Main News
இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க கிடைத்தமை வரலாற்று சிறப்புமிக்க சந்தர்ப்பம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அரசியலமைப்புச் சட்டத்தின் 19வது திருத்தச் சட்டம் மீதான விவாதத்தை இன்று நாடாளுமன்றத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். இந்த வரலாற்று சிறப்புமிக்க திருத்தச் சட்டத்தை செவ்வாய் கிழமை நிறைவேற்ற எதிர்பார்த்துள்ளோம். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதீத அதிகாரங்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்த்தது. 1999 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக்…
ஞானசாரவை குற்றவாளி கூண்டில் ஏறும்படி நீதவான் கடுமையான உத்தரவு
கொழும்பு, கொம்பனி வீதி நிப்போன் ஹோட்டலினுள் அத்துமீறி நுழைந்து ஊடக மாநாடொன்றுக்கு ஊறு விளைவித்தமை மற்றும் புனித குர்ஆனை அவமதித்தமை தொடர்பில் பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கங்கொடத்தே ஞானசார தேரர் உட்பட்ட ஐந்து பிக்குகளுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிவான் பிரியந்த லியனகே இன்று (27) இவ் உத்தரவினைப் பிறப்பித்தார். வழக்கு விசாரணகள் எதிர்வரும் ஜூன் மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இன்றைய வழக்கின் போது வழமையாக குற்றவாளி கூண்டில்…
19ம் சீர்திருத்தம் நிறைவேற்றப்படுகின்ற போது மகிந்த ராஜபக்ஸ இழப்பவை
–துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்- 19ம் சீர்திருத்தம் நிறைவேற்றப்படுகின்ற போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் இன்னுமொரு தடவை ஜனாதிபதித் தேர்தலிற்கு போட்டி இட முடியாது போவதுடன் நிறைவேற்று அதிகாரத்தினை ஒழிக்கும் நோக்கில் ஜனாதிபதி மீது கேள்வி எழுப்பலாம் என்ற நிலை கொண்டுவரப்படுவதன் காரணமாக இலங்கை ஜனாதிபதி மீது குற்றச் சாட்டுகளை முன் வைத்து நீதி மன்றம் செல்ல முடியுமாக இருக்கும். இவ் இரு காரணிகளும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு மிகவும் சவாலானதும்,ஆபத்தானதாகவும் இருப்பதால், இவ்…
இலங்கையிலிருந்து வெளியேறிய ஊடகவியலாளர்களை, நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை
வெள்ளை வான் கடத்தல்களுக்கு பயந்து நேபாளத்திற்கு சென்ற ஊடகவியலாளர்களை எதிர்வரும் வாரத்தில் நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க எழுப்பி கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய ஊடகவியலாளர்களை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை நல்லாட்சி மேற்கொள்ளாதா என அனுர குமார திஸாநாயக்க வினவியுள்ளார். அதற்கு பதலளிக்கும்…
அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களின் மறைவுக்கு அமைச்சர் றிஷாத் பதியுதீன் அனுதாபம்
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பதிவாளரும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சின் முன்னாள் செயலாளரும், கல்முனை ஸாஹிறாவின் முன்னாள் அதிபரும் பிரபல எழுத்தாளரும், பன்னூலாசிரியரும், கல்விமானும், ஆய்வாளருமான அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்கள் (74) இன்று (27.04.2015) காலமானார்கள். அன்னார் காலமானதை கேள்வியுற்ற அமைச்சர் றிஷாத் பதியுதீன் தனது அனுதாப செய்தியினை தெரிவித்துள்ளார். இலக்கியம், கலை, கல்வி, கலாசாரம் முதலிய பல துறைகளில் புத்தகங்களையும், ஆக்கங்களையும் வெளியிட்ட அன்னார், அண்மையில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரதான நூலகத்திற்கு தனது சேகரிப்புக்களை கையளித்திருந்தமை…
நாட்டுக்குத் தேவையான மொத்த குளோரினையும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை!
