Headlines

வீதி அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளரிடம் விசாரணை

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் வி .ஈ.எஸ். வீரசிங்கஹவிடம் நிதி மோசடி விசாரணை பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். வீதி அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலேயே இவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஜ. தே. க. தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று பிரதமராக இருப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் அதன் தமைமையுமே காரணமாகும்

-இர்ஷாத் ரஹ்மதுல்லாஹ்- ஜக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று பிரதமராக இருப்பதற்கு எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் அதனது தேசிய தலைமைத்துவமுமே காரணமாகும்.ஆனால் இன்று சில வங்குரோத்து நிலை அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் பிரபல்யம் ஆக வேண்டும் என்பதற்காக செல்லாத தீர்மானங்களை எடுப்பது நகைப்புக்கிடமானது என மன்னார் நகர சபையின் உறுப்பினர் நிலாமுதீன் நகுசீன் தெரிவித்தார். வன்னி மாவட்டத்தின் அரசியல் நிலவரம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேலும் அவர் கூறியதாவது –…

Read More

திருக்குர்ஆனை உண்மைப்படுத்திய உணர்ச்சிப்பூர்வ சம்பவம்….!!

நேபாள் தலைநகர் காத்மாண்டுவில் ஏக இறைவனை வணங்கும் இறையில்லமான பள்ளிவாசல் கம்பீரமாய் காட்சியளித்து வருகிறது. இந்த பள்ளிவாசலில் தினசரி ஐவேளை தொழுகை உட்பட ஜும்ஆவும் நடைபெற்று வருகிறது. திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்…. எந்த ஒரு சமுதாயமும் தனக்குரிய தவணை வந்து விட்டால் அவர்கள் ஒருகணம் கூட பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள் (திருக்குர்ஆன் 7:34) நமக்கு உரிய நேரம் வந்து விட்டால் ஒரு நொடி கூட பிந்தவும் மாட்டோம், முந்தவும் மாட்டோம், நம்முடைய நேரம் வந்து விட்டால்…

Read More

வக்பு சட்டத்தில் திருத்தம் ஆராய குழு நியமனம்

நாட்டில் அமு­லி­லுள்ள வக்பு சட்­டத்தில் சில திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன. முஸ்லிம் சமய விவ­கார அமைச்சும் முஸ்லிம் சமய கலா­சார பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும் வக்பு சபையும் வக்பு ட்ரிபி­யு­னலும் வக்பு சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­வ­தற்கு இணங்­கி­யுள்­ளன. இச்­சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­வ­தற்கு முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால் அமைச்சர் எம்.எச். ஏ. ஹலீன் சட்­டத்­த­ர­ணிகள் அடங்­கிய குழு­வொன்­றினை நிய­மித்­துள்ளார். வக்பு சட்­டத்தின் கீழேயே வக்பு ட்ரிபி­யுனல் (வக்பு நீதி­மன்றம் ) இயங்கி வரு­கி­றது. வக்பு சட்­டத்தின் கீழ் பள்­ளி­வா­சல்கள்…

Read More

கைத்துப்பாக்கியுடன் ஜனாதிபதியை நெருங்கிய இராணுவ கோப்ரலிடம் தீவிர விசாரணை

அம்­பாந்­தோட்டை, அங்­கு­ண­கொ­ல­பெ­லஸ்ஸ பிர­தே­சத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இடுப்பில் கைத்­துப்­பாக்­கி­யுடன் ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சே­னவை நெருங்­கிய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­ப­க்ஷவின் மெய்ப்பாது­கா­வலர் என கூறப்­படும் இரா­ணுவ கொமாண்டோ படை­ய­ணியின் கோப்ரல் தர வீரர் தொடர்பில் விரி­வான விசா­ரணை ஒன்று குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோனின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள இந்த விசா­ர­ணை­களில் குறித்த இரா­ணுவ கொமாண்டோ படை­ய­ணியின் கோப்ரல் தர வீர­ரிடம் தீவிர விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வாக்கு மூலம் ஒன்று…

Read More

முடிந்தால் அடுத்த தேர்தலில் மஹிந்த போட்டியிட்டு வென்று காட்டட்டும் : ரில்வின் சில்வா

அர­சியல் ஆசை இருந்­தாலும் மக்­களின் ஆத­ரவு இன்றி மஹிந்த ராஜபக் ஷவினால் தேர்தலில் போட்­டி­யிட்டு வெற்­றி­பெற முடி­யாது. கடந்த ஆட்­சியின் ஊழல் மோச­டி­களை மக்கள் நன்கு அறிந்­துள்­ளனர் என மக்கள் விடு­தலை முன்­னணி தெரி­வித்­தது. முடிந்தால் அடுத்த தேர்­தலில் மஹிந்த போட்­டி­யிட்டு வென்று காட்­டட்டும் என்­றும் அக்கட்சி சவால் விடுத்­தது. தான் தேர்­தலில் போட்­டி­யிட்டால் வெற்றி பெறுவேன் என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ வெளி­நாட்டு ஊடகம் ஒன்­றிற்கு தெரி­வித்­துள்ள நிலையில் இது தொடர்பில் ஜே.வி.பி.யின்…

