதி சடங்கு இந்த உலகின் ஒரு குடிமகனான வாழ்ந்த முகமது அலி, வரும் வெள்ளிக்கிழமையன்று நடைபெறும் தனது இறுதி சடங்கில் சமூகத்தின் அனைத்து மட்டங்களில் இருந்து பலதரபட்ட மக்களும் கலந்து கொள்ள விரும்புவார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். குறிப்பிடப்படாத இயற்கை காரணங்களால் குருதியில் நச்சுத்…

Read More

மதமாறி இஸ்லாமிய பெண்னை திருமனம் முடித்தமைக்கு ஹாஸிம் அம்லாவே காரணம்- வெய்ன் பார்னெல்

– அஹமட் இர்சாட் மொஹமட் புஹாரி – தென்னாபிக்க அணியில் 2010ம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய வெய்ன் தில்லான் பார்னெல் Wayne Dillon Parnell 1989ம் ஆண்டு ஜூலை மாதம் 30ம் திகதி தென்னாபிரிக்க நாட்டின் போர்ட் எலிசபத் நகரில் பிறந்துள்ளார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான பார்னெல் 2013ம் ஆண்டு தனது அறிமுக ஒரு நாள் சர்வதேச போட்டியில் இந்தியாவிற்கு எதிராக விளையாடியுள்ளதோடு 20க்கு இருபது சர்வதேச போட்டியில் 2009ம்…

Read More

 குத்துச்சண்டை ஜாம்பவானான முஹம்மட் அலி காலமானார்

குத்துச்சண்டை ஜாம்பவானான முஹம்மட் அலி, தனது 74ஆவது வயதில் காலமானதாக அவரின் குடும்பப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். உலகின் முன்னாள் அதிபாரக் குத்துச்சண்டை சம்பியனும், உலகின் நன்கு அறியப்பட்டுள்ள விளையாட்டு வீரரான அலி, ஐக்கிய அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்திலுள்ள ஃபோனிக்ஸ் நகரத்திலுள்ள வைத்தியசாலையில், இவ்வார ஆரம்பத்தில், அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே மரணமடைந்துள்ளார்.

Read More

மலேஷியாவில் இஸ்லாமிய சட்டம் வருகிறது

மலேஷிய பாராளுமன்றத்தில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய குற்றவியல் சட்டம் அந்நாட்டு அரசுக்குள் பிளவை கொண்டுவரும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஹுதூத் சட்டம் என அழைக்கப்படும் இந்த சட்டமூலம் எதிர்க் கட்சியான பான் மலேஷியா இஸ்லாமிய கட்சியின் தலைவர் அப்துல் ஹதி ஆங்கினால் கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

Read More

ஆய்வாளர்களை திகைக்க வைத்த துட்டன்காமன் கத்தி: விண்கல்லால் செய்யப்பட்டது கண்டுபிடிப்பு

பண்டைய எகிப்தின் பதினெட்டாவது வம்ச மன்னன் துட்டன்காமன். 9-வது வயதில் பட்டத்திற்கு வந்த இவன் கி.மு. 1333 முதல் கி.மு. 1324 வரை புதிய இராஜ்ஜியம் என்ற பெயரில் அமைந்த எகிப்தை ஆண்டான். பதவியேற்று சுமார் 9 ஆண்டுகள் மட்டுமே உயிரோடு இருந்தான். இந்நிலையில், 1922-ம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி ஹவார்ட் கார்ட்டர் என்னும் தொல்லியலாளர், பொக்கிஷங்கள் அடங்கிய துட்டன்காமன் மம்மியுடன் கூடிய கல்லறையை கண்டுபிடித்தார். இது உலகம் முழுவதும் ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டது….

Read More

ஐந்தே நிமிடங்களில் டெல்லியை தாக்கும் ஆற்றல் பாகிஸ்தானுக்கு உண்டு

பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரின் அருகேயுள்ள கவுட்டா பகுதியில் அணு ஆயுதங்களை தயாரிக்க தேவையான யுரேனியத்தை செறிவூட்டும் நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையத்தின் தலைமை ஆராய்ச்சியாளராக முன்னர் பொறுப்புவகித்த அப்துல் காதீர் கான்(80) பாகிஸ்தானின் அணு ஆயுதங்களின் பிதாமகன் என கருதப்படுகிறார். பாகிஸ்தான் முதன்முறையாக கடந்த 28-5-1988 அன்று ஐந்து அணுகுண்டுகளை பூமிக்கு அடியில் வெடிக்கவைத்து பரிசோதனை நடத்தியது. இந்த பரிசோதனைகளின் பாகிஸ்தான் பெரிய அளவில் வெற்றியை காட்டியது. உலகின் வல்லரசு நாடுகளுக்கு இணையான ஆயுதபலம் தன்னிடம் இருப்பதாக…

Read More

வட துருவத்தில் மர்மமான இராட்சத துளை, யார் மறைக்கும் உண்மை இது..?