நாட்டுக்குத் தேவையான மொத்த குளோரினையும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நாட்டின் முன்னணியிலுள்ள கைத்தொழில் விநியோகஸ்தர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இது நாட்டின் நீரின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உயர்த்தவும் வழிவகுக்கின்றது. குளோரின் விநியோகஸ்தர்களின் கருத்தின்படி: நாட்டில் முன்னிலையிலுள்ள இவ்வர்த்தகத்தை சர்வதேச தராதரத்துக்கு உயர்த்த முடியும். வடமாகாணத்தில் அமையப்பற்றுள்ள பரந்தன் இரசாயண தொழிற்சாலை (Paranthan Chemical Company) 1985ல் தனது செயற்பாடுகளை முற்றாக இழந்தமையால் நாட்டுக்குத் தேவையான இரசாயணங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது நாங்கள் இத்தொழிற்சாலையை மீள…
சந்திரிக்காவும் ஆர்ப்பாட்டத்தில் குதிப்பு
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை நிறைவேற்றுமாறு வலியுறுத்தி கோட்டையில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் பங்கேற்றுள்ளார். TM
கடவுச்சீட்டில் கைவிரல் அடையாளம்; சட்டம் வருகிறது
கடவுச்சீட்டில், அதன் உரிமையாளரது கைவிரல் அடையாளத்தைப் பதிவதை கட்டாயமாக்கும் சட்டமூலமொன்று, இன்று திங்கட்கிழமை (27), நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதற்கமைய, கடவுச்சீட்டொன்றுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரி அல்லது கடவுச்சீட்டை புதுப்பிக்க விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரியானவர், தனது கைவிரல் அடையாளத்தை குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திடம் வழங்க வேண்டும் என்பது இந்த சட்டத்தின் மூலம் வலியுறுத்தப்படுகிறது. சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து கூட்டமைப்பின் நிலையான மற்றும் காலவரையறையின்றிய திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேபாளிற்கு சென்றுள்ள இலங்கை இராணும் – பிரதமர் ரணில்
இலங்கை இராணுவத்தினர், நேபாளத்துக்கு நிவாரண உதவிகளை மேற்கொள்வதற்கு சென்றுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எங்களுடைய இராணுவம், வேறு நாடொன்றுக்கு நிவாரண உதவிகளை மேற்கொள்வதற்கு சென்றிருக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் சுட்டிக்காட்டினார். இதற்கு முன்னர் அமைதி காக்கும் படைக்கு, ஐ.நா.வின் ஊடாகவே எமது படையினர் இணைந்துகொள்ளப்பட்டனர். இராணுவத்தினரை வேறு நாடுகளுக்கு சேவைக்கு அனுப்பும் போது நாடாளுமன்றத்துக்கு தெளிவுப்படுத்துவது உலக சம்பிரதாயமாகும் என்றும் அவர், நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார். இலங்கை படையினர், நிவாரண நடவடிக்கையை…
நேபாளத்திற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற விமானத்தில் இயந்திரக் கோளாறு
நேபாளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற இலங்கை விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன்படி குறித்த விமானம் தற்போது காத்மண்டு விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கும் நோக்குடன் நேற்று காலை 05.20க்கு குறித்த விமானம் இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றது. இதில் இராணுவ வீரர்கள் 44 பேர் மற்றும் வைத்தியர்கள் உள்ளிட்டோர் பயணித்தனர். அத்துடன் குறித்த விமானம் நேற்று இரவே நாடு திரும்புவதாக இருந்த நிலையில்…
19வது திருத்தச் சட்டம் அதிகூடிய விருப்புவாக்குகளால் நிறைவேற்றப்படும் : பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி
அரசாங்கத்தின் 19வது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்திலே அதிகூடிய விருப்புவாக்குகளால் நிறைவேற்றப்படும் என்று சமுர்த்தி வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். அரசாங்கத்தின் நூறு நாள் விஷேட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சமுர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் வீட்டுக்கு வீடு கிராமத்திற்கு கிராமம் என்ற தொனிப் பொருளில் கிராமங்களை மேம்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தில் இன்று (26) செம்மண்னோடை மௌலானா குறுக்கு வீதியில் அமைந்துள்ள வடிகானுக்கு மூடியிடும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்…
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நடாத்தும் மாபெரும் பரிசுப் போட்டிகள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது 20ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு தேசிய ரீதியில் மாபெரும் பரிசுப் போட்டிகளை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. தமிழ் மொழி மூலம் நடைபெறும் இப்போட்டிகள் பாடசாலை மாணவர்கள், அரபுக் கல்லூரிகள், திறந்த போட்டியாளர்கள் மற்றும் மீடியா போரம் அங்கத்தவர்கள் என பல பிரிவுகளாக நடாத்தப்படுகின்றன. போட்டியில் கலந்துகொள்ள விரும்புவர்கள் தங்களுடைய ஆக்கங்களை Sri Lanka Muslim Media Forum, K.G. 7, Elwitigala Flats, Elwitigala Mawatha, Colombo 08 எனும் முகவரிக்கு…
