Main News
‘நாட்டில் மீண்டும் இனவாதத்தை கட்டவிழ்த்துவிட, எதிர்பார்க்கும் பைத்தியம் பிடித்த தரப்பினர்’
சிறுபான்மை இனங்களை அடையாளப்படுத்தும் பகுதிகள் நீக்கப்பட்ட தேசியக் கொடியை பயன்படுத்தி அண்மையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நாட்டில் மீண்டும் இனவாதத்தை கட்டவிழ்த்துவிட எதிர்பார்க்கும் பைத்தியம் பிடித்த தரப்பினராகவே இருக்கலாம் என வீடமைப்பு மற்றும் சமூர்த்தி இராஜங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். முப்பது வருடக்கால யுத்தத்தின் பின்னர் எமது நாட்டில் மூவின மக்களும் சுதந்திரமாக வாழ்ந்திடும் இத்தருணத்தில் மீண்டும் சில இனவாத சக்திகளை பயன்படுத்தி மீண்டும் இனவாத செயற்பாடுகளை மேற்கொள்ள…
இனவாதத்தை முறியடிக்க வேண்டும், சமூக வலைத்தளங்களின் செயற்பாடுகள் குறித்து கவலை
இனவாதங்களைத் தூண்டும் வகையிலான செய்திகளையும் கட்டுரைகளையும் சமூக வலைத்தளங்கள் வெளியிட்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். சமூக வலைத்தளங்கள் மக்கள் மத்தியில் குறிப்பாக இளம் சந்ததியினர் மத்தியில் பிரபல்யம் பெற்று வரும் நிலையில் இனவாதங்களை தூண்டும் வகையில் செய்திகளை பிரசுரிப்பது பாதிப்பை ஏற்படுத்துமென்றும் அவர் கூறினார். அரசாங்க ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்களை நேற்று சந்தித்த ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது. அரசாங்க ஊடகங்களின் செயற்பாடுகள் தொடர்பில்…
நாடாளுமன்றில் நடைபெற்ற போராட்டத்தின் போது மதுபானம் அருந்தப்பட்டதா
நாடாளுமன்றில் நடைபெற்ற போராட்டத்தின் போது மதுபானம் அருந்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது. அண்மையில் நாடாளுமன்றிற்குள் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்க்ள தொடர் போராட்டமொன்றை நடத்தியிருந்தனர். அன்றைய இரவை அவையிலேயே கழித்து இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டமையை எதிர்த்தே இந்த போராட்டம் நடத்தப்பட்டது. கடந்த 20ம் திகதி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டிருந்து. குறித்த தினத்தில் மதுபானம் வெளியிலிருந்து தருவிக்கப்பட்டு அருந்தப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது…
முன்னாள் அமைச்சர்கள் உட்பட 18 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை
நீதிமன்றை உத்தரவினை மீறிய 18 பேரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்களான டலஸ் அழப்பெரும காமினி லொக்குகே விமல் வீரவன்ச பந்துல குணவர்தன மற்றும் முரத்தட்டுவே ஆனந்த தேரர் உள்ளிட்ட 18 பேரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் எதிரில் போராட்டங்களை நடத்தக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அதனை மீறிச் செயற்பட்டதாக குறித்த 18 பேர் மீதும் பொலிஸார் முறைப்பாடு செய்துள்ளனர்.
மக்களின் அங்கீகாரமற்ற எந்த தீர்வினையும் எமது கட்சி ஆதரிக்கப் போவதில்லை – றிஷாத் பதியுதீன்
அரசாங்கம் கொண்டுவரவுள்ள தேர்தல் திருத்தம் தொடர்பில் உடனடியாக ஆதரவு வழங்குவது தொடர்பில் எமது கட்சி ஆழமாக ஆராய்ந்துவருவதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் 100 நாட்களுக்குள் இதனை நடை முறைப்படுத்த அளுத்தம் கொடுக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்பதை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தெளிவாக கூறியுள்ளதாகவும் கூறினார். . அரசாங்கத்தில் அங்கத்துவம் கொண்டுள்ள சிறுபான்மை கட்சிகள் இந்த துரித தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் முழுமையான ஆதரவை வழங்கியுள்ளதாக வெளியான செய்தி…
மாற்றியமைக்கப்பட்ட தேசிய கொடியை நானும் ஏந்தியிருந்தேன்: உதய கம்மன்பில
மாற்றியமைக்கப்பட்ட தேசிய கொடியை நானும் ஏந்தியிருந்தேன் எனவும் ஆணைக்குழுவிற்கு எதிரில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாற்றியமைக்கப்பட்ட தேசிய கொடிகளை சிலர் கொண்டு வந்திருந்தனர். அவற்றில் சிறிய கொடிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. அத்துடன் ஊடகங்கள் வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டு பொது இடம் ஒன்றில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வோர் பற்றி அதன் ஏற்பாட்டாளர்களுக்கு முழுமையான பொறுப்பை ஏற்க முடியாது. எவ்வாறாயினும், நாட்டின் தேசிய அடையாளமான தேசியக் கொடி தனது தலைமையில் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மாற்றியமைக்கப்பட்டு…
சிறைச்சாலைகளில் நடத்திய திடீர் சோதனைகளில் 73 கையடக்க தொலைபேசிகள்- 54 சிம்கள் கைப்பற்றப்பட்டன