சதியாலோசனை கோட்பாடு என்பது வியூகத்தின் அடிப்படையில் உருவான ஒரு விளக்கமாகவோ அல்லது கருதுகோளாகவோ இருக்கும். இது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களால் அல்லது ஒரு நிறுவனத்தினால் பரிந்துரைக்கப்படும் ஒன்றாக இருக்கும். பொதுவாக சட்டவிரோதமான, மறைக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட அல்லது தீங்கிழைக்கும் தொடர்புடைய இரகசியங்கள் அல்லது நிகழ்வுகளை சார்ந்தே தான் இந்த சதியாலோசனை கோட்பாடுகள் பிறக்கும்..! அப்படியாக, நாசாவும் பிற உலக நாட்டு அரசாங்கமும் பூமி கிரகத்தின் வட துருவத்தில் உள்ள ஒரு மர்மமான இராட்சத…

Read More

டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த வடகொரியா

அணு ஆயுத சோதனைகள் நடத்தி வருகிற வடகொரியாவுடன் அமெரிக்கா மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுடன் சேர்ந்து அமெரிக்காவும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான குடியரசு கட்சியின் உத்தேச வேட்பாளர் டொனால்டு டிரம்ப், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “நான் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னுடன் பேசுவேன். அவருடன் பேசுவதற்கு எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. வடகொரியாவுடன் நேருக்கு நேர் பேசுவேன்” என…

Read More

மாலைதீவு முன்னாள் அதிபர் இங்கிலாந்தில் தஞ்சம்!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நண்பரான, மாலைதீவு நாட்டின் முன்னாள் அதிபர் முஹம்மது நஷீத் இங்கிலாந்து நாட்டில் அகதியாக தஞ்சம் அடைந்துள்ளார். மாலைதீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் (49), கடந்த 2008-ம் ஆண்டு அந்நாட்டில் நடந்த பொதுத் தேர்தல் மூலம் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபராவார். 2012-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தோல்வி அடைந்த நஷீத், ஆட்சியை அப்துல்லா யாமீன் என்பவரிடம் பறிகொடுத்தார். அப்துல்லா யாமீன் தலைமையிலான அரசு முஹம்மது நஷீத்…

Read More

விண்வெளியில் பயிரிட காய்கறி செடிகள் உருவாக்கம்

விண்வெளியில் பயிரிடக் கூடிய காய்கறி செடிகள் உருவாக்குவது குறித்து நெதர்லாந்து பல்கலைக் கழகம் ஆய்வு மேற்கொண்டுள்ளது. வேற்று கிரகங்களில் மனிதர்கள் குடியேறுவது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் சென்று தங்குவதற்கான கனவு தொடங்கி அது நடைமுறைப்படுத்தப்படும் சூழ்நிலை நிலவுகிறது. சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகங்களில் மனிதர்கள் சென்று தங்கும் பட்சத்தில் அவர்கள் சாப்பிட காய்கறிகள் உற்பத்தி செய்ய செடிகள் உருவாக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அதற்கான ஆராய்ச்சியில் நெதர்லாந்து…

Read More

வடகொரியா அதிபருடன் பேசுவேன்: டொனால்டு டிரம்ப் அதிரடி

அமெரிக்காவில் குடியரசுக் கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட பல மாதங்களுக்கு முன் பிரச்சாரத்தை தொடங்கிய டொனால்டு டிரம்ப் முஸ்லிம்களுக்கு எதிரான தனது சர்ச்சைக்குரிய பேச்சு மூலம் பிரபலமானார். தொடர்ந்து பல சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டும் வருகிறார். அந்த வகையில் அமெரிக்காவிற்கு நேரடியாக சவால்விட்டு வரும் வடகொரியாவுடன் பேச்சு நடத்துவேன் என்று தெரிவித்துள்ளார். வடகொரியாவுடன் அமெரிக்காவின் உறவு குறித்து டிரம்பிடம் கேள்வி எழுப்பிய போது “நான் அவருடன் பேசுவேன்(கிம் ஜோங்). அவருடன் பேசுவதில் எனக்கு எந்த பிரச்சனையும்…

Read More

69 பயணிகளுடன் விமானம் மாயம்

எகிப்துக்கு சொந்தமான பயணிகள் விமானமொன்று 59 பயணிகள் மற்றும் 10 விமான சிப்பந்திகளுடன் மாயமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரான்ஸ் தலைநகர் பரிஸிலிருந்து கெய்ரோ நோக்கி பயணித்த எகிப்து விமான சேவைக்கு சொந்தமான எம். எஸ். 804  என்ற பயணிகள் விமானமே நேற்று இரவு 11 மணியளவில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எகிப்தின் வான்வெளி விமான பரப்பிலிருந்து 80 மைல் தொலைவில் கட்டுப்பாட்டறைக்கான தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் விமானத்தை தேடும் பணியில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் எகிப்து விமானவேவை…

Read More