Main News
கொழும்பு நோக்கி வந்த விமானம் ஏன் திரும்பிச் சென்றது தெரியுமா?
நேற்று இரவு கோலாலம்பூரில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட மலேஷியன் விமானம் மீண்டும் அந்த நாட்டுக்கே திரும்பிச் சென்று தரையிறக்கப்பட்டது. மலேஷிய விமான சேவைக்குச் சொந்தமான எம்.எச். 176 என்ற குறித்த விமானம் ஏன் இவ்வாறு திரும்பிச் சென்றது என்பதற்கான காரணம் தற்போது வௌியாகியுள்ளது. விமானத்தில் இருந்த பயணி ஒருவர் குடித்து விட்டு குழப்பம் விளைவித்தமையினாலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மலேஷியன் ஏயார்லயின்ஸ் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த விமானம் இன்று காலை 10.06க்கு நாட்டை…
நேபாளத்துக்கு உதவ மற்றுமொரு விமானம் நாளை பயணம்
நேபாளத்தில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவதற்காக இலங்கையில் இருந்து மற்றுமொரு விமானம் அந்த நாட்டுக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளது. நாளை காலை 09.00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து குறித்த விமானம் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. நேபாளத்திற்கு உதவிக் கரம் நீட்டும் நோக்கோடு இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்லும் நான்காவது விமானம் இதுவாகும். இதில் 18 டன் நிறையுடைய உதவிப் பொருட்கள் ஏற்றிச் செல்லப்படவுள்ளதுடன், இந்தப் பொருட்கள் இன்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்…
காணாமல் போதல் தொடர்பான ஐ.நா குழு இலங்கை வருகிறது
பலாத்காரமாக-விருப்பமின்றி காணாமல் போகச் செய்தல் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. ஓகஸ்ட் மாதம் 3ம் திகதி தொடக்கம் 12ம் திகதிவரை இக்குழு இலங்கையில் விஜயம் செய்யவுள்ளது. பலாத்காரமாக-விருப்பமின்றி காணாமல் போகச் செய்தல் தொடர்பான பேச்சுவார்த்தை ஜெனீவாவில் 6ம் திகதி ஆரம்பித்து 15ம் திகதி நிறைவுபெறவுள்ள நிலையில், ஐவர் அடங்கிய குழு இலங்கை வரவுள்ளது. 30 நாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற காணாமல் போதல் தொடர்பான 400 முறைப்பாடுகள் குறித்து இந்த பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அனைத்து கட்சி தலைவர்களுடனும் இன்று ஜனாதிபதி மைத்திரி சந்திப்பு
தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை அனைத்து கட்சித்தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். இப்பேச்சுவார்த்தைகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐ.தே.க. மற்றும் ஜாதிக ஹெல உறுமய உட்பட பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். ஜனாதிபதியுடனான இன்றைய அரசியல் கட்சிகள் நடத்தும் பேச்சுவார்த்தைகளின் பெறுபேறுகள் மற்றும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிறுபான்மை கட்சிகள் உட்பட சிறிய கட்சிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கமைய தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பாக தயாரிக்கப்படும் யோசனைகள் எதிர்வரும் 13ஆம் திகதி…
மன்னார் மறிச்சுக்கட்டியில் இடம் பெற்ற மீள்குடியேற்றம் சட்ட ரீதிக்கு உட்பட்டது -மன்னார் அரசாங்க அதிபர்
மன்னார் மறிச்சுக்கட்டியில் இடம் பெற்று மீள்குடியேற்றம் சட்ட ரீதிக்கு உட்படுத்தப்பட்டதொன்று என்றும் இதில் எந்தவொரு வெளிமாவட்ட மக்களும் மீள்குடியேற்றப்படவில்லை என்பதை மன்னார் அரசாங்க அதிபர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தியுள்ள நிலையிலும் இன்னும் சிங்கள ஊடகங்கள் அதனை இருட்டடிப்பு செய்து ஒரு பக்கசார்பான செய்தியினையே ஒளிபரப்பு செய்வது கண்டனத்துக்குரிய செயலென பல அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளது. வடக்கு மக்களின் பாதுகாப்பு அமைப்பு,மன்னார் மாவட்ட சமத்துவத்துவத்துக்கும்,இன ஒற்றுமைக்குமான ஜனநாயக மையம்,மன்னார் முஸ்லிம் பிரஜைகள் ஒன்றியம்,முசலி மண் பாதுகாப்பு ஒன்றியம்.வவுனியா…
முஸ்லிம் மீள் குடியேற்றத்தை தூக்கிப்பிடிக்கும் இனவாதிகள் ஏன் வவுனியா சிங்கள குடியேற்றத்தை பேசவில்லை- அமைச்சர் றிஷாத் அதிரடி பேட்டி (Audio)
இலங்கையின் வடக்கே வில்பத்து பாதுகாக்கப்பட்ட சரணாலயத்தை அண்டிய பிரதேசத்தில் காடுகள் அழிக்கப்பட்டு குடியிருப்புகள் அமைக்கப்படுவதை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார். வடக்கில் மக்களை மீள்குடியேற்றம் செய்யும் வேலைத்திட்டங்களின்போது சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகள் குறித்து கவனம் செலுத்தப்படாமல், ஆயிரக் கணக்கான ஏக்கர் பரப்புள்ள பாதுகாக்கப்பட்ட காட்டுப் பிரதேசங்கள் அழிக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை வெளியிட்டிருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியிருந்தது. வடக்கு-இலங்கையில் காடுகள் அழிக்கப்படுவதாக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், கடந்த மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திலும் தற்போதைய…
விண்டோஸ் 10 க்கு அடுத்து எதுவும் வெளிவராது: காரணம் என்ன?
