Headlines

ஹிலாரி அசத்தல் – டிரம்ப் சொதப்பல்

அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து நடந்த, முதல் நேரடி விவாதத்தில், ஜனநாயக கட்சியின் ஹிலாரி கிளின்டன், (வயது 68) தன் நேர்த்தியான வாதத் திறமையால் அசத்தினார். அவருடைய வாதத்தை சமாளிக்க முடியாமல், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப், (வயது 70), சொதப்பினார். அமெரிக்க அதிபர் தேர்தல், நவம்பர், 8ல், நடக்கிறது. இந்தத் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக, முன்னாள் வெளியுறவு அமைச்சரும், முன்னாள் அதிபர் கிளின்டனின் மனைவியுமான ஹிலாரியும், குடியரசு கட்சி சார்பில், தொழிலதிபர் டொனால்டு…

Read More

இஸ்ரேல் – டிரம்ப் கூட்டு சதி!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றால் ஜெரூசலத்தை இஸ்ரேலின் பிரிக்கப்படாத தலைநகராக அங்கீகரிப்பதாக குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் உறுதி அளித்துள்ளார். இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவை கடந்த ஞாயிறன்று டிரம்ப் டவரில் இருக்கும் தனது இல்லத்தில் தனிப்பட்ட முறையில் சந்தித்த டிரம்ப் இந்த வாக்குறுதியை அளித்துள்ளார். நெதன்யாகு ஜனநாயக கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளின்டனையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார். “3000 ஆண்டுகளுக்கு மேலாக ஜெரூசலம் யூத மக்களின் தலைநகர் என்பதை டிரம்ப் அறிந்தே உள்ளார்….

Read More

80 வயது முதிர்ச்சியான தோற்றத்துடன் பிறந்த குழந்தை

பங்களாதேஷில் முதிர்ச்சியான தோற்றதுடன் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளமையானது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பங்களாதேஷ் மாகுரா மாவட்டத்தில் நேற்று ஆண் குழந்தை ஒன்று பிறந்ததுள்ளது. முதிர்வு தோற்றதுடன் பிறந்த அந்த குழந்தை காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குழந்தையின் முகம், கண்கள் மற்றும் சுருங்கிய தோல் என உடலின் அனைத்து பாகங்களும் முதிர்ச்சியான தோற்றத்துடன் காணப்படுகிறது. ‘முதிராமுதுமை’ என்ற குறைபாட்டுடன் பிறந்த அந்த குழந்தை இயல்பான வளர்ச்சியை விட எட்டு மடங்கு வேகமாக வளர்ச்சியடைந்துள்ளதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

Read More

ஹிலாரி - டிரம்ப் இன்று நேரடி விவாதம்

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 8-ந் தேதி நடக்கிறது. அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஹிலாரி கிளிண்டன் (ஜனநாயக கட்சி), டொனால்டு டிரம்ப் (குடியரசு கட்சி) ஆகியோர் இடையேயான முதல் நேரடி விவாதம் நியூயார்க்கில் உள்ள ஹோப்ஸ்ட்ரா பல்கலைக் கழகத்தில் இன்று நடந்தது. அப்போது அவர்கள் இருவரும் வேலை வாய்ப்பு, ஈராக் போர் மற்றும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளில் தங்களின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தனர். இந்த விவாதம் கார சாரமாக நடந்தது. இந்த விவாதத்தை 10 கோடி மக்கள்…

Read More

ஹிலாரிக்கு 75 முன்னாள் தூதர்கள் ஆதரவு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரிக்கு முன்னாள் தூதர்கள், வெளியுறவுத்துறை அதிகாரிகள் 75 பேர் தங்கள் வெளிப்படையான ஆதரவை அறிவித்துள்ளனர்.

Read More

நேதாஜி விமான விபத்தில் தான் இறந்தார்

1945-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தைபேயில் நடந்த விமான விபத்தில்தான் நேதாஜி இறந்தார் என இங்கிலாந்து இணையதளம் ஒன்று தற்போது செய்தி வெளியிட்டு உள்ளது.

Read More

விமான ஓடுபாதையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்திய தம்பதி

சீனாவைச் சேர்ந்த ஒரு தம்­ப­தி­யினர் தாம் பயணம் செய்­ய­வி­ருந்த விமா­னத்தை தவ­ற­விட்­டதால், அவ்­வி­மானம் புறப்­ப­டு­வதை தடுப்­ப­தற்­காக விமான ஓடு­பா­தையில் அமர்ந்து ஆர்ப்­பாட்டம் நடத்­தி­யுள்­ளனர்.  பெய்ஜிங் சர்­வ­தேச விமான நில­யைத்தில்  அண்­மையில் இச்­சம்­பவம் இடம்­பெற்­றது. ஷாங்காய் நக­ருக்குச் செல்லும் பிளைட் சி.ஏ.1519 விமா­னத்தில் இத் தம்­ப­தி­யினர் பயணம் செய்­ய­வி­ருந்­தனர்.  காலை 9.30 மணிக்கு இவ்­வி­மானம் புறப்­ப­ட­வி­ருந்­தது. ஆனால், பய­ணி­க­ளுக்­கான இறுதி அழைப்பின் பின்­னரும் இவர்கள் விமா­னத்தில் ஏற­வில்லை. தாம் விமா­னத்தை தவ­ற­விட்­டதை உணர்ந்த இத்­தம்­ப­தி­யினர் விமான ஓடு­பா­தைக்குள் புகுந்து…

