Main News
இலங்கைக்கு வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவினர் வந்திருப்பதால், கள்ளர் கூட்டம் அதிர்ந்து போயுள்ளது – ரணில்
நிதி மோசடி தொடர்பில் வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் சிலருக்கு வயிற்றோட்டம் ஆரம்பித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் இன்று காலை 9 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. 19வது திருத்தச் சட்டமூலம் நேற்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டதோடு, சட்டமூலம் மீதான இரண்டாம் நாள் விவாதம் தஇன்று நடைபெறுகின்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியின்போது இடம்பெற்ற நிதி மோசடி மற்றும் வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள…
சவூதி அரேபியாவில் நடந்த வாகன விபத்தில் ஓட்டமாவடி இளைஞன் பலி
அப்துல்லாஹ் சவூதி அரேபியா றியாத் நகரில் (27) திங்களன்று இடம்பெற்ற நடந்த வாகன விபத்தில் மட்டக்களப்பு ஓட்டமாவடியைச் சேர்ந்த புஹாரி பாஸில் (வயது 28) எனும் இளைஞர் மரணமடைந்து விட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாகவே இவர் தொழில் வாய்ப்பின் நிமித்தம் இலங்கையிலிருந்து சவூதி அரேபியா றியாத் நகரிலுள்ள கம்பனி ஒன்றுக்கு சென்றதாகவும் அவ்வேளையில் இந்த வாகன விபத்தில் சிக்கி மரணமடைந்து விட்டதாகவும் உறவினர்கள் மேலும் தெரிவித்தனர். சடலத்தை சவூதி அரேபியாவின் றியாத் நகரிலேயே…
மேல் மாகாண சபை உறுப்பினா் பைருஸ் தலைமையில்: பாராளுமன்றத்தை நோக்கி மக்கள் படையெடுப்பு
அஹமட் இர்ஸாட் நாட்டிலுள்ள அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்காகவும், தேர்தல் முறை மாற்றத்தினை அமுல்படுத்துவதற்காகவும் நேற்று திங்கட்கிழமை (27.04.2015) பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட பத்தொன்பதாவது திருத்தச் சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பினைக் காட்டுவதினை தவிர்த்து நாட்டில் அமைதியானதும் சுதந்திரமானதுமான ஆட்சியினை நிலை நாட்டும் பொருட்டு சமர்பிக்கப்பட்ட பத்தொன்பதாவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு ஒத்துளைப்பு வழங்குமாறு எதிர்க்கட்சிகளை வேண்டி மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளரும், மேல் மாகாண சபை உறுப்பினறுமான பைருஸ் தலைமையில் 5000க்கும் அதிகமான…
விவசாயிகளின் நெல்லினை கொள்வனவு செய்ய தேவையான நிதியினை ஒதுக்கீடு செய்யுமாறு அமைச்சர் றிஷாத் கோரிக்கை
இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ் மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகளின் நெல்லினை கொள்வனவு செய்ய தேவையான நிதியினை ஒதுக்கீடு செய்யுமாறு வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன்நிதி அமைச்சர் ரவி கருநாயக்கவிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார். வன்னி மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடை இடம் பெறுவதாகவும்,விவசாயிகள் அறுவடை செய்த நெல் கொள்வனவுக்கு போதுமான நிதி தம்மை வந்தடையவில்லையென அதிகாரிகள் தெரிவித்துள்ளது தொடர்பில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் நிதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 இலட்சம் கிலோவும்,வவுனியா…
இக்கட்டான சூழ்நிலையிலும் ஒரு முஸ்லிமை நம்பினார் ரணில்…
கடந்த ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் அப்போதய ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயளாலர் திஸ்ஸ அத்தநாயக்க மஹிந்த அரசில் இணைந்து ஐக்கிய தேசிய கட்சிக்கு பெரும் நெருக்கடியை கொடுத்திருந்தார். அப்போது உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அமைச்சர் கபீர் ஹசீம் அவர்களை ரனில் கட்சி பொது செயளாலராக நியமித்திருந்தார்.இதற்காக அவர் எவரிடமும் அனுமதியையோ அலோசனையோ கேட்கவில்லை இவ்விடயம் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்து . பலம் பெரும் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயளாலர் பதவிக்கு…
19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மீதான வாக்கெடுப்பு இன்று
19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இன்று (28) பிற்பகல் நடைபெறவுள்ளது.இந்த திருத்தச் சட்டமூலம் ஜனாதிபதியால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து விவாதம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இன்று (28) முற்பகல் 9 மணிக்கு மீண்டும் விவாதம் தொடரவுள்ளதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். விவாதம் நிறைவுபெற்றதும் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பும், குழுநிலை விவாதம் மீதான வாக்கெடுப்பும், நடத்தப்படவுள்ளதாக பிரதி சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார் குழுநிலை விவாதம் நிறைவில் நடத்தப்படுகின்ற வாக்கெடுப்பு ஒரு சில வாக்குகள் வித்தியாசத்தில்…