Read More

விளையாட்டுத் துப்பாக்கி மேயர் கைது

ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெனாண்டோ கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் பொலிஸ் கைதில் இருந்த ஒருவரை தாக்க முயற்சி செய்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை சென்ற ஐக்கிய தேசியக் கட்சியினரை நோக்கி துப்பாக்கியுடன் ஓடுவந்து பின் அது விளையாட்டுத் துப்பாக்கி எனக் கூறியவர் இந்த ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெனாண்டோ என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

விசாரணை நடப்பதால் சிலருக்கு வயிற்றோட்டம் – ரணில்

இலங்கையில் கடந்த 10 வருடங்களில் இடம்பெற்றுள்ள பெரும் ஊழல், மோசடிகள் தொடர்பில் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா முதலான நாடுகளிடம் பயிற்சி பெற்ற விசேட குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதால் சிலருக்கு வயிற்றோட்டம் ஏற்பட்டுள்ளது” இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் தெரிவித்தார். நாட்டில் மீண்டும் ஊழல், மோசடிகள் இடம்பெறாத வகையில் விசேட விசாரணைப் பிரிவொன்றை இந்த வருடத்துக்குள் நிறுவவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்று செவ்வாய்க் கிழமை காலை 9.30 மணிக்கு பிரதி சபா நாயகர் சந்திம…

Read More

நீதி கிடைக்கும்: ஹிருணிகா

தனது தந்தையான பாரத லக்ஷமன் பிரேமச்சந்திரவின் படுகொலை விவகார வழக்கில் நீதி கிடைக்கும். இப்போது எமது அரசாங்கமே ஆட்சியில் உள்ளது. அதனால், நீதி கிடைப்பது நிச்சம் என்று மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர கூறினார். பாரத லக்ஷமன் பிரேமச்சந்திர உட்பட நால்வரின் படுகொலை குறித்த வழக்கு விசாரணைக்காக மன்றில் ஆஜராகியிருந்த ஹிருணிகா பிரேமசந்திர, வழக்கு விசாரணையின் பின்னர் நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியே வந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய…

Read More

நான் குற்றமற்றவன்: துமிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகர் பாரத லக்ஷமன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரின் கொலை வழக்கில் தான் குற்றமற்றவர் என நீதிமன்றத்தில் அறிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தெரிவித்தார். குறித்த வழக்கு விசாரணைக்காக மன்றில் ஆஜராகியிருந்த துமிந்த சில்வா எம்.பி, வழக்கு விசாரணையின் பின்னர் நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியே வந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ‘எனக்கு எதிராக சேறு பூசுவதால் நான் அஞ்சப்போவதில்லை….

Read More

இழுபறி நிலையை முடிவுக்குக் கொண்டுவர ஜனாதிபதியும், சபாநாயகரும் பங்களித்தார்கள் – ரணில்

நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவாகும் எவரும் தமது அதிகாரத்தை கைவிடுவதில்லை. அந்த கருத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாற்றியுள்ளார். பாராளுமன்றத்தை பலப்படுத்துவதற்காக வரலாற்று முக்கியமான நடவடிக்கையை அவர் எடுத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 19ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்ட பின்னர் 5 பேர் இந்த பாராளுமன்றத்தில் இருக்கின்றனர். இதில் சம்பந்தன் எம்.பி தவிர நாம் மூவர் நிறைவேற்று…

Read More

19ஆவது திருத்தச்சட்டமூலம் சற்றுமுன்னர் நிறைவேற்றப்பட்டது

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டமூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர்  நிறைவேற்றப்பட்டது. இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பின்போது இதற்கு ஆதரவாக 215 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டன. ஒரு உறுப்பினர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. எதிராக வாக்களித்தவர் சரத்வீரசேகர எம்பியாக இருக்கலாம் என்று பாராளுமன்ற வட்டார தகவல்கள் தெரிவிப்பதாக எமது கொழும்பு செய்தியாளர் குறிபிட்டார். இன்றைய வாக்கெடுப்பின் போது ஜானக பண்டார, ஜகத் பாலசூரிய, எல்லாவல மேதானந்த தேரர், கெஹலிய ரம்புக்வெல்ல, பசில் ராஜபக்‌ஷ, விநாயகமூர்த்தி, பிரேமலால் ஜயசேகர ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள்…

Read More