Read More

2 பள்ளிவாசல்களையும், 35 முஸ்லிம் பாடசாலைகயும் தரைமட்டமாக்க மியன்மார் அரசு உத்தரவு

மியன்மாரில் மதக்கலவரம் இடம்பெற்ற ரகினே மாநிலத்தில் பல டஜன் பள்ளிவாசல்கள் மற்றும் இஸ்லாமிய பாடசாலைகள் (மத்ரசா) உட்பட 3000க்கும் அதிகமான கட்டடங்களை இடிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் புதிடொங் மற்றும் மொங்டோ நகரங்களில் அண்மைய ஆண்டுகளில் சட்டவிரோத கட்டடங்கள் அதிகரித்திருப்பதாக குறிப்பிடும் பாதுகாப்பு மற்றும் எல்லை விவகாரங்களுக்காக மாநில அமைச்சர் கேணல் ஹிடைன் லின், நிலைமை கட்டுப்பாட்டை மீறும் முன்னர் தீர்வு காணப்பட வேண்டும் என்று தெரிவித்தார். இந்த இரு நகரங்களிலும் 12…

Read More

ஆக்கிரமித்த நிலங்களை இஸ்ரேல் திருப்பி தர வேண்டும் – அப்பாஸ்

ஐ.நா. பொது சபை கூட்டத் தொடரில் பேசிய பாலஸ்தீனம் அதிபர் அப்பாஸ், போரின் போது தங்களிடம் இருந்து ஆக்கிரமித்த நிலங்களை இஸ்ரேல் திருப்பி தர வேண்டும் என்று வலியுறுத்தினார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளின் முக்கிய தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர். அந்த வகையில் இன்று கூட்டத் தொடரில் பேசிய பாலஸ்தீனம் அதிபர் மஹ்மவுத் அப்பாஸ், போரின் போதுதங்களிடம் இருந்து எடுத்துக் கொண்ட நிலங்களை இஸ்ரேல்…

Read More

பாலஸ்தீன பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் – ஐ.நா.வில் கட்டார் அமீர்

அப்பாவிகளின் இரத்தம் எங்கு சிந்தப்பட்டாலும் பிரித்து பார்க்காமல் இருக்க வேண்டும் : பாலஸ்தீன் குறித்து ஐநாவில் கட்டார்  அமீர் பேச்சு….!! ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டுத்தொடர் தொடங்கி விட்டது. அதில் பங்கேற்று பேசிய கத்தார் அமீர் தமீம் பேசுகையில்…. அப்பாவிகளின் இரத்தம் எங்கு சிந்தப்பட்டாலும் பிரித்து பார்க்காமல் இருக்க வேண்டும் பாலஸ்தீன் பிரச்சினை 70 ஆண்டுகளுக்கு மேலாக அப்படியே இருக்கிறது. இஸ்ரேல் மேலும் மேலும் பாலஸ்தீன் மீது தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறது. இஸ்ரேல் மேற்கு கூரையிலும், குத்சிலும் குடியிருப்புகளை…

Read More

கடலில் தொலைத்த திருமண மோதிரத்தை 37 வருடங்களின் பின்னர் மீண்டும் பெற்ற தம்பதி

ஸ்பெய்னைச் சேர்ந்த ஒரு தம்பதி கடலில் தொலைத்த தமது திருமண மோதிரத்தை 37 வருடங்களின் பின்னர் மீண்டும் பெற்றுக்கொண்டுள்ளது. அகஸ்டின் அலியகா என்பவரும் அவரின் மனைவி குவானி சான்செஸும் 1979 பெப்ரவரி 17 ஆம் திகதி திருமணம் செய்திருந்தனர். இத்திருமணத்துக்கு சில மாதங்களின் பின்னர் கடலில் நீந்திக்கொண்டிருந்த போது, அகஸ்டின் அலியகா அணிந்திருந்த மோதிரம் கடலில் வீழ்ந்தது. தேடுதல் நடத்திய போதிலும் அம்மோதிரத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இநநிலையில், கடந்த மாதம் பெனிடோர் நகரில் கரையோரத்தில் சுழியோட்ட…

Read More

இந்தியாவிற்கு உரிய பதிலடி கொடுங்கள் – நவாஸ் ஷரீப்

ஐ.நா. சபையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் நேற்று(புதன்கிழமை) காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா.சபையில் பேசுவதற்கு முன்னதாக அந்நாட்டு ராணுவ தளபதி ரஹீல் செரீப்பிடம் பேசி உள்ளார். ஐ.நா.சபையில் பேச உள்ள விவகாரம் தொடர்பாக தொலைபேசியில் ரஹீல் செரீப்பிடம், நவாஸ் செரீப் பேசியதாக தெரிகிறது. இதற்கிடையே இந்தியாவின் நடவடிக்கைக்கு முழு திறம்பட பதிலடி கொடுக்குமாறு ரஹீல் செரீபை, நவாஸ் ஷரீப் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவித்து உள்ளன.

Read More