News
அரசுக்கு ஜாதிக ஹெல உறுமய எச்சரிக்கை!
முன்னைய ஆட்சியில் கொலைகள், கொள்ளைகள், ஊழல்களில் ஈடுபட்டவர்களைத் தண்டிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறினால், தற்போதைய அரசிலிருந்து விலகி விடுவோம் என ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் வண.ஓமல்பே சோபித தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த அரசும் முன்னைய அரசைப் போலவே,கொலைகாரர்களையும், கொள்ளையர்களையும், ஊழல் செய்தவர்களையும் தண்டிக்கத் தவறினால், நாம் அரசிலிருந்து இருந்து விலக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மைத்திரிபால சிறிசேன அரசில், ஜாதிக ஹெல உறுமய அங்கம் வகிப்பதுடன், இதன் செயலாளரான…
6.2 கோடி குழந்தைகள் புதிய தலைமுறை மனிதாபிமான நெருக்கடிகளுக்கு உள்ளாகின்றன – யுனிசெப்
உலகம் முழுவதும் 6.2 கோடி குழந்தைகள் புதிய தலைமுறை மனிதாபிமான நெருக்கடிக்கு ஆளாகின்றன. இதற்காக ஐ.நாவின் குழந்தைகள் நிதியம் 3.1 பில்லியம் டாலர் நிதி ஒதுக்கி உள்ளது.சமீப காலங்களில் குழந்தைகளுக்கான் அச்சுறுத்தல்கள் அதிகமாக வளர்ந்து உள்ளன.மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் எபோலோ நோய் மூலமும் , சிரியாவில் தீவிரவாதம் மூலமும் அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த நிதி உதவி மூன்றில் ஒரு பங்கு அதிகமாகும். இது குறித்து யுனிசெப் இயக்குனர் அப்சான் கான் கூறியதாவது:-…
ஏர்ஏசியா விமானம் கடலுக்குள் விழும் முன்பு முக்கிய கம்ப்யூட்டர் சிஸ்டத்தை செயலிழக்க செய்த விமானிகள்
ஏர்ஏசியா விமானம் கடலுக்குள் விழுவதற்கு முன்பு அதில் இருந்த முக்கிய கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டு சிஸ்டத்தை விமானிகள் செயல் இழக்கச் செய்தது தெரிய வந்துள்ளது. இந்தோனேசியாவின் சுரபயா நகரில் இருந்து 162 பேருடன் சிங்கப்பூருக்கு சென்ற ஏர்ஏசியா விமானம் க்யூஇசட் 8501 ஜாவா கடலில் விழுந்து மூழ்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அனைவரும் உயிர் இழந்தனர். அதில் 70 பேரின் உடல்கள் தான் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. விமானத்தின் கருப்பு பெட்டிகள் உள்ளிட்ட சில பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில்…
புதிய பிரதம நீதியரசராக சிறிபவன் சத்தியப்பிரமாணம்
புதிய பிரதம நீதியரசராக கே.சிறிபவன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
வரிகொடுத்து தேய்ந்த காலம் முடிவுக்கு வந்துள்ளது ; விலை குறைப்பினால் உடலும் உள்ளமும் குளிர்கிறது
பட்ஜட்: மனந்திறந்து மக்கள் கருத்து அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத் திட்டம் தொடர்பில் நாடுமுழு வதும் மக்கள் பெரும் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர். சகல மக்களும் நன்மை பயக்கும் வரவு செலவுத் திட்ட மாக இது இருப்பதோடு, குடும்பத்தரிசிகளின் உள்ளத்தை பூரிப்படையச் செய்துள்ள தாக கருத்துக் கூறினர். இலங்கையின் வர லாற்றில் இதுபோன்ற திருப்திதரும் பட்ஜட் எதுவும் ஒரு போதும் சமர்ப்பிக்கப் படவில்லை என்று கூறியவர்கள், புதிய அரசு தங்களை உள்ளங்குளிர வைத்துள்ளதாகவும் அவர்கள் வெளிப் படுத்தினர். ஹட்டன்,…
றிஷாத் பதியுதீன் மற்றும் அமீர் அலி ஆகியோருக்கு வாழச்சேனையில் மக்கள் வரவேற்பு (photos)
காமிலா பேகம் இன்று 2015/01/30 வெள்ளிக்கிழமை வாழைச்சேனை, நாவலடி தொகுதி மக்களினால் வீடமைப்பு மற்றும் சமூர்த்தி பிரதியமைச்சர் அமீர் அலிக்கும் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் வரவேற்பு வைபவம் ஒன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் பெரும்பாலான மக்கள் கலந்து கொண்டு இரு அமைச்சர்களையும் அமோகமாக வரவேற்றதுடன் பல மஹஜர்களையும் கையளித்தனர். இந்நிகழ்வில் உரையாற்றிய அமீர் அலி – “வறிய மக்கள் அனைவருக்கும் சமூர்த்தி வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், இனிமேல் இப்பகுதி வாழ் மக்களுக்கு இராணுவ கெடுபிடிகள்…