இவ்வருடம் சிறைச்சாலைகளை திடீர் சோதனைகள் நடத்தியதில் இதுவரை 73 கையடக்க தொலைபேசிகளும் 54 சிம் அட்டைகளும் கைப்பற்றப்பட்டன என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பிரதான சிறைச்சாலைகளில் பயன்படுத்தப்படும் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் போதை பொருட்களை கைப்பற்றும் நோக்கில் இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டது. நீதிமன்ற அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் அனைத்து சிறைச்சாலைகளிலும் இத்திடீர் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டது. ஜனவரி மாதம் தொடக்கம் ஏப்ரல் மாதம் வரையில் நாட்டின் பிரதான சிறைச்சாலைகளில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் 73…
முதல் மூன்று மாதங்களில் பேராதனை பூங்காவின் வருமானம் 160 மில். ரூபா
கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் மார்ச் மாதம் வரையில் பேராதனை தாவரவியல் பூங்காவின் வருமானம் 160 மில்லியன் ரூபாய் என அதன் பணிப்பாளர் கலாநிதி பெரமுனேகம அரசாங்க உத்தியோகபூர்வ இணையதளத்திற்கு தெரிவித்தார். இவ்வருமானம் எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் 600 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் வெளிநாட்டு உல்லாசப்பிரயாணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதே இதற்கு காரணம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஐ.நாவுக்கான இலங்கையின் வதிவிட பிரதிநிதி – ஐநாவின் செயலாளர் நாயகம் சந்திப்பு!
ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் புதிய வதிவிட பிரதிநிதி ரொஹான் பெரேரா ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான்கீமூனை நேற்று (22) ஐக்கிய நாடுகள் தலைமைச் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான்கீமூனுக்கு சான்றுகள் பாராட்டுக்கள் தெரிவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ரொஹான் பெரேரா தனது வாழ்த்துக்களையும் சான்றுகளையும் நாட்டின் சார்பாக தெரிவித்துள்ளார். பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வின் பின்னர் செயலாளர் நாயகத்துடனான கலந்துரையாடலின் போது பொதுவான பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. ஒன்று க்கு…
ஜனாதிபதி மைத்ரி செய்ததை ஒபாமாவால் கூட செய்ய முடியாது; ஜோன் கெரி ஆச்சரியம்
அமெரிக்காவின் இராஜாங்க செயலாளரான ஜோன் கெரி, இலங்கையில் 100நாட்கள் வேலைத்திட்டதில் நடைமுறைப்படுத்தப்பட்டவை கண்டு ஆச்சரியப்பட்டதாகவும், அமெரிக்க ஜனாதிபதியால் கூட இவ்வளவு குறுகிய காலத்தில் அதிகளவான உறுதிமொழிகளை நிறைவேற்ற முடியாது என்று குறிப்பிட்டதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். ஜோன் கெரி, இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை 100நாட்கள் வேலைத்திட்டம் பற்றி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டபோது ஒரு பக்கத்திலேயே அறிக்கையை எதிர்பார்ததாகவும், ஆனால் 3 பக்கங்களில் அறிக்கை கிடைக்கபெற்றதை அடுத்து ஆச்சர்யம் அடைந்ததாக கடந்த சில வாரங்களுக்கு முன்…
ரஷ்யா பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கை மாணவன் காயம்
ரஷ்ய பல்கலைக்கழகமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் இலங்கை மாணவர் ஒருவர் காயமடைந்துள்ளார். 43 மாணவர்கள் கல்வி கற்கும் பல்கலைக்கழகத்திலேயெ இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பல்கலைக்கழகத்தில் மலேசிய மற்றும் இலங்கை மாணவர்கள் கல்வி கற்று வந்துள்ளனர். தென் மேற்கு மொஸ்கோவிலுள்ள பிரோகோவ் மருத்துவ கல்லூரியில் இடம்பெற்ற இத்தீவிபத்தில் எரிகாயங்களுக்கு உள்ளான இலங்கை மாணவர் மொஸ்கோவில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பல்கலைக்கழகத்தில் 5 இலங்கை மாணவர்கள் கல்வி கற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
”அப்புறப் படுத்துங்கள் ஆயுத களஞ்சியசாலையை” ஜனாதிபதி அதிரடி உத்தரவு
க்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம் நடத்தி வந்த ஆயுத களஞ்சியத்தை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலிருந்து அப்புறப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோனுக்கு உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோட்டாபய ராஜபக்ஷ பணியாற்றிய காலகட்டத்தில், பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஆயுத களஞ்சியம் ஒன்றை வைத்திருக்க, ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியிருந்தார். இந்த ஆயுத களஞ்சியம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறலாம் என்பதால், அதனை அங்கிருந்து…