காத்தன்குடி மீடியா போரத் தலைவர் டீன் பைரூஸ் நன்றி தெரிவிப்பு
எம்.ஐ.அப்துல் நஸார் கடந்த 2015.04.25ஆந் திகதி நடைபெற்ற காத்தன்குடி மீடியா போரத்தின் பொதுச்சபைக் கூட்டத்தில் நடப்பாண்டின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர் A.L.டீன் பைரூஸ் அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார் காத்தன்குடி மீடியா போரத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஊடகங்கள் வாயிலாகவும்,முகநுால் மூலமும், குறுஞ் செய்திகள் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் மற்றும் நேரடியாகவும் வாழ்த்துக்களை தெரிவித்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார். எனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு அமானிதமாகும். அதனை மிகப் பொறுப்புடன்…
சுதந்திரக் கட்சியில் சீட் கிடையாது என ரணில் கூற, சிரித்துக்கொண்டிருந்த மைத்திரி
கலவரமடையாதீர்கள். இம்முறை உங்களுக்கு சுதந்திரக் கட்சியில் சீட் கிடையாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பந்துல குணவர்தனவை பார்த்துக் கூறினார். பாராளுமன்றத்தில் இன்று 27.04.2015 திங்கட்கிழமை அமர்வின்போது 19 ஆவது திருத்தச்சட்ட மூலம் மீதான விவாதத்தில் ஊடக விவகாரம் தொடர்பில் சர்ச்சை எழுந்தபோது ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார். இதன்போது முன்னாள் அமைச்சர்களான காமினி லொக்குகே மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகிய இருவரும் அமைதியாக அமர்ந்துகொண்டனர். இந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் கூறியதைக்…
அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் மே 02 இல் இலங்கைக்கு விஜயம்!
அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி எதிர்வரும் மே மாதம் 02 ஆம் திகதி சனிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தகவல் வௌியிட்டுள்ளது. வருகை தரவுள்ள இராஜாங்க அமைச்சர் நாட்டின் ஜனாதிபதி , பிரதமர், வௌிவிவகார அமைச்சர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலருடன் கலந்துரையாடலில் ஈடுபடுவார். அத்துடன் களனி விகாரைக்கு சென்று பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்வதுடன் லக்ஸ்மன் கதிர்காமரின் சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய தொடர்புகள்…
எனது மெய்ப் பாதுகாவலரிடம் இருந்தது துப்பாக்கி அல்ல.. அது தண்ணி போத்தல்
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தவுள்ளனர். அம்பாந்தோட்டையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக் கூட்டமொன்றில் இராணுவ கோப்ரல் ஒருவர் கைத்துப்பாக்கி ஒன்றை மறைத்து வைத்துக் கொண்டு ஜனாதிபதியின் அருகில் சென்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது. இந்த இராணுவ கோப்ரல் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக பொலிஸாரே கடமையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். எனினும், எவ்வாறு நாமல் ராஜபக்ச மட்டும் இராணுவ கமாண்டோ படைப்பிரிவின் கோப்ரலை…
பதவியிலிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால, தனது அதிகாரத்தை குறைத்துக் கொள்கின்றமை போற்றத்தக்க செயல்..!
அனேகமான ஜனாதிபதிகள் தங்களை மேலும் வலுப்படுத்திக் கொண்டார்களே தவிர, அதிகாரத்தை குறைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஆனால் வரலாற்று பதிவை ஏற்படுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அதிகாரத்தை குறைத்துக் கொள்கின்றமை போற்றத்தக்க செயல் எனவும் இவ்வாறான தலைவர்கள் இலகுவில் உருவாக மாட்டார்கள் என்றும் இன்று (27) பாராளுமன்றில் உரையாற்றிய அவர் குறிப்பிட்டார். இனி உயர் நீதிமன்றின் உத்தரவுக்கு அமையவே ஜனாதிபதி மேலதிக அதிகாரங்கள் கிடைக்கும்…
நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியை புகழ்ந்த ஜே.வி.பி
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி இந்த நாட்டுக்கு பொருத்தமானதல்ல என்று ஜேவிபி தெரிவித்துள்ளது இதனை கொண்டு வந்த ஐக்கிய தேசியகட்சியே 40 வருடங்களின் பின்னர் அதனை நீக்கவேண்டும் என்று கோருவது வரவேற்கக்த்தக்கது என்று ஜேவிபியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை பாஸிஸ கொள்கைக்கு இட்டுசென்றுள்ளதாக குறிப்பிட்டார் அனுபவ ரீதியாக இதனை உணர்ந்தநிலையிலேயே மக்கள் அதனை விமர்சிக்க ஆரம்பித்ததாகவும் ஹேரத் தெரிவித்தார் இந்தநிலையில் நிறைவேற்று…