மைக்ரோசாப்ட்டின் இயங்குதளத்தில்(OS) விண்டோஸ் 10 தான் கடைசி என்ற அறிவிப்பு, டெக்(Technology) உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படியென்றால் இனி மைக்ரோசாப்ட் இயங்குதளங்களை உருவாக்காதா? என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் பதிலளித்துள்ளது. சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ‘இக்னைட்’ (Ignite) தொழில் நுட்ப மாநாடு சிகாகோவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஜெர்ரி நிக்சன், “தற்போது நாங்கள் விண்டோஸ் 10-ஐ வெளியிடுகிறோம். இதுதான் மைக்ரோசாப்ட் இயங்குதளங்களில் கடைசி…
இதுதான் விதியின் விளையாட்டு… அனுரகுமார திஸாநாயக்க கூறும் இன்டரெஸ்டிங் ஸ்டோரி
அன்று பிரதமர் பதவி கேட்டு மைத்திரி மஹிந்தவை சுற்றிவந்தார். இன்று மஹிந்த பிரதமர் பதவி கேட்டு மைத்திரியை சுற்றி வருகிறார். இதுதான் விதியின் விளையாட்டு என பரிகாசம் செய்கிறார் ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திஸாநாயக்க. ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப்பிரேரணை மஹிந்த அணி யின் மக்களை ஏமாற்றும் பித்தலாட்டம் என்றும் அவர் தெரிவித்தார். பெல்வத்தையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே ஜே.வி.பி. தலைவரும் எம்பியுமான அநுர திஸாநாயக இவ்வாறு தெரவித்தார். இங்கு அவர் மேலும்…
தாதியர் பயிற்சி பாடசாலைகளை பல்கலைக் கழகங்களாக மாற்ற நடவடிக்கை: ஜனாதிபதி
தாதியர் பயிற்சி பாடசாலைகளை, தாதியர் பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உலகில் வேறு எந்தவொரு நாட்டிலும் இல்லாதளவில் இலவசக் கல்வியையும் தரமான சுகாதார சேவையையும் ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் அனைத்து வகையிலும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி கூறியுள்ளார். அரச சேவைகள் ஐக்கிய தாதியர் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இன்று முற்பகல் நடைபெற்ற சர்வதேச தாதியர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
எபோலா நோய் லைபீரியாவில் இருந்து முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு
வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லைபீரியாவில் இருந்து எபோலா நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது என்று உலக சுதாதார மையம் அறிவித்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியா, சியாரா லியோன், லைபீரியா போன்ற நாடுகளில் எபோலா என்ற உயிர்க்கொல்லி வைரஸ் நோய் வேகமாக பரவியது. தொற்று நோயான இந்த எபோலாவால் ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிந்தனர். அவர்களுக்கு உதவும் வகையில் ஐ.நா. சார்பில் சென்ற டாக்டர் மற்றும் உதவியாளர்களையும் இந்த நோய் விட்டு வைக்கவில்லை. இதனால் இந்த நோய்…
தீய சக்திகளின் பின்னணியில் சில ஊடகங்கள் முஸ்லிம் சமூகத்தின் மீது குறி வைத்து தாக்குகின்றது
வில்பத்துக் காட்டுப் பகுதியை தான் அழிப்பதாகவும், அங்கே பாகிஸ்தான் மற்றும் ஏனைய மாவட்ட மக்களை கொண்டு வந்து குடியேற்றுவதாகவும் தன் மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் அப்பட்டமான பொய் என்று அமைச்சர் ரிசாத் தெரிவித்தார். காழ்ப்புணர்வு கொண்ட இனவாத தீய சக்திகளின் பின்னணியில் சில ஊடகங்கள் முஸ்லிம் சமூகத்தின் மீது குறி வைத்து தாக்குவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். ஊடகங்கள் காட்டும் ஒளி வடிவத்தின் நம்பகத் தன்மை தொடர்பில் எமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 24 ஆண்டுகாலம் காடுகள் மண்டிக்…
வில்பத்துப் போலிப்பிரசாரம் புஷ்வாணமானது
K.C.M.அஸ்ஹர் (முசலியூர்) வில்பத்து தேசியவனத்தை அமைச்சர் றிசாத்பதியுதீன் அழித்து சட்டவிரோத முஸ்லிம் கிராமத்தை அமைத்து வருகிறார் என்ற பலசேனவின் போலிப்பிரசாரம் அம்பலமானது.இச்செய்தி அண்மைக்காலமாக அதிகம் பேசுபொருளாக இருந்துவந்தது. இதற்குரிய சரியான பதிலை ஊடகங்களில் வழங்கியும் உரியவர்கள் புரிவதாக் தெரியவில்லை.இவ்வ்pடயத்தை வளரவிடாமல் தடுக்க உரியவிசாரணை;க் குழுவை அனுப்பி வைக்குமாறு மேதகு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடப்பட்டதற்கு இணங்க இன்று விசாரணைக் குழு களத்திற்குச் சென்று உண்மை நிலையைக் கண்டுகொண்டது. அரச அதிபர் தேசப்பிரியவும்,முசலி;ப்பிரதேச செயலாளர் திரு.கேதீஸ்வரனும் வில்பத்துக் காணியில் எவ்வித…