வீட்டின் வெளியே கொட்டி கிடந்த பனிக்கட்டியை அகற்றாத ஜான்கெர்ரிக்கு அபராதம்
அமெரிக்காவில் தற்போது கடும் பனிப்புயல் வீசுகிறது. இதனால் பல பகுதிகள் பனி மூடிக் கிடக்கின்றன. பாஸ்டன் நகரம் இதில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 2 அடி உயரத்துக்கு பனி படர்ந்து உள்ளது. தெருக்களிலும், ரோடுகளிலும் கொட்டி கிடக்கும் பனியை அகற்றி போக்குவரத்துக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரியின் வீடு பாஸ்டன் நகரில் பீகான் மனு பகுதியில் பிங்க்னீ தெருவில் உள்ளது. அங்கு அவரது வீட்டின் முன்பு அதிக அளவில் பனி கொட்டிக்கிடந்தது. அதை…
10,000 பொலிஸாரின் இடமாற்றம் மே வரை ஒத்திவைப்பு
10,000 பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் இடமாற்றம் மே மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. எதிர்வரும் முதலாம் திகதி முதல் குறித்த 10,000 பொலிஸாரும் இடமாற்றம் செய்யப்படவள்ளதாக அறிவித்த நிலையிலேயே மே வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மருதானை ஜூம்ஆப் பள்ளியில் சுதந்திர தின இஸ்லாமிய சமய நிகழ்வு
ஏ.எஸ்.எம்.ஜாவித் நாட்டின் 67ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்லாமிய சமய நிகழ்வு எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி புதன்கிழமை காலை 6.30 மணிக்கு மருதானை ஜூம்ஆப் பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் மற்றும் தபால் திணைக்கள அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இதில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாயமான MH370 விமானம் விபத்தில் சிக்கியதாக மலேசிய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
2014 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் திகதி நடுவானில் மாயமான MH370 விமானம் விபத்தில் சிக்கியதாகவும் இதில் எவரும் உயிர் தப்பவில்லை எனவும் மலேசிய அரசு இன்று வியாழக்கிழமை அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. பல மாதங்களாக மிகப் பெரியளவில் தெற்கு இந்தியக் கடலில் மேற்கொள்ளப் பட்ட பாரிய தேடலுக்குப் பின்னரும் இன்னமும் விமானத்தின் கதி என்னவென்று அறியப் படாத நிலையில் மலேசிய அரசு இப்பிரகடனத்தை மேற்கொண்டுள்ளது. மேலும் இதன் மூலம் பலியாகி உள்ளனர் என உறுதிப்…
மஹிந்தரின் சூழ்ச்சித் திட்டங்கள் தொடர்பிலான விசேட விவாதம் பெப்ரவரி 10 இல்
ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் வகுக்கப்பட்டதாகக் கூறப்படும் சூழ்ச்சித் திட்டங்கள் தொடர்பிலான விசேட விவாதம் ஒன்று பெப்ரவரி 10 ஆம் திகதி நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 7 ஆம் திகதி பட்ஜெட் மீதான வாக்கெடுப்பு முடிவடைந்தப் பின்னர், 10 ஆம் திகதி மேற்படி விடயம் பற்றி விவாதிப்பதற்கு விசேட நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது.
உங்களுக்குத் தேவையான வகையில் தீர்ப்புகளை அளிப்பேன்; மைத்திரியிடம் கெஞ்சிய மொஹான் பீரிஸ்!
மைத்திரியிடம் கெஞ்சிய மொஹான் பீரிஸ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், தன்னைத் தொடர்ந்தும் பிரதம நீதியரசராகச் செயற்பட அனுமதிக்குமாறு மொஹான் பீரிஸ் கெஞ்சியதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் காலையில் மொஹான் பீரிஸ் தன்னிடம் தொலைபேசியில் பேசியதாக, அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தகவல் வெளியிட்டார். தன்னை தொடர்ந்தும் பிரதம நீதியரசராக இருக்க அனுமதிக்கும்படியும், அவ்வாறு செய்தால், உங்களுக்குத் தேவையான வகையில் தீர்ப்புகளை அளிப்பேன் என்றும் மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு ஜனாதிபதி…